கடல் புறா ஒலிப்புத்தகம் நடிகர்கள் அறிமுகம்
இந்த தொடரில் அடுத்து நாம் சந்திக்க போவது......
இவரை நான் முதன் முதலில் சந்தித்தது லியோ பிரபு நாடகத்தில அ...டுத்து இவருடன் நான் நெருங்கி பழகியது ஜெயஸ்ரீ pictures தயாரித்த என்ன சத்தம் இந்த நேரம் என்ற தொலை காட்சி தொடரில் தான்
அதன் பிறகு இவரை நான் பல முறை சென்னை சென்ட்ரல் ரயில் நிலத்தில் முன்பதிவு பிரிவில் சந்தித்திருக்கிறேன்
நான் மட்டும் அல்ல நாடகம் போடும் எல்லோரும் இவர் உதவியை நாடி அங்கு வருவார்கள்
தென்னக ரயில்வேயில் ஒரு பொறுப்புள்ள அதிகாரி யாக இவர் முன்பதிவு பிரிவில் பணியாற்றி வந்தார்
நாங்களெல்லாம் அப்போது நிறைய வெளியூர் நாடகங்களுக்கு போக வேண்டியிருந்ததால் bulkbooking எனப்படும் குழு முன்பதிவிற்கு அங்கு செல்வோம்
அப்போதெல்லாம் மயிலை மற்ற இடங்களில் இந்த வசதி கிடையாது அங்கு போய் இவரை பார்த்தால் போதும் மட மட வென்று நாடக குழுக்களுக்கான வேலைகளை முடித்து தந்து விடுவார் ஏனென்றால் இவரும் ஒரு நாடக காரர்தானே இவருக்கும் உதவி புரியும் குணமும் அதிகம்
இதன் பிறகு சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகம் எடுத்த போது என் செவிகளிலேயே ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஒன்று இவர்தான் புலிகேசி என்று நினைவுட்டியது அப்படித்தான் நாங்கள் இந்த ஒலிப்புத்தக வேலைகளில் இணைந்தோம்
இவரும் நாக நந்தியும் பேசும் முன்று நான்கு தொடர்சியான அத்தியாயங்கள் இரண்டே மணி நேரத்தில் முடிந்தது என்பது இவரது திறைமைக்கு அத்தாட்சி
இவர் குரல் எங்கிருந்தாலும் அதிரும்
பின்னர் பெரிய பழுவேட்டரையராக பங்கேற்க அழைத்தேன்
அப்பப்பா
இவர் நந்தினியை சந்திக்க போகும் காட்சியில் ஒரு கிளியை கழுத்தை நெரிக்கும் காட்சி ஆகட்டும்
இவரும் அவர் தம்பியும் உறுமும் காட்சி ஆகட்டும்
மண்டபத்தை சாய்த்து ரவிதாசன் மேல் விழும் காட்சி ஆகட்டும்
வெள்ளத்தில் தவித்து குடந்தை ஜோசியரை சந்தித்து பேசும் காட்சி ஆகட்டும்
இறுதியில் கத்தியை தன மேல் பாய்ச்சிக்கொண்டு தற்கொலை முயலும காட்சி ஆகட்டும் மனிதர் வாழ்ந்து இருப்பார்
பெ. ப மரணமடையும் காட்சி மட்டும் இவர் கேட்டதற்கு இணங்க இரண்டு முறை ஒலிