Friday, December 26, 2014
Monday, December 22, 2014
Just A Second Please
நாடகத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு வசனத்தை மட்டும் இங்கே எழுதிவிட்டு இத்துடன் இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்
வாசு கடவுள் இல்லை கடவுள் இல்லை
கடவுள் என்ன வாசு கடவுள்ன்னு ஒரு வார்த்தை இருக்குngkire ஆனா இல்லைன்னு ஒரு வார்த்தை சேர்த்து இல்லைன்கிறியே முரன்படா இல்லை??
கடவுள் இருக்கு....... ஆனா இல்லை......சரி விடுப்பா நான் உன்கூட ARGUMENT க்கு வரலை
எனக்கும் அதுக்கு நேரமில்லை வாசு ஆனா எனக்கு இந்த கடவுள் இல்லைன்னு சொல்லற வரிகள் ரொம்ப பிடிக்கும் ஏன்னா கடவுள் இல்லை கடவுள் இல்லைன்னு பல தடவை சொல்லு எல்லா இடத்துலேயும் எழுதி வை படிக்கறவன் கேக்கறவன் யோசிப்பான் எதை இல்லைன்னு சொல்லறாங்கன்னு கடவுள் இல்லை அப்படின்னா கடவுள்ன்னா என்ன? யாருன்னு யோசிப்பான் அப்போ எல்லோரும் என்னை பத்தி அதிகமா யோசிப்பாங்க..... நினைப்பான்ங்க....இல்லையா எனக்கு அது போதும் வாசு
-----------------------------------------------------------------------------------------
நன்றி
எனக்கும் அதுக்கு நேரமில்லை வாசு ஆனா எனக்கு இந்த கடவுள் இல்லைன்னு சொல்லற வரிகள் ரொம்ப பிடிக்கும் ஏன்னா கடவுள் இல்லை கடவுள் இல்லைன்னு பல தடவை சொல்லு எல்லா இடத்துலேயும் எழுதி வை படிக்கறவன் கேக்கறவன் யோசிப்பான் எதை இல்லைன்னு சொல்லறாங்கன்னு கடவுள் இல்லை அப்படின்னா கடவுள்ன்னா என்ன? யாருன்னு யோசிப்பான் அப்போ எல்லோரும் என்னை பத்தி அதிகமா யோசிப்பாங்க..... நினைப்பான்ங்க....இல்லையா எனக்கு அது போதும் வாசு
-----------------------------------------------------------------------------------------
நன்றி
Saturday, December 20, 2014
Part of scene from My play JUST A SECOND PLEASE (CONTD)
என்னுடைய JUST A SECOND PLEASE நாடகத்திலிருந்து ஒரு காட்சியின் சில வசனங்களை பதிவிட்டிருந்தேன்
அதற்கு கொஞ்சம் நல்லாவே COMMENTS வந்ததால் அந்த காட்சிலிருந்து மேலும் கொஞ்சம் வசனங்கள் இதோ
இதற்கு மேல் அந்த நாடகத்தை முழுவதுமாக தொடரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை
---------------------------------------------------------------------------------------------------
கடவுள்:::: IT IS A WAR AGAINST ONE RATCHASA AND ANOTHER RATCHASA என்னுடைய தேவை எங்கே இருக்கு?
வாசு OH GOD!!
கூப்பிட்டயா?
ஆமாம் கூபிட்டா உடனே வந்திடரமாதிரிதான்
நான் வந்தப்புறம் தானே வாசு நீ கூபிட்டே
போதும் நல்லா பேசற அப எப்பதான் நீ வருவே
AGAIN A STUPID QUESTON நான் உன் முன்னாலேயே நிக்கறேன்
நீ கீதையிலே சொன்ன மாதிரி எப்ப வருவேன்னு கேட்டேன்
வருவேன் வாசு இன்னும் அக்கிரமங்கள் பெருகணும் பலகோடி அக்கிரமரங்ககிட்ட்ட மாட்டிகிட்டு சில லட்சம் அப்பாவி ஜனங்க அவஸ்தை படும் போது கண்டிப்பா வருவேன்
இப்ப மாத்திரம் என்ன வாழுதாம் எங்க பாத்தாலும் லஞ்சம், ஊழல் கொலை கொள்ளை.... அரசியல்வாதிகிட்டே லஞ்சம் கொடுத்தாதானே காரியம் நடக்குது
வாசு நீ BLACKMARKET லே ticket வாங்கி சினிமா பாத்ததில்லை?? CORPORATION TAXஐ குறைக்க லஞ்சம் நீ கொடுத்ததில்லை?? office லே லீவ் போட்டுட்டு ஒரு டாக்டர் கிட்ட பொய் மெடிக்கல் certificate வாங்கி கொடுத்ததில்லை??? உன்கிட்ட எல்லாமே 1௦௦% INCOME TAXக்கு கணக்கு காட்டின பணம்தானா??
போதும் போதும் மானத்தை வாங்காதே
இல்லை வாசு புரிய வைக்கிறேன் நான் வர வேண்டிய அவசியம் வரும்போது இதெல்லாம் இருக்காது இல்லை இதெல்லாம் பயன் தராது அப்பா லட்சக்கணக்கான உண்மையான அப்பாவி மக்கள் எல்லாத்தையும் இழந்திட்டு நிராயுதபாணியா என்னை நோக்கி கையை தூக்கும் போது நான் கண்டிப்பா வருவேன் அப்பா IT WILL BE..........
A WAR AGAINST RAATCHASAS AND DEVAS AM I RIGHT?
பரவயில்லையே நான் சொல்ல நினைச்சதை INTERPRETERS இல்லாமே புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டியே
INTERPRETERS ஆ
ஆமாம் சாமியார்கள் மனோததுவ நிபுணர்கள் கதாகலட்சேபம் உபன்யாசம் பண்ணறவங்க ETC ETC......
அப்போ அதுவரைக்கும் நாங்க காத்துகிட்டு இருக்கணும் அப்படித்தானே
ஏன் காத்திருக்கணும் நாந்தான் உன்கூடவே இருக்கேன் உன்கூவே வரேன் சாப்பிடறேன் தூங்கறேன் உனக்கு எல்லாம் தெரியும் ஆனா புரிஞ்சிக்க மாட்டேங்கறையே
என்ன சொல்லறே ?
சொல்லறேன் ஒரு உதாரணத்தோட சொல்லறேன் 2௦௦8 வருஷம் டிசம்பர மாசம் 6ம்தேதி என்ன நடந்தது நியாபகம் இருக்கா
அட போப்பா எனக்கு நேத்து நடந்ததே இப்ப எல்லாம் ஞாபகம் இருக்கறதில்லை
அன்னிக்கு என்ன நடந்ததுன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு
ம் ம் வரலையே
சரி நானே சொல்லறேன் சரியான்னு பாரு அன்னிக்கு உங்க சித்தி பெங்களுருலிருந்து வராங்க அவங்களை அழைச்சிகிட்டு வரதுக்கு நீ காலையிலே நாலு மணிக்கு STATION க்கு போகணும் அன்னிக்கு எதோ ஆட்டோ வெல்லாம் STRIKE
அட ஆமாம்
ஸ்டேஷன் போக பத்து நிமிஷம் தான் இருக்கு உன் SCOOTER ஐ ஸ்டார்ட் பண்ண என்னாச்சு
START ஆச்சு
ஆச்சு தெருக்கோடியிலே பொய் நின்னுதா??
ஆமாயா கழுதை மாதிரி உதைச்சேன் 2௦ முறை
நேரம் ஆகி கிட்டே இருக்கு அன்னிக்குன்னு பாத்து TRAIN வேற ரைட் டைம்
SURPRISING ஆ இல்லை?/
அப்ப என்ன நடந்தது??
என் FRIEND குமார் ரொம்ப நாள் பாக்கதவன் MOTORCYCLE லே வந்தான் என்னை CENTRAL லே டிராப் பண்ணுன்னேன் அவனும் என்னை DROP பண்ணான்.... அதுலே என்ன இப்ப
அதுலே ஒண்ணுமில்லை அவன்கூட போகும் பொது என்னமோ சொன்னியே என்ன அது?
என்ன சொன்னேன் ம்.... தெய்வம் மாதிரி வந்தேடான்னேன் .......அதுலே என்ன இப்ப (எதோ பொறி தட்டியவனாக) OH GOD
அதேதான் வாசு இந்தமாதிரித்தான் நான் பலபேரோட வாழ்க்கையிலே வந்திகிட்டுதான் இருக்கேன் பணம் தேவைப்படும்போது பணத்தோட வியாதி குணமாக டாக்டர் ரூபத்துலே ரோடை கிராஸ் பண்ணும்போது ஒரு TRAFFIC போலீசா என் அவசரத்த்துக்கு சிகரட் கிடைக்காத போது பீடி ரூபத்துலே வந்துகிட்டுதான் இருக்கேன் எல்லோரும் தெய்வம் மாதிரி ன்னு சொல்லுவாங்க ஆனா புரிஞ்சிக்க மாட்டங்க தெய்வம் மனுஷ ரூபிணா
அதுக்கு அர்த்தம் இப்பதான் புரியுது அவன் தன் ரூபத்துலே வரணும்னு அவசியமில்லை எந்த ரூபத்துலே வேணாலும் எப்ப வேணாலும் வருவார்னு ஆபத் பாந்தவா அனாத ரட்சகா வாமனா வாசுதேவ திர்விக்கிரமா........
போதும் போதும் கேட்டு கேட்டு அலுத்துபோச்சு....
Monday, December 15, 2014

ESPECIALLY FOR THE NEW YEAR
THREE IN ONE PACK
SPECIAL OFFER
AN IDEAL GIFT FOR CORPORATES
AND TO YOUR RELATIVES AND FRIENDS
PEOPLE WHO LIVE IN ABROAD CAN GIFT
TO PARENTS AND GRAND PARENTS.
PEOPLE INDIA CAN GIFT TO THEIR RELATIVES IN ABROAD
SPECIAL GIFT WRAPPING
AND NO DELIVERY CHARGES
IN CHENNAI CITY
SPECIAL GIFT WRAPPING
AND NO DELIVERY CHARGES
IN CHENNAI CITY
Saturday, December 13, 2014
என்னுடைய
JUST A SECOND PLEASE என்ற நாடகத்தில் முதல் காட்சியின் சுருக்கம் இது
நமது கத நாயகன் வாசு தன் வாழ்க்கையில் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்க வில்லை
என்று புலம்பிக்கொண்டிருக்கிறான்
இதானால் தன தோல்விக்கெல்லாம் காரணம் கடவுள் தானென்று அவரை நிநதனா ஸ்துதி செய்து கொண்டிருக்கிறான் கடவுளாலேயே அவன் திட்டுக்கள் பொறுக்க முடியாமல் அவன் முன் தோன்றி தான் காரணமல்ல என்று விளக்க எண்ணுகிறார்
இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள் வாசு முன் தோன்றுகிறார் அதுவும் எப்படி??
இப்படி...........
கடவுள் உள்ளே வர அவர் ஒரு ஜீன்ஸ் PANT ம் ஒரு T SHIRT ம் அணிந்து இருக்கிறார்
வாசு: வாங்க நீங்க
கடவுள் நான் யாருன்னு உனக்குக் தெரியாது ஆனா நீ யாருன்னு எனக்கு தெரியும் வாசு அலைஸ் வாசுதேவன் நீதானே நான் யாருன்னு SHORT ஆ ஸ்வீட்டா சொல்லிடறேன்.நான்... நீ தினமும் பூஜை பண்ணறியே SORRY பூஜ பண்ணறா மாதிரி திட்டரேயே அந்த கடவுள் THE GOD
நீ கடவுளா? இப்ப காலிங் பெல் அடிச்சு உள்ளே வந்து என்கிட்ட பேசிகிட்டு இருக்கற நீ கடவுளா??
ஆமாம் வாசு ஓ உனக்கெல்லாம் கடவுள் வரார்ன்னா வெடி வெடிக்கணும் பூமி பிளக்கணும் மின்னல் மின்னனும் இடி இடிக்கணும் புயல் வீசணும் புகை நடுவிலே நான் வரணும் அப்பத்தான் நம்பவே இல்லை அதெல்லாம் பொய் வாசு நான் சாதாரண மனுஷனா வந்தா இப்படித்தான் காலிங் பெல் அடிச்சு நீ கதவை திறந்த உடனேவருவேன்
அப்படின்னா இந்த டிரஸ் இந்த PANT SHIRT
ஓ நீயெல்லாம் என்னை கிரிடத்தோட சங்கு சக்கரத்தோட 12 கை களோட பாத்தே பழகிட்டே இல்லை வாசு இப்ப நான் போட்டுகிட்டு இருக்கற DRESS இது உங்க ஊர்லே தற்போதைய பேஷன் ஆனா எங்க உலகத்துலே இது 5௦௦௦ வருஷங்களுக்கு முன்னாடி இருந்த FASHION அதாவது நீங்க சிக்கி முக்கி கல்லை வச்சு நெருப்பு வரவழிச்ச காலம்
WHAT DO YOU MEAN?
I MEAN WHAT I SAID
YOU TALK ENGLISH TOO
இதான்யா உங்ககிட்ட PROBLEM என்னை கடவுள்ன்னு சொல்லுவிங்க எல்லாம் தெரிஞ்சவன் எங்கும் இருப்பவன்ன்னு சொல்லுவிங்க ஆனா என்னை உங்க சினிமா டிராமாவிலே english தெரியாத காமெடியன்னா ஆக்கிடுவிங்க இதுதான் நீங்க உண்மையிலேயே கடவுளை நம்பறதா? வாசு நான் உருவாக்கின மனுஷன் பஞ்சை கண்டுபிடிக்கிறான் நைலான் கண்டு பிடிக்கிறான் JEANS போடறான் ஆனா என்னை மட்டும் இன்னும் BARE BODY ஆ பஞ்சகச்சத்தோட கோவில்லே நிறுத்தி வச்சிருக்கிங்களே இது நியாயமா வாசு
எல்லாம் நல்லத்தான் பேசறே ஆனா உன்னை கடவுள்ளுன்னு எப்படி நம்பறதுன்னு தான் தெரியலை ஆனா ஒரு மாதிரி த்ரில்லிங்கா இருக்குய்யா உன் கூடவே இருக்கணும் உன் கூடவே பேசணும்னு தோணுது இருந்தாலும் கடவுள்ன்னா உன்னை எப்படி நம்பறது நான் நம்பற மாதிரி ஒரு மழையை வரவழைச்சு காட்டேன்
வாசு நான் கடவுள்ளுன்னு இப நம்ப முடியலன்னா பரவாயில்லை போக போக புரிஞ்சிப்ப இப்போதைக்கு என்னை கடவுள்ன்னு வச்சுக்கயேன் புரியலை? கணக்குலே விடை தெரியாதபோது ANSWER=X ன்னு ஆரம்பிப்போமே அது மாதிரி இப்ப கடவுள்=X ன்னு ஆரம்பி விடை தெரியும்போது X=GOD ன்னு நியே புரிஞ்சிப்பே
இபேல்லாம் தான் உன்னை காணறதே இல்லியே அக்கிரமம் நடக்கும்ம் போதெல்லாம் வந்து நல்லவங்களை காப்பாத்துவேன்னு சொன்னியே
எப்ப
உனக்கே மறந்து போச்சா பகவத் கீதை
ஆமாம் சொன்னேன் அப்ப நல்லவங்க நிறைய இருந்தாங்க அவங்களை காப்பத்த வேண்டிய அவசியமும் எனக்கு இருந்தது
இப்ப நல்லவங்களே இல்லை ங்கிறியா
இருக்காங்க வாசு THEY ARE ONLY MINORITY இப்ப நடக்கற அக்கிரமங்கள் அநியாயங்கள் எல்லாமே ஒரு அக்கிரமத்துக்கும் இன்னொரு அக்கிரமத்துக்கும் நடக்கற போராட்டமாகவே தான் இருக்கு ஒரு அநியாயத்துக்கும் இன்னொரு அநியாயத்துக்கும் ஏற்படற சண்டையாகவே தான் இருக்கு என் தேவை எங்க இருக்கு It is war against one ratchasa and another ratchasa
(Part of a scene from my play staged in 2003)
இதானால் தன தோல்விக்கெல்லாம் காரணம் கடவுள் தானென்று அவரை நிநதனா ஸ்துதி செய்து கொண்டிருக்கிறான் கடவுளாலேயே அவன் திட்டுக்கள் பொறுக்க முடியாமல் அவன் முன் தோன்றி தான் காரணமல்ல என்று விளக்க எண்ணுகிறார்
இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள் வாசு முன் தோன்றுகிறார் அதுவும் எப்படி??
இப்படி...........
கடவுள் உள்ளே வர அவர் ஒரு ஜீன்ஸ் PANT ம் ஒரு T SHIRT ம் அணிந்து இருக்கிறார்
வாசு: வாங்க நீங்க
கடவுள் நான் யாருன்னு உனக்குக் தெரியாது ஆனா நீ யாருன்னு எனக்கு தெரியும் வாசு அலைஸ் வாசுதேவன் நீதானே நான் யாருன்னு SHORT ஆ ஸ்வீட்டா சொல்லிடறேன்.நான்... நீ தினமும் பூஜை பண்ணறியே SORRY பூஜ பண்ணறா மாதிரி திட்டரேயே அந்த கடவுள் THE GOD
நீ கடவுளா? இப்ப காலிங் பெல் அடிச்சு உள்ளே வந்து என்கிட்ட பேசிகிட்டு இருக்கற நீ கடவுளா??
ஆமாம் வாசு ஓ உனக்கெல்லாம் கடவுள் வரார்ன்னா வெடி வெடிக்கணும் பூமி பிளக்கணும் மின்னல் மின்னனும் இடி இடிக்கணும் புயல் வீசணும் புகை நடுவிலே நான் வரணும் அப்பத்தான் நம்பவே இல்லை அதெல்லாம் பொய் வாசு நான் சாதாரண மனுஷனா வந்தா இப்படித்தான் காலிங் பெல் அடிச்சு நீ கதவை திறந்த உடனேவருவேன்
அப்படின்னா இந்த டிரஸ் இந்த PANT SHIRT
ஓ நீயெல்லாம் என்னை கிரிடத்தோட சங்கு சக்கரத்தோட 12 கை களோட பாத்தே பழகிட்டே இல்லை வாசு இப்ப நான் போட்டுகிட்டு இருக்கற DRESS இது உங்க ஊர்லே தற்போதைய பேஷன் ஆனா எங்க உலகத்துலே இது 5௦௦௦ வருஷங்களுக்கு முன்னாடி இருந்த FASHION அதாவது நீங்க சிக்கி முக்கி கல்லை வச்சு நெருப்பு வரவழிச்ச காலம்
WHAT DO YOU MEAN?
I MEAN WHAT I SAID
YOU TALK ENGLISH TOO
இதான்யா உங்ககிட்ட PROBLEM என்னை கடவுள்ன்னு சொல்லுவிங்க எல்லாம் தெரிஞ்சவன் எங்கும் இருப்பவன்ன்னு சொல்லுவிங்க ஆனா என்னை உங்க சினிமா டிராமாவிலே english தெரியாத காமெடியன்னா ஆக்கிடுவிங்க இதுதான் நீங்க உண்மையிலேயே கடவுளை நம்பறதா? வாசு நான் உருவாக்கின மனுஷன் பஞ்சை கண்டுபிடிக்கிறான் நைலான் கண்டு பிடிக்கிறான் JEANS போடறான் ஆனா என்னை மட்டும் இன்னும் BARE BODY ஆ பஞ்சகச்சத்தோட கோவில்லே நிறுத்தி வச்சிருக்கிங்களே இது நியாயமா வாசு
எல்லாம் நல்லத்தான் பேசறே ஆனா உன்னை கடவுள்ளுன்னு எப்படி நம்பறதுன்னு தான் தெரியலை ஆனா ஒரு மாதிரி த்ரில்லிங்கா இருக்குய்யா உன் கூடவே இருக்கணும் உன் கூடவே பேசணும்னு தோணுது இருந்தாலும் கடவுள்ன்னா உன்னை எப்படி நம்பறது நான் நம்பற மாதிரி ஒரு மழையை வரவழைச்சு காட்டேன்
வாசு நான் கடவுள்ளுன்னு இப நம்ப முடியலன்னா பரவாயில்லை போக போக புரிஞ்சிப்ப இப்போதைக்கு என்னை கடவுள்ன்னு வச்சுக்கயேன் புரியலை? கணக்குலே விடை தெரியாதபோது ANSWER=X ன்னு ஆரம்பிப்போமே அது மாதிரி இப்ப கடவுள்=X ன்னு ஆரம்பி விடை தெரியும்போது X=GOD ன்னு நியே புரிஞ்சிப்பே
இபேல்லாம் தான் உன்னை காணறதே இல்லியே அக்கிரமம் நடக்கும்ம் போதெல்லாம் வந்து நல்லவங்களை காப்பாத்துவேன்னு சொன்னியே
எப்ப
உனக்கே மறந்து போச்சா பகவத் கீதை
ஆமாம் சொன்னேன் அப்ப நல்லவங்க நிறைய இருந்தாங்க அவங்களை காப்பத்த வேண்டிய அவசியமும் எனக்கு இருந்தது
இப்ப நல்லவங்களே இல்லை ங்கிறியா
இருக்காங்க வாசு THEY ARE ONLY MINORITY இப்ப நடக்கற அக்கிரமங்கள் அநியாயங்கள் எல்லாமே ஒரு அக்கிரமத்துக்கும் இன்னொரு அக்கிரமத்துக்கும் நடக்கற போராட்டமாகவே தான் இருக்கு ஒரு அநியாயத்துக்கும் இன்னொரு அநியாயத்துக்கும் ஏற்படற சண்டையாகவே தான் இருக்கு என் தேவை எங்க இருக்கு It is war against one ratchasa and another ratchasa
(Part of a scene from my play staged in 2003)
Tuesday, December 2, 2014
விருதுகள்
நடிப்பபை பற்றி நிறைய பேச வேண்டும் என்பது என் ஆசை விரிவாக எழுதுவதற்கு முன்னால் ஒரு சிறிய பதிவு
நடிப்பு என்பது குரல் வார்த்தை உச்சரிப்பு குரலில் ஏற்ற இறக்கங்கள் என்ற voice modulation முக பாவங்கள் உடல் மொழி போன்றவைகளை உள்ளடக்கியது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே
சமிப காலங்களில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அந்தந்த ஆண்டுகளுக்கான சிறந்த நடிகர் நடிகையரை தேர்வு செய்கிறார்கள்
இவர்களில் பலர் தங்களது சொந்தக்குரலில் பேசுவது கிடையாது இவர்கள் எதோ
வாயசைத்து வைக்க அதற்கு குரல் கொடுத்து இவர்களது நடிப்பிற்கு உயி
கொடுப்பவர்கள் பின்னணி பேசும் dubbing கலைஞர்கள் தான்
யாரோ வசனங்களை உணர்ச்சி புர்வமாக பேசி இவர்கள் நடிப்பை முழுதாக முடித்து வைக்கின்றனர் அப்படி இருக்கும் போது இந்த நடிகர்கள் சிறந்த நடிப்பிற்கான விருதை எப்படி பெற தகுதி பெறுகிறார்கள்
நியாயமாக பார்த்தால்அப்படிப்பட்ட விருதுகளை நடிப்பவர் குரல் கொடுப்பவர் இருவருமாக சமமாக பகிர்ந்து கொள்வதுதானே முறையாகும்?
இருவரும் சேர்ந்து அந்த விருதுகளை பெறுவது தானே நியாயமாகும்?
யாரோ வசனங்களை உணர்ச்சி புர்வமாக பேசி இவர்கள் நடிப்பை முழுதாக முடித்து வைக்கின்றனர் அப்படி இருக்கும் போது இந்த நடிகர்கள் சிறந்த நடிப்பிற்கான விருதை எப்படி பெற தகுதி பெறுகிறார்கள்
நியாயமாக பார்த்தால்அப்படிப்பட்ட விருதுகளை நடிப்பவர் குரல் கொடுப்பவர் இருவருமாக சமமாக பகிர்ந்து கொள்வதுதானே முறையாகும்?
இருவரும் சேர்ந்து அந்த விருதுகளை பெறுவது தானே நியாயமாகும்?
Friday, November 21, 2014
பார்த்திபன்கனவு ஒலிப்புத்தகத்திலிருந்து ஒரு காட்சி
https://soundcloud.com/tags/kalkiyin%20parthiban%20kanavu%20audio%20book
Sunday, November 9, 2014
இரு வீடு ஒரு வாசல் TELEPLAY PART 2
https://www.youtube.com/watch?v=UT8xQh0cA48
பாருங்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை எழுதுங்கள்
https://www.youtube.com/watch?v=UT8xQh0cA48
பாருங்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை எழுதுங்கள்
பார்த்திபன் ஒலிப்புத்தகத்திலிருந்து ஒரு காட்சி
https://soundcloud.com/bombay-kannan-kannan/28-ch-17mp3
கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ஒலிப்புத்தகம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கவும்
Friday, November 7, 2014
பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் (One Sample Chapter)
This is one of the chapters in our Ponniyin Selvan Audio Book
https://soundcloud.com/bombay-kannan-kannan/ponniyin-selvan-part-2-chapter-24
Wednesday, November 5, 2014
My Teleplay Iru veedu oru vaasal based on my stage play staged in 1991 https://www.youtube.com/watch?v=nVCE0qC0FjU
Sunday, November 2, 2014
திரு பாக்கியம் ராமசாமியின் "அப்புசாமியும் ஆப்பிரிக்கா அழகியும்" நாவல் ஒரு Telefilm ஆக நான் தயாரித்து இயக்கினேன் திரு காத்தாடி ராமமுர்த்தி அப்புசாமியகவும் மீரா கிருஷ்ணன் சீதாப்பாட்டியாகவும் நடித்த அந்த TELEFILM ன் இரண்டாவது பகுதி இது முதல் பகுதி முன்பே வெளியிட்டுள்ளேன்
https://www.youtube.com/watch?v=C_POvfnxlmA
கண்டு களியுங்கள் அடுத்த பகுதி விரைவில்
https://www.youtube.com/watch?v=C_POvfnxlmA
கண்டு களியுங்கள் அடுத்த பகுதி விரைவில்
Saturday, October 18, 2014

பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியிட்டு விழா பேச நினைத்ததும் பேச முடியாமல் போனதும் நன்றி நவிலல்
பகுதி மூன்று
அடுத்து மாரப்ப பூபதி
இவரை ஒரு மாலையில் NARAADA GANA SABHA உணவகத்தில் முதன் முதலில் பார்த்தேன்
நான் எதோ ஒலிப்புத்தகம் பற்றி பேசிக்கொண்டிருக்க எதிரில் மசாலா தோசை சாப்பிட்டு கொண்டிருந்தவர் என் பேச்சில் கலந்து கொண்டார்
இவர் எடுத்த சில குறும்படங்களை அடுத்த முறை சரவன பவன் ஹோட்டலில் சந்தித்து கொடுத்தார்
நன்றாக செய்திருந்தார் இவரை பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகத்தில் பங்கு பெற அழைத்தேன்
இவர் குரல் அருமையாக இருந்தததால் ஒரு VOICE டெஸ்ட் எடுத்துவிட்டு இவரை நரசிம்ம பல்லவர் என்றேன்
ஒரு நாள் ரெகார்டிங்கு ம் போனோம் இவரும் குந்தவியும் பேசும் காட்சிதான் நன்றாக நடித்திருந்தார் ஆனால் வேறு சில காரணங்களுக்காக இவர் செய்த நரசிம்ம பல்லவர் வேடத்தை வேறு ஒருவர் செய்ய வேண்டி வந்தது
இவரை இந்த PROJECT லிருந்து விட்டு விட எனக்கு இஷ்டமில்லை ஒரு வித்தியாசமான குரல் வித்தியாசமான உச்சரிப்பு யோசித்தேன்
இவர்தான் மரப்ப பூபதி என தீர்மானித்தேன் அவரும் மிக நிறைவாக வித்தியாசமாக செய்தார்
வித்தியாசமான ஒரு அதிர்வு சிரிப்பு MODULATION etc இந்த ஒலிப்புத்தகத்தில் நிச்சயம் இந்த குரல் யார் என்று விசாரிக்கப்படுவார் தனது அருமையான நடிப்பினால் உங்களை கவரப்போகிறார் திரு LAWRENCE பிரபாகர் அவர்கள் நன்றி திரு LAWRENCE
ஒரு வித்தியாசமான தைரியமான பெண்ண க்ல்குரல் தேவைப்பட்டது வள்ளி வேடத்திற்கு யார் யாரோ முயற்சி செய்தோம்
கடைசியில் ப்பூங்குழலிதான் நினைவிற்கு வந்தாள்
அந்த குரலை மிண்டும் உடனடியாக கொண்டு வரவேண்டாம் என்றுதான் நினைத்தேன்
ஆனால் முடியவில்லை
இவரது வார்த்தைகளை உச்சரிக்கும் அழுத்தமும் குரலும் வள்ளிக்கு மிகப்பொருத்தமாக இருந்ததால் இவர்தான் வள்ளி என்று தீர்மானித்து அழைத்தோம்
இவர் RAILWAY ல் நல்ல பதவியில் இருப்பதால் கொஞ்சம் விடுமுறை கிடைப்பது கடினம் இருந்தும் தனக்கு கிடைத்த் நேரத்தில் வந்திருந்து எந்த இடைஞ்சலும் இல்லாமல் ரெகார்டிங் ஐ முடித்து விட்டு போவார்
ரொம்ப வேகமாக கற்றுக்கொள்வார்
என்ன சிரிக்க சொன்னால் அழ சொன்னால் கொஞ்சம் நேரமாகும் மற்றபடி வள்ளியாகவே வாழ்ந்தார் நன்றி ஸ்ரீவித்யா பத்மநாபான்
இவருடன் பொன்னனாக இணைந்தவர் என் இனிய நண்பர் PT ரமேஷ் ரொம்ப சீனியர் நாடக நடிகர்
இப்பவும் பல நாடகங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஒரு சிறந்த நடிகர் இவரை முதலில் பொன்னியின் செல்வனில் பல சிறிய பாத்திரங்களை செய்ய வைத்திருந்தேன் பொன்னனா விக்கிரமணா என்ற சந்தேகம் வந்தபோது இவரை விட இளைஞர் ஒருவர் அந்த குரலுக்கு பொருத்தமாக இருந்ததால் பொன்னனாக மாறியவர்
இவரும் வள்ளியும் பேசும் இடங்களில் இவரது மென்மையும் வள்ளியின் அதட்டலும் மிக நன்றாக இருந்தது
இன்றும் இவரை பல மேடை நாடகங்களில் நீங்கள் பார்க்கலாம் நன்றி ரமேஷ்
விக்கிரமன்
இது கதாநாயகன் பாத்திரம் காதல் விரம் சோகம் பாசம் எல்லாம் வேண்டும்
நான் ஒருமுறை CENTRAL EXCISE DEPARTMENT ல் ஒரு நாடக போட்டிக்கு JUDGE ஆக போனபோது இவர் ஒரு நாடகத்தை இயக்கியிருந்தார் நல்ல நாடகம் அது
எங்களுக்கெல்லாம் உங்கள் ஒலிப்புத்தகங்களில் வாய்ப்பு உண்ட சார் என்றார் நிச்சயம் உண்டு வாங்கள் என்றேன்
ஒரு முறை வாசித்து காண்பித்தார்
விக்கரமன் பாத்திரம் செய்யுங்கள் என்றேன் இவர் இந்த மாதிரி RECORDING ற்கு புதிது போகப்போக நன்கு புரிந்து கொண்டார்
இவர் நடிக்கு போதெல்லாம் ஒரு மிகப்பிரபலமான நடிகர் நமக்கு நினைவிற்கு வருவார் அது நினைத்து செய்ததில்லை இயற்கையாகவே அவர் MODULATION அப்படி அமைந்து விட்டது
ஒரு நல்ல நடிகருக்கான அறிகுறிகள் இவரிடம் நிறைய உண்டு நன்றி JERRY
இதில் கபால பைரவராக நடிக்க ஒரு வித்தியாசமான குரல் அதும் ஒரு பேய்க்குரல் எல்லோரும் பயப்படும்படியான குரல் தேவைப்பட்டது இரண்டே காட்சிகள்தான் என் இனிய நண்பர் ரமேஷ் இவர் ஒரு சீரியல் நடிகர் மேடை நடிகர் DUBBING ARTISTE என பல குரல் வல்லுநர்
SPOKEN ENGLISH வகுப்பு எடுப்பவர் பிறருக்கு MODULATION சொல்லித்தருபவர்
இவரிடம் ஒரு விண்ணப்பம் வைத்துகொண்டு அழைத்தேன் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார் ஒரே நாள் STUDIO வே அதிர்ந்தது அக்கம் பக்கம் குரல் கேட்டு என்ன வென்றார்கள்
அப்படி இரண்டு காட்சிகளில் அசத்தினார் இவர் யாரென்று சொன்னால் அது ஒரு கூடுதல் தகவல் இவர் எனது பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் ஆழ்வர்கடியானாக வாழ்ந்தவர் நன்றி ரமேஷ்
இந்த புத்தகத்தில் ஒரு பெரிய SUSPENSE ஒன்று உள்ளது அதை இப்போது நான் வெளிப்படுத்த விரும்பவில்லை படித்தவர்களுக்கு தெரியும். இந்த SUSPENSE வெளி வந்து விடக்கூடாதே என்பதற்காக நானும் ஒரு உத்தியை கையாண்டு இருக்கிறேன் அதை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பின்னால் பார்ப்போம்
அடுத்து நரசிம்ம பலவர்
ஒரு கம்பீரமான குரல் ஒரு பாசமான அப்பா எதிர்கால கனவுகளுடன் கூடியா ஒரு கலைஞன் ஒரு வேஷதாரி ஒரு மிகச்சிறந்த அரசன் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அன்பான காதலன் இது கல்கி அவர்களின் சித்தரிப்பு
இதாற்கு பொருத்தமாகக் அமைந்தார் திரு NETHAJI அவர்கள் பல வெவ்வேறு DIMENSION களில் அமைந்த காட்சிகளில் அருமையாக செய்திருந்தார் நன்றி NETHAJI
மற்றவர்களைப் பற்றி அடுத்த பதிவில்
பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியிட்டு விழா பேச நினைத்ததும் பேச முடியாமல் போனதும் நன்றி நவிலல்
பகுதி இரண்டு
இப்போது இதில் நடித்தவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் நான் அவசியம் கூறியே ஆகவேண்டும் யாரிலிருந்து ஆரம்பிப்பதுமேடையாக இருந்தால் வெளிச்சம் இருந்தால் ஒவ்வொருவராக பார்த்து பேசிவிடுவேன்
இங்கே என் முன்னால் இருப்பது ஒரு சிறிய திரை
முதலில் நான் ஆசிர்வாதம் வாங்குவதாக ஆரம்பித்தால் நலம்
எனக்கும் இவருக்கும் முதல் சந்திப்பே ஒரு வெளிவராத படத்தின் படப்பிடிப்பில் காரைக்காலில் அமைந்தது
அப்புறம் இபோதுதான் சந்திக்கின்றேன
பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகத்திற்கு நடிகர்கள் தவை என்றதும் முதல் விண்ணப்பமாக வந்தது இவரிடமிருந்துதான்
என்ன பாக்கியம்
எந்த சின்ன வேடமானாலும் பரவாயில்லை நான் அதில் இருக்க வேண்டுமென்றார்
எந்த திறமையான கலைஞன் இதை சொல்லுவான்?
அதுவும் நான் தயாரிப்பது ஒலிப்புத்தகம்தான் முகம் கூட காட்ட முடியாது
நாவலில் ஒரு வீரக்கிழவன் (வயது >7௦) பாத்திரம் வரும் அருமையான கதாப்பத்திரம் நிறைய வசனங்கள் அந்த வயதுக்கு ஆள் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்
வயதும் தெரிய வேண்டும்
உச்சரிப்பு நடிப்பு இரண்டும் வேண்டும்
வீரமும் இருக்க வேண்டும்
நாவல் படித்தவர்களுக்கு அது புரியும்
தேடிக்கொண்டிருக்கும்போது கல்கி அவர்கள் இதோ இருக்கிறார் என்றார்
அவர்பாத்திரம் வருவதற்கு சற்று கால தாமதம் ஆனது
அவர் சுஜாதாவின் நாடகம் ஒன்றில் BUSY ஆக இருந்தார்
ஒரு நாள் STUDIO போட்டுவிட்டு சார் தேதி என்றேன்
பாண்டிச்சேரியில் நாடகம் என்றார்
அன்று மற்ற எல்லோரும் வந்துவிடுகிறார்கள் வேறு ARTISTE போடலாமே என்பதுதான் ஒரு தயாரிப்பாளரின் அடுத்த சிந்தனை
அதன் பிறகு 15 நாட்களுக்கு வேலை இல்லை
நல்ல வேளை நான் அந்த தவறை செய்ய வில்லை
காத்திருக்க முடிவு செய்தேன் ஒரு மாதம் சென்றது எல்லா வேலைகளையும் முடித்துகொண்டு
அவருடைய அத்தியாயம் ஒரு நாள் ஏற்பாடு செய்துகொண்டு அழைத்தேன்
காத்திருந்தது வீண்போகவில்லை
வந்தது பார்த்தோம்
மைக் முன்னால் அம்ர்த்தது பார்த்தோம்
நான்கு அத்த்தியயங்கள் முடிந்தது உணர்ந்தோம்
அவ்வளவுதான்
RETAKE இல்லை BLOW இல்லை MODULATION சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை
சார் HATS OFF TO YOU
என் ASSISTANT க்கும் எடிடருக்கும் அதிர்ச்சி
ஒரு வயதானவரைக் கொண்டு வந்து மைக் முன்னால் உட்காரவைத்து ரெகார்டிங் போகும் என்னை ஒரு மாதிரி பார்த்தவர்கள் ஆயிற்றே
வீரபத்திர ஆசாரியை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய இவரிடம் நான் ஆசீர்வாதம் வாங்குவதை விட எப்படி நன்றி என்று ஒரு வார்த்தையுடன் முடித்துக்கொள்வது
அது நியாயமாகுமா??? ரெகார்டிங் முடிந்தவுடன் காசோலை நீட்டினேன் வாங்க மறுத்துவிட்டார்
கல்கியின் படைப்புக்கு என் சிறிய காணிக்கை என்றார் இன்னும் அந்த காசோலையை பத்திரமாக வைத்திருக்கிறேன்
ஒரு வேளை அதை கொடுத்திருந்தால் அவர் செய்த உதவியை ரொம்பவே கொச்சை படுத்டியிருப்பெனோ தெரியவில்லை
ஐயா பாரதி மணி அவர்களே உங்கள் பாதங்களில் நமஸ்கரித்து எழுகிறேன்
ஆசி கூறுங்கள்
நன்றி நன்றி நன்றி
அடுத்து இவர் ஒரு பண்பட்ட நாடக நடிகர்
அவரை கேளுங்கள் நாடக நடிகன் புன்பட்டவனாகத்தன் இருப்பான்
பண்பட்ட என்பதெல்லாம் வெத்து பேச்சு என்பார்
எனக்கும் இதில் உடன்பாடு உண்டு இருந்தாலும் இப்போதைல்க்கு பண்பட்ட என்றே வைத்துக்கொள்வோம்
இவர் முதன் முதலில் எனது சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தில் நடித்தார்
அப்போதே இவர் கறிகாய் வாங்க கடைக்குப்போனால் ஒரு கிலோ கத்திரிக்காய் என்றதும் இவரது குரலைகேட்டு ஒரு பெண் ஐயா மகேந்திரபல்லவரே என்றது நிஜம்
எனக்கே ஆச்சர்யம் ஒரு ஒலிப்புத்தகத்தின் குரலைக்கேட்டு கூட மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்களா
கண்டு கொண்டார்கள் அது நிஜம்
பொன்னியின் செல்வனில் இவர் சுந்தர சோழராக வந்த போது மன்னிக்கவும் வாழ்ந்தபோது இவர் குரலை எங்கே கேட்டாலும் சுந்தரசோழர் என அழைத்தவர்கள் உண்டு
அப்படிப்பட்ட குரலுக்கு சொந்தக்காரர்
என் இனிய நண்பர்
அவரை முதலில் வேண்டாமென்று ஒதுக்கிவைத்தவன்
பின்னர் அழைத்தேன் ஐயா நீர்தான் சிவனாடியார் என்றேன்
சிவனடியாரை கண் முன்னால் கொண்டுவந்து நிறுந்த்துங்கள் என்றேன்
செய்து காட்டிவிட்டார் என் இனிய நண்பர் SK ஜெயகுமார்
அவர்கள்
மிக்க நன்றி SKJ
எனது மூன்று ஒலிப்புத்தகங்களிலும் பங்கு கொண்ட ஒரே நடிகர் இவர் தான்
Thursday, October 16, 2014
தெய்வத்தின் ஆசி
விருதுகள் பாராட்டுகள் சில பெற்றிருந்தாலும் சமிபத்தில் கிடைத்த ஒரு கொரவம் என் 4௦ வருட உழைப்பு வீண் போகவில்லை என்ற மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட வைத்தது
இந்த வருட நவராத்திரி விழாவில் நெமிலி பாலா பீடம் எனக்கு பாலா ரத்னா என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது
சென்ற சில வருடங்களாக நெமிலி பாலாவை தொடர்ந்து தரிசித்து வருகிறேன்
குழந்தை பாலாவும் என்னை வழிநடத்தி வருகிறாள்
கவிஞரும் பாலாபீடாதிபதியுமான எழில் மணியுடன் நான்
கவிஞரும் பாலாபீடாதிபதியுமான எழில் மணியுடன் நான்
Wednesday, October 15, 2014
பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் பற்றி திரு RVS அவர்கள் எழுதிய விமர்சனம்
காவேரி தீரம் அமைதி கொண்டு வி்ளங்கிற்று என்று ஒருவர் நிதானமாகக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். பின்னணியில் சலசலவென்று ஆற்றுநீரோடும் ஓசை செவியை நனைக்கிறது. எங்கோ மிதந்துகொண்டிருக்கிறேன். கண் திறந்திருக்க செவிக்குள் புகும் கதையின் காட்சிகள் கருப்பு வெள்ளையாகத் தெரிகிறது. சண்டை போடுகிறார்கள். டிங்...க்ளிங்..களங்.. என்று வாளும் வேலும் மோதுகிறது.
ரௌத்ராகாரமாகப் பேசுகிறார்கள். ராஜ குடும்பத்தின் மேல் விசுவாசம் கொண்ட சிவனடியார் ஒருவர் நா தழுதழுக்க உணர்ச்சிவசப்படுகிறார். வீரபத்ர ஆசாரி வசனமாக நம் முன்னால் வந்து உட்கார்ந்துவிடுகிறார். போர் நடக்கும் காலத்தில் ஆசாரிகளின் பங்கைப் பற்றிப் பேசுகிறார். வள்ளியின் குரல் வெடுக் வெடுக்கென்ற மின்னலாய் வெட்டுகிறது. பொன்னன் பொழுதுதோறும் சளக்பளக்கென்று காவிரியில் படகுதள்ளுகிறான். மாரப்பபூபதி குல சத்ரு. அலட்சியக் குரலில் நயவஞ்சகம் தொணிக்கிறது.
வயது முதிர்ந்த
ராஜ குடும்பத்து ஸ்திரீ வரும் காட்சியிலெல்லாம் ”மகனே...மகனே...” என்று
உருகுகிறார்கள். கதாநாயகனைக் கட்டிக் கப்பலில் ஏற்றி நாடு கடத்துகிறார்கள்.
நீலக்கடலில் பச்சைத் திட்டாய் செண்பகத் தீவு வார்த்தைகளில் தெரிகிறது.
சோழர் குலத்து இளவரசன் விக்கிரமனைப் பல்லவ குல இளவரசி குந்தவி மகாப்ஸ் வரை
துரத்தித் துரத்திக் காதலிக்கிறாள். ஹெஹ்ஹே... என்று அழகு காட்டி பரிகாசம்
செய்கிறாள். தந்தையிடம் பாசத்தைப் பொழிகிறாள். மாரப்பனை மிரட்டுகிறாள்.
நவரசமும் குந்தவியின் குரலில்.
காட்டுவழியில் விநோதமான ஒலியெழுப்பி குள்ளனொருவன் வேடிக்கை செய்கிறான். குலை நடுங்குமாறு கத்துகிறான். அறுபத்து மூவரில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் சேனாதிபதியென்று உலா வருகிறார். இவர்கள் பேசுவதற்கு நடுநடுவே ஒருவர் ஆற்றொழுக்கு போல கதை சொல்கிறார். ம்.. நிச்சயமாக டக்டக்டக்...கென்ற குதிரையின் குளம்பொலிகளும் உண்டு.
ஒலி ரூபமாக குறுந்தகட்டில் வாழும் வீரபத்ர ஆசாரியான பாட்டையா Bharati Mani, குந்தவியாக குறுந்தட்டிலிருந்து தோன்றிய ஒலி ஹீரோயினி மதுரபாஷிணி Ananya Mahadevan, விசித்திரக் குள்ளனாக ஓலமிட்டு மிரட்டிய Haho Sirippananda மற்றும் துளிக்கூட பிசிறில்லாமல் அச்சு வடிவத்திற்கு உணர்வுப்பூர்வமான ஒலிவடிவம் கொடுத்த Bombay Kannan Kannanஅவர்களும் எனது ஸ்நேகிதர்கள்.
அமரர் கல்கியின் பார்த்திபன் கனவை பன்னிரெண்டு மணி நேர ஆடியோ புஸ்தக வட்டாக்கி வெளியிட்டிருக்கும் பாம்பே கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விற்பனையில் சரவெடியாய் சாதனை படைத்து அவரது கனவும் மெய்ப்பட வேண்டும்.
நண்பர்களே! தீபாவளிக்கு பார்த்திபன் கனவு பரிசாகட்டுமே!!
#பார்த்திபன்_கனவு
காட்டுவழியில் விநோதமான ஒலியெழுப்பி குள்ளனொருவன் வேடிக்கை செய்கிறான். குலை நடுங்குமாறு கத்துகிறான். அறுபத்து மூவரில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் சேனாதிபதியென்று உலா வருகிறார். இவர்கள் பேசுவதற்கு நடுநடுவே ஒருவர் ஆற்றொழுக்கு போல கதை சொல்கிறார். ம்.. நிச்சயமாக டக்டக்டக்...கென்ற குதிரையின் குளம்பொலிகளும் உண்டு.
ஒலி ரூபமாக குறுந்தகட்டில் வாழும் வீரபத்ர ஆசாரியான பாட்டையா Bharati Mani, குந்தவியாக குறுந்தட்டிலிருந்து தோன்றிய ஒலி ஹீரோயினி மதுரபாஷிணி Ananya Mahadevan, விசித்திரக் குள்ளனாக ஓலமிட்டு மிரட்டிய Haho Sirippananda மற்றும் துளிக்கூட பிசிறில்லாமல் அச்சு வடிவத்திற்கு உணர்வுப்பூர்வமான ஒலிவடிவம் கொடுத்த Bombay Kannan Kannanஅவர்களும் எனது ஸ்நேகிதர்கள்.
அமரர் கல்கியின் பார்த்திபன் கனவை பன்னிரெண்டு மணி நேர ஆடியோ புஸ்தக வட்டாக்கி வெளியிட்டிருக்கும் பாம்பே கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விற்பனையில் சரவெடியாய் சாதனை படைத்து அவரது கனவும் மெய்ப்பட வேண்டும்.
நண்பர்களே! தீபாவளிக்கு பார்த்திபன் கனவு பரிசாகட்டுமே!!
#பார்த்திபன்_கனவு
...
Tuesday, October 14, 2014
மேடையில் எனக்கும் பேச சந்தர்பம் கிடைத்தது ஆனால் நேரமின்மை காரனமாக என்னால் பேச நினைத்ததெல்லாம் பேச முடியாமல் போயிற்று குறிப்பாக என் ரெகார்டிங் அனுபவங்கள் மற்றும் பங்குக் பெற்ற குரல் வித்தககர்களைப் பற்றி.....
எனக்கு கொடுக்க பட்ட தலைப்பு நன்றி நவிலல் மற்றும் ஒலிப்புத்தகம் அறிமுகம் எல்லாவற்றையும் அசுர வேகத்தில் செய்து விட்டு சரியாக 9 மணிக்கு முடித்துக்கொண்டேன்
இப்போது நேரம் கிடைக்க விலாவாரியாக கலைஞர்களைப்ப்றி பேசி நன்றி தெரிவிக்கலாமென்று எண்ணுகிறேன் வந்திருந்த கூட்டத்தை விட எனக்கு முகநூல் நண்பர்கள் அதிகம்
ஆகையால் இது சரியான முறையாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது முதலில் குரல் தேடல்
6௦ க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் பங்கு பெற்றிருந்தாலும் அவர்களை இந்த முறை தவிர்த்து புதியவர்களை கொண்டுப் வரவேண்டும் என்று நினைத்தேன்
ஆனால் என்னால் அதை முழுமையாக செய்ய முடியாமற் போனது
சிலரை பயன்படுத்த வேண்டி இருந்தது
புதியவர்களை முக்கியமான பாத்திரங்களில் அறிமுகப்படுத்தினேன்
பின்னால் இவர்களையும் என் மற்ற ஒலிப்புத்தகங்களில் பயன்படுத்திகொள்ளலாம், மற்றும ஒரு VOICEBANK உருவாக்கலாம் என்ற எண்ணத்தில்தான்
இவர்களுக்கு இது முதல் முயற்சி
ஒலிப்புத்தகங்களில் பங்கு பெறுபவர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டுபவை சில
ஒன்று அவர்களின் உச்சிரிப்பு
நாடகமேடையில் உச்சரிப்பு கொஞ்சம் சரியாக இல்லை என்றால் கூட நடிப்பும் காட்சியும் அதை சமாளித்துவிடும் இங்கு அப்படி அல்ல உங்கள் முன்னால் இருக்கும் மைக் என்ற கருவி கம்ப்யூட்டர் போல மிகவும் SENSITIVE
அது உங்கள் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பையும் காட்டிகொடுத்துவிடும்.
அடுத்தது உங்கள் கையில் உள்ள புத்தகம் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால்அது மைக் மேல் பட்டு ஓசை எழுப்பும்
அடுத்து உங்கள் நாக்கு
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் அது ஏற்படுத்தும் சத்தம் உங்களுக்கு சாதரணமாக கேட்காது
ஆனால் மைக்குக்கு கேட்கும்
அது உங்கள் குரலை கேட்கும் பொது பல சந்தர்பங்களில் உங்கள் நிழல் போல வந்து உங்களை பாடாய் படுத்தும்
கொஞ்சம் தன்ணீர் குடித்து கொள்ளவேண்டும்
நாக்கு உலர்வதை தடுத்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு முறையும் வாயை மூடி திறப்பதை விட முடிந்தவரையில் திறந்த வாயாக உதடுகளை முடி திறக்காமல் அந்தந்த TAKE களை முடிப்பது நீங்கள் TAKE வாங்காமல் இருக்க உதவும்
அடுத்து ரெகார்டிங் போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் PAPER NOISE BLOW என்பவை கையில் இருக்கும் ஸ்க்ரிப்டை TAKEன் போது மைக்கில் கேட்கும்படியாக திருப்பக்கூடாது
இது சரித்திர நாடகங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை
அடுத்து இந்த BLOW இதற்கு எவ்வளவு பெரிய நடிகரும்ம் விதிவிலக்கல்ல யாரையும் பாரபட்சமில்லாமல் தாக்ககூடியது.
இதன் முக்கிய காரணகர்த்தா தமிழில் உள்ள ப என்ற எழுத்து மற்றும் சில
இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும் பொது MIKE லிருந்து சற்றே விலகி நடித்திர்களானால் இந்தத் தவறு ஏற்படாது இதற்கு கொஞ்சம் அனுபவம் முக்கியம்
ஒலிப்புத்தகத்டில் நடிக்கும் போது நீங்கள் வசனங்களி படிக்க வில்லை நடிக்கிரிர்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு நடித்துக்கொண்டே உணர்சிபூர்வமாக படித்திர்களானால் நீங்கள் அந்த பாத்திரத்திற்குள் போவிர்கள் இல்லையென்றால்..... பாவம் நீங்கள்?!!
சமுக கதைகளுக்கும் சரித்திரகதைகளுக்கும் வசனத்தில் தான் வித்தியாசமே தவிர உணர்வுகளில் இல்லை
அடுத்து என்னிடம் நிறைய செய்தி வாசிப்பாளர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வருகிறார்கள் அவர்களில் சிலருக்கு உச்சரிப்பு மிக நன்றாக உள்ளது ஆனால் படிக்கும் பொது அவர்கள் செய்தி வசிப்பிலிருந்தோ நிகழ்ச்சி தொகுப்பிலிருந்தோ வெளிவருவதில்லை
நரசிம்ம பல்லவரும வந்தியதேவனும் குந்தவையும் பழுவேட்டரையர்களும் செய்தி வாசித்தால் எப்படி இருக்கும்
அப்படி இருந்தது அவர்கள் MODULATION
இதை சரி செய்வதற்கு எனக்கு நேரமில்லை
அவர்கள் கொஞ்சம் HOMEWORK செய்து கொண்டு வந்தால் நிச்சயம் அவர்களை மாற்றி பயன்படுத்திக்கொள்வேன்
அடுத்து இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இவர்கள் வேகத்துக்கும் இவர்கள் தமிழுக்கும் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை
அதனால் பெரும்பாலனவர்களை என்னால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை இருந்தும் நல்ல குரல்களை அவர்களிடமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
அவர்கள் என்னிடம் கொஞ்சம் ள ல ழ ஸ ஷ போன்றவற்றின் உச்சரிப்பை ஒரு வகுப்பாக கற்றுக்கொண்டால் நலம்
இது என் அனுபவங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடம்
கொஞ்சம் வறட்சியாக இருந்தாலும் அன்ன பட்சிபோல தேவையானவர்ரை மட்டும் எடுத்துகொள்ளுங்கள்
இனி அடுத்த பதிவில் ஒவ்வொரு நடிக நடிகரைப்பற்றி அறிமுகப்படுத்தி நன்றி நவிலலாம் என எண்ணுகிறேன்
தொடரும்
Friday, October 10, 2014
PONNIYIN SELVAN AUDIO BOOK CLIMAX SONG
வந்தியத்தேவன் கந்தமாறனை நோக்கினான். "ஆம், நண்பா! மணிமேகலை
தான் யாழிசையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கிறாள்!" என்றான்.
படகிலிருந்து அவர்கள் இறங்கினார்கள். மணிமேகலை பாடுவது என்ன பாடல் என்பதை வந்தியத்தேவன் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான்.
முன்னொரு சமயம் அதே நீராழி மண்டபத்தில் அவள் யாழிசையுடன் பாடிய அதே பாடல்தான்
.https://soundcloud.com/bombay-kannan-kannan/iniya-punal-sad-song
This is another song from Ponniyin selvan Audio Book This is the song in the climax chapter of the novel This song is written by Kalki and Music composed by Sathyaseelan This song is sung by Shravanti
Wednesday, October 8, 2014
பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் இடம் பெற்ற பாடல் மணிமேகலை பாடும் பாடல் இது
https://soundcloud.com/bombay-kannan-kannan/iniya-punal-happy-song
https://soundcloud.com/bombay-kannan-kannan/iniya-punal-happy-song
Monday, October 6, 2014
Desikan Narayanan review on Parthiban Kanavu
பார்த்திபன் கனவு ஒலிப் புத்தகத்தை இரண்டு வாரம் முன் காரில் கேட்டு முடித்தேன். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தை உருவாக்கியவருக்கு பார்த்திபன் கனவு பெரிய விஷயம் இல்லை.
ஒலிப் புத்தகம் என்றால் ஒருவர் புத்தகத்தை நமக்கு படித்து காண்பிப்பார். ஆனால் பாம்பே கண்ணன் செய்வது ஒலிப்புத்தகம் அல்ல, ஒலிச்சித்திரம். பலரின் உழைப்பு அதில் அடங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் நண்பர் பாம்பே கண்ணன் உழைப்பு தனியாக தெரிகிறது. அவருக்கு என் வாழ்த்துகள்.
சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகத்தில் என்னை கவர்ந்தவர் மகேந்திரபல்லவர் SK ஜெயகுமார் இதில் சிவனடியாராக பலம் சேர்த்துள்ளார். அனுபவித்து பேசியுள்ளார். நரசிம்ம பல்லவராக இவரை பேசவிடாமல், நேதாஜியை தேர்வு செய்தது புத்திசாலித்தனம்.
அடுத்து இந்த புத்தகத்துக்கு பலம் சேர்ப்பவர் வள்ளியாக ஸ்ரீவித்யா
பத்மநாபான் ( பொன்னியின் செல்வனில் பூங்குழலி இவர் தான் ). உச்சரிப்பு,
மாடுலேஷன் எல்லாம் பிறவியில் வர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு.
முக்கிய பார்த்திரமான குந்தவை பாத்திரத்தில் Ananya Mahadevan
அனன்யா மகாதேவன் (ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்டார்டிங் டிரபிள் இருந்தாலும்:-) )
அருமையாக செய்துள்ளார். பாராட்டுக்கள். அடுத்த ஒலிப்புத்தகத்தில் இவர்
வேறு லெவலுக்கு போய்விடுவார் என்று நினைக்கிறேன்.
அருள்மொழியாக பேசியவரின் உச்சரிப்பும், பார்த்திபன் கனவு அட்டைப்படமும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
200ரூ ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்ற பாம்பே கண்ணன் குழுவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். வெளிநாடுகளில் ( ஏன் சென்னையில் கூட ) தமிழ் படிக்க தெரியாத குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இதை சிபாரிசு செய்கிறேன்.
பிகு: மற்றவர்களை பற்றி எழுதவில்லை என்பதால் அவர்கள் நன்றாக செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. ஒலிப்புத்தகம் நன்றாக வந்ததற்கு காரணம் Team Work !.
அருள்மொழியாக பேசியவரின் உச்சரிப்பும், பார்த்திபன் கனவு அட்டைப்படமும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
200ரூ ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்ற பாம்பே கண்ணன் குழுவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். வெளிநாடுகளில் ( ஏன் சென்னையில் கூட ) தமிழ் படிக்க தெரியாத குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இதை சிபாரிசு செய்கிறேன்.
பிகு: மற்றவர்களை பற்றி எழுதவில்லை என்பதால் அவர்கள் நன்றாக செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. ஒலிப்புத்தகம் நன்றாக வந்ததற்கு காரணம் Team Work !.
Sunday, October 5, 2014
Parthiban Kanavu Audio Book in Tamil Trailers
https://www.youtube.com/watch?v=kZQfS59Ua4U
https://www.youtube.com/watch?v=kZQfS59Ua4U
https://www.youtube.com/watch?v=vQb-S8JNuQM
Friday, October 3, 2014
பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் பற்றி பாலாஜி நாகராஜன் அவர்கள் எழுதிய விமர்சனம்
சென்ற வாரம் சனிக்கிழமை பார்த்திபன் கனவு ஒலிப் புத்தகம் வந்து சேர்ந்தது, அதற்கு சில நேரத்திற்கு முன்பு தான் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பியிருந்தேன், புட் பாய்சன் மற்றும் குளிர் காய்ச்சல் ... இருந்தாலும் கொஞ்சம் கேட்கலாம்னு போட்டேன்.. மொத்தம் மூன்று பாகம், 78 ஒலிப் பேழைகள். கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும் சுவாரஸ்யம். முழுவதுமாக கேட்டு முடித்தது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு. உடல் உபாதையையும் இந்த ஒலிப்பேழையின் சுவாரஸ்யமும் முழுவதுமாக கேட்டு முடித்துவிட்டேன்
எனக்கு பார்த்திபன் கனவில் மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் நரஸிமஹ பல்லவரும், பொன்னரும், வள்ளியும். இந்த ஒலிப்புத்தகத்தில் பங்குபெற்ற அனைவரது பங்களிப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. இதிலும் என்னுடைய ஆத்ம கதாபாத்திரங்களின் பங்களிப்பும் நன்றாக இருந்தது. இந்த ஒலிப்புத்தகம் மூலமாக மேலும் சில கதாப்பாத்திரம் எனக்கு பிடிக்க ஆரம்பித்தது, விக்கிரமசோழன் மற்றும் குந்தவி.
குந்தவிக்காக குரல் கொடுத்த Ananya Mahadevan
குரலில் எப்போதும் ஓர் மழழை சாயல் இருப்பதாக எனக்குத் தோன்றும், இந்த
கதாப்பாத்திரத்திற்கு அது அவருக்கு மிகவும் பொருத்தமாகவே இருந்தது. Bombay Kannan Kannan
அவர்களுடைய திறமையான இயக்கம் மற்றும் குரல் தேர்வு, பார்த்திபன் கனவு
படிப்பதை விட கேட்பதற்கு உங்கள் கற்பனைக் குதிரை இன்னமும் வேகமாக ஓட
வைக்கும்.
மொத்ததில் மிகவும் அற்புதமான படைப்பு இன்னமும் மிக அற்புதமாக மெரூகட்டப்பட்டுள்ளது
மொத்ததில் மிகவும் அற்புதமான படைப்பு இன்னமும் மிக அற்புதமாக மெரூகட்டப்பட்டுள்ளது
பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியீட்டு விழா
பார்த்திபன் கனவு ஒலிப்புத்தக வெளியிட்டு விழாவில் நடைபெற்ற நாடகத்தில் இருந்து சில காட்சிகள்
நான் இயக்கிய இந்த நாடகத்தில் மிகசிறப்பாக எலோரும் நடித்து கைதட்டலை பெற்றார்கள்
குறிப்பாக சூரஜ் அர்ச்சனா வெங்கட் ஸ்ரீகாந்த் போன்ற இளைஞகர்கள் அனுபவமிக்க நடிகர்களான ஆனந்த் ராம் முத்துகுமார் சபாபதி மோகன் முரளி இவர்களுடன் இணைந்து நடித்து 4௦ நிமிடத்தில் பார்த்திபன் கனவு கதாபாத்திரங்களை மேடையில் கொண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியான நினைவு
ஒளிஅமைப்பு செய்த சேட்டா ரவி இசை அமைத்த குகபிரசாத் குமார் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்
ஒளிஅமைப்பு செய்த சேட்டா ரவி இசை அமைத்த குகபிரசாத் குமார் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்
Wednesday, September 24, 2014
நாடக அனுபவங்கள் பகுதி 11
1991 ம் வருடம் டிசம்பர் மாதம் கோலாரில் எனது இரு வீடு ஒரு வாசல் நாடகம்
நான் நாடகக்காரன் என்ற பெயரில் சென்னையில் நாடக குழு துவங்கி முதல் நாடகம்
ஏற்கனவே கோலாரில் நடந்த பல நாடகங்களில் வேறு குழுவில் நான் பங்கு கொண்டிருந்தததால் எனக்கு மிக சுலபமாக இந்த வாய்ப்பு கிடைத்தது
அருமையான ரசிகர்கள் கோலார் தங்க வயலில் பணி புரியும் தமிழர்கள்
நல்ல விஷயங்களை மிகச் சிறப்பாக ரசிப்பார்கள் ஆகையால் இந்த நாடகத்திற்கு நான் மிகவும் எதிர் பார்ப்புடன் காத்திருந்தேன்.
கோலார் செல்ல வான் ஏற்பாடு செய்திருந்தேன் இரவு புறப்படட்டு காலை கோலார் சேர வேண்டியது மாலையில் நாடகம் முடிந்து இரவு புறப்பட்டு சென்னை வரவேண்டியது என ஏற்பாடு
புறப்பட வேண்டிய நாளன்று மலை VAN தயாராக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அரங்க அமைப்பிற்கான படுதாக்களை ஏற்றிவிட்டு விளக்குகளை ஏற்றிவிட்டு எல்லா கலைஞ்ர்களையும் தயார் நிலையில் வைத்து விட்டு நானும் என் குழுவை சேர்ந்த நடராஜனும் வீடு வந்து சேர்ந்தோம் விட்டிற்குள் நுழையும் போதே எதோ ஒரு வித்தியாசமான அமைதியும் சலனமும் தென்பட்டது
தாம்பரத்தில் இருந்த என் மாமா கார் வாசலில் நின்றது என்ன இந்த வேளையில் என நினைத்துக்கொண்டு மெல்ல மாடி ஏறினேன்
இரவு மணி 8
ஹாலில் என் மனைவி என் அண்ணன் எல்லாரும் இருந்தார்கள் உள்ளே படுக்கை அறையில் என் தந்தை படுத்திருந்தார்.... அருகில் டாக்டர்......
என் தந்தை இப்படி அடிக்கடி படுத்திருந்து பின் எழுந்திருப்பது அவருடைய 4௦ வருட சக்கரை வாழ்க்கையில் சகஜம் என்பதால் எனக்கு முதலில் பெரிதாக ஏதும் தோன்றவில்லை
என்ன என்று கேட்டேன் அப்பாவுக்கு HEART அட்டாக் என்றார்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது டாக்டர் வெளியே வந்தார் சினிமா டாக்டர் போல கனாடியை கழட்டுவார் என எதிர்பார்த்தேன்
“ரொம்ப சீரியஸ்” MATTER OF FEW HOURS OR DAYS என்றார் FEW HOURS என்று சொல்லாமல் இருந்தால் கூட நிம்மதி அடைந்து இருப்பேன் அப்பாவுக்கு அப்ப்போது 8௦ வயது
டாக்டர் HOSPITAL வேண்டாம் LETHIM GO PEACEFULLY என்று சொன்னார் எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம் டாக்டர் போனபிறகு யோசித்தோம்
HOSPITAL என்ற முடிவுக்கு வந்தார்கள் என் அண்ணனும் மாமாவும்
BSS HOSPITAL என முடிவுசெய்து AMBULANCE க்கு அழைப்பு விடுத்தோம்
இரவு மணி 9
என் குழு நடராஜனிடம் சொல்லி காத்திருக்கும் எல்லோருக்கும் தகவல் சொல்ல சொன்னேன் PROGRAMME CANCELLED என்று மட்டும் சொல்ல வில்லை கொஞ்சம் தாமதமாக புறப்படுவோம் என்று சொல்லி வைத்தேன்
AMBULANCE வந்தது
BSS ஆஸ்பத்திரி
எல்லா பரிசோதனைகளும் நடந்தன
இரவு மணி 1௦ அங்கிருந்த
DUTY டாக்டரிடம் சென்று என் நிலைமையை எடுத்து சொல்லி போகலாமா என PERMISSION கேட்டேன் என்னை எதோ கேவலமான ஜந்துவைப் பார்பதுபோல பார்த்துவிட்டு “எப்படி இந்த கேள்வியை கேட்கிறிர்கள்?
NO WAY இன்னிக்கு ராத்திரி யாருமே எங்கியும் போகமுடியாது
யு YOU KNOW HIS CONDITION HE IS VERY சீரியஸ் போய் சொந்தக்கரங்களுக்கு தகவல் சொல்லுங்க” என்றார்
சரி இதான் விதி போலும் என நொந்துகொண்டே அக்காக வீட்டிற்கு KK நகர் புறப்பட்டேன்
எனது குழு நடிகற்களுக்கு சொல்லிவிட்டு விட்டிற்கு போகச்சொன்னேன் அப்போது CELLPHONE இல்லாத காலம் வேறு
இரவு மணி 12
எல்லோரும் HOSPITAL ICU வெளியே காத்திருக்கிறோம் நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் இன்னும் கோலாருக்கு தகவல் சொல்ல வில்லை
ஒரு நப்பாசைதான் எதாவது அதிசயம் நடந்து டாக்டர் போய் வா என்று சொல்ல மாட்டாறான்னுதான்
ஆனால் அப்ப்படி எதுவும் நடக்கவில்லை
குழு அங்கத்தினர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வருமென வேரு சொல்லிவைத்தேன் நடராஜன் “நீ வரவில்லை என்றால் பரவாயில்லை நாங்கள் போய் நாடகம் நடத்திவிட்டு வருகிறோம்” என்று நிலைமை தெரியாமல் உளறினான்
இரவு மணி 2
நேராக என் அன்னையிடம் சென்றேன் எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சொன்னேன் இது புதிதாக குழு ஆரம்பித்திருக்கும் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு இதைத் தவறவிட்டால் மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது என எடுத்து சொன்னேன் என்ன செய்யலாம் என்று ஆலோனை கேட்டேன்
போய் வா என்றாள் பெருமாள் மேல் பாரத்தை போட்டுவிட்டு போய்வா என்றாள் அந்த வீரத்தாய் அன்று எனக்கு என் தந்தையை விட நாடகம் பெரிதாக இருந்தது அம்மாவே அனுமதி கொடுத்து விட்டாள் என எனக்கு நானே சமாதனம் சொல்லிக்கொண்டேன் எல்லோருக்கும் தகவல் சொல்லி புறப்படுகிறோம் என்றேன்
மணி 3
VAN ஏறிவிட்டோம்
மறுபடியும் படுதாக்கள் விளக்குகள் ஏற்ற தாமதம் ஆனது
சென்னை விட்டு புறப்படும்போது கலை மணி 4
சென்னை தாண்டும்போது நான் செய்தது சரிதானா மிண்டும் என் தந்தையை பார்ப்பேனா எதாவது ஒன்று அசம்பாவிதமாக நடக்குமானால் என் நிலைமை என்ன என்ற எண்ணங்களை தடுக்க முடியவில்லை சிறிது நேரத்தில் மனம் நாடகத்தில் செல்ல எண்ணங்கள் மாற அசதியில் சற்றே கண்ணயர்ந்தேன் எப்படியும் 7 மணி நேரத்தில் போய்விடலாமே
பயணம் தமிழ்நாடு கர்நாடக எல்லைப்பகுதியில் வண்டிக்கு கட்ட வேண்டிய வரி காரணமாக தடைபட்டது இரண்டு மணி நேரம் கடந்தது
மதியம் 2 மணி சுமாருக்கு மதிய உணவு அருந்தினோம்
அப்போது mobile போன் இல்லாததால் தொடர்பு கொள்வது கடினம்
இருந்தால் அன்று நான் தொடர்பு கொண்டிருப்பேனா தெர்யாது
எப்படியும் 4 மணிக்கெல்லாம் போய் விடலாமென்ற எண்ணத்தில் பயணம் தொடர்ந்தோம்
ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே
அதற்கு இந்த வேனை விட வேகம் அதிகம்
VAN டிரைவர் HIGHWAYலிருந்து திரும்பும் இடத்தில் கோலார் தங்க வயலுக்கு பதிலாக கோலாருக்கோ வேறு எதற்கோ திரும்பிவிட சுற்றி சுற்றித் வருகிறோம் தங்க வயல் மட்டும் காணவில்லை மறுபடியும் பரமபதம்போல புறப்பட்ட இடத்திற்கே வந்து சரியான பாதையில் பயணித்தோம்
KGF ல் நாங்கள் நாடகம் போடும் அரங்கிற்கு நேராக சென்றபோது மணி 6
வாசலில்..........
இன்றைய நாடகம் ரத்து என்ற அறிவிப்பு எங்களை வரவேற்றது
உடனடியாக அந்த காரியதரிசி செக்ல்வரஜை தொடர்பு கொண்டேன்
நீங்கள் மதியம் வரை வராததால் உங்கள் விட்டிற்கு போன் செய்தோம் உங்கள் தந்தை HOSPITAL லில் இருப்பதாக செய்தி வந்தது அதனால் ரத்து செய்தோம் நீங்கள் போன் செய்து இருக்கலாமே என்றார்
TENSION என்றேன்
மனதிற்குள்......
போன் செய்தால் அப்பா நிலைமை இப்படி இருக்கும்போது வரவேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றுதான் போன் செய்யவில்லை என்பதை எப்படி சொல்வது என நினைத்துக்கொண்டேன்
சார் இப்போ வந்து விட்டோம் என்ன செய்வது?
மணி 6 1௦ ஏழு மணிக்குள் ரெடியாக முடியுமா என்றார்
ஒப்புக்கொண்டு எங்கள் தொழில் நுட்ப கலைஞர்களை நோக்கினேன்
தயார் என்றார்கள் அரை மணியில் SET ம் LIGHT ம் ரெடி
இந்த நேரத்தில் செல்வராஜ் எங்களைவிட வேகமாக இயங்கினார் அங்கத்தினர்கள் எல்லோருக்கும் போன் செய்து நாடகம் உண்டு என்று அறிவித்து விட்டார்
நாங்களும் அரை மணி நேரத்தில் மேடை தயார் செய்து விட்டோம் பார்வையாளர்களும் வந்து விட்டார்கள்
அரங்கம் நிறைந்து இருந்ததது
என் வாழ்வில் அந்த மாதிரி ஒரு ரசிகர்களை நான் சந்த்தித்ததே இல்லை ஒவ்வொரு பகுதியையும் அணு அணுவாக ரசித்தார்கள்
நாடகமுடிவில் நடிகர்களை அறிமுகப் படுத்தும்போது STANDING OVATION ல் அரங்கம் அதிர்ந்தது
என் மனம் ஒரு புறம் சந்தோஷத்தில் மிதக்கும் போது மறுபக்கம் தந்தையின் நிலைமை நாடகம் முடிந்தவுடன் வந்து குத்தியது கண்களில் கண்ணிற் பெருக்கெடுத்து ஓட முயற்சிக்க அரும்பாடுபட்டு மறைத்துக்கொண்டு சென்னை திரும்ப VAN ஏறினோம் அதுவரைவரையில் நாடகம் மட்டுமே கவனத்தில் இருந்த எனக்கு இப்போது HOSPITAL, அம்மா, வீடு எல்லாம் நினைவிற்கு வந்தன
VAN ல் ஒரு முலையில் உட்கார்தவன் இரண்டு நாள் துக்கம் இல்லாததால் அயர ஆரம்பித்தேன்
எனக்கு பக்கத்து இருக்கையில் FEROZE
அவருக்கு அருகே நடராஜன்
கோலார் தங்க வயலை விட்டு வெளியே வருவதற்கு மறுபடியும் கஷ்டப்பட்டு வழிகண்டுபிடித்து ஒரு வழியாக நெடுஞ்சாலை அடைந்தபோது மணி காலை 3
ஓட்டுநர் டி சாப்பிடலாமென வண்டியை ஓரம்கட்டினார்
எல்லோஐம் இறங்கினர் நான் எழுந்திருக்கவில்லை
வண்டி காலை 6 மணி சுமாருக்கு பூந்தமல்லி அருகே வந்தபோது நான் கண் விழித்தேன் பக்கத்து இருக்கை காலியாக இருக்கவே feroze முன்பக்கம் எங்கேயாவது அமர்ந்திருக்கிறாரா என்று பார்த்த்தேன்
காணவில்லை
எங்கேடா feroze என்று நான் கேட்க எல்லோரும் அப்போதுதான் விழித்துக்கொண்டு முழி பிதுங்க தெரிய வில்லை என்றனர்
ஓட்டுனர் ஒருவேளை டி குடித்த இடத்தில் ஏற வில்லையோ என தனது சந்தேகத்தை கூறினார் யாருமே செக் பண்ண வில்லையா எனக் கடிந்து கொண்டு வண்டியை மீண்டும் கோலாரை நோக்கி திருப்புவது என யோசித்தோம் அப்போது என் குழுவின் கதாநாயகன் சுந்தர் ராமன் திரும்பி எங்கே எவ்வளவு துரம் போவது என ஒரு LOGICAL கேள்வியை எழுப்பினான் FEROZE ன் பை இருக்கிறதா என்று பார்த்தோம் இருந்ததது பையில் அவர் PURSE இருக்கிறதா என்று பார்த்தோம் இல்லை அவர் முன் ஜாக்கிரதையாகவோ இல்லை எதோ ஒரு காரணத்தினாலோ பணம் எடுத்து சென்றிருக்கிறார் ஆகையால் அவரிடம் பணம் இருக்கிறது எப்படியும் வந்து விடுவார் என்று கணக்கு போட்டு சென்னை நோக்கி புறப்பட்டோம் சென்னை அடைந்தவுடன் feroze விட்டிற்கு போன் போட்டு காலதாமதமாக வந்து விடுவார் என்ற தகவலை சொல்லிவிடலாமென தீர்மானித்து போன் செய்தேன் அவர் மனைவி எடுத்தார்
FEROZE என்று நான் ஆரம்பிப்பதற்குள் அவர் இதோ தரேன் என்று போனை குடுக்க FEROZE LINE ல் வந்தார் FEROZE i am sorry என்று நான் ஆரம்பிப்பதற்குள் “பரவாயில்லிங்க நீங்க இன்னும் விட்டுக்குபோகலையா எனக்கேட்டுவிட்டு விவரம் சொன்னார்
டீக்கு இறங்கினவர் பாத்ரூம் போகவேண்டுமென அவர் வழக்கப்படி ஒரு கல்லை தேடி எடுக்க கொஞ்சம் சாலை விட்டு விலகி உள்ளே போக எதோ ஒரு மசுதியை வேறு பார்த்திருக்கிறார் ரெண்டு நிமிடம் காலதாமதமாக அவர் வெளியே வர VAN ஓட்டுனர் எல்லோரும் வந்துவிட்டதாக நினைத்து வண்டியை எடுக்க எல்லோரும் அசதி காரணமாக கண்ணயர்ந்து விட்டிருக்கிரார்கள்
சாலைக்கு வந்து பார்த்த feroze VAN புறப்பட்டு போவதைப்பார்த்து குரல் கொடுத்திருக்கிறார் யார் காதிலாவது விழுந்தால் தானே
பிறகு feroze கையில் காசு இருந்ததால் தைரியமடைந்து மஸூதிக்கு சென்று அமர்ந்து காலை பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்து முதல் bus பிடித்து எங்களை முந்திக்கொண்டு சென்னை அடைந்து இருக்கிறார்
அவர் முகத்தில் எப்படி விழிப்பேன் என பயந்து கொண்டு இருந்த என்னை வெகுவாக நிம்மதி பெருமுச்சு விட வைத்துவிட்டார் அவர்
அடுத்து அப்பா
நேராக விட்டிற்கு ஓடினேன் HOSPITAL அப்பா IMPROVING என்ற நல்ல செய்தியை என் மனைவி குடுத்து விட்டு FEROZE போன் பண்ணினார் என்றும் தெரிவிக்க.......
என்ன சொன்னார் என்று கேட்டேன்
நடுவழியிலே VAN ஐ MISSபண்ணிட்டாரமே சென்னை வந்தது விட்டுக்கு போன் பண்ணார் “சார் கவலைப்படுவார் நான் சௌக்கியமாக வீடு வந்து சேர்ந்து விட்டேன் என்றும் மட்டும் சொல்லிவிடுங்கள் அப்பா உடம்பு விஷயமாக ரொம்ப கவலையில் இருக்கிறார் என்னைப்பற்றி TENSION ஆக வேண்டாம்” என்றார்.
அவர் இடத்தில் வேறு ஒரு நடிகரை வைத்துப்பார்கிறேன்
அன்று மாலை DRIVE IN ல் அவர் கையை பிடித்துக்கொண்டு கண்கலங்கினேன் வார்த்தைகள் வரவில்லை
FEROZJI நீங்க ஒரு GENTLEMAN
Subscribe to:
Posts (Atom)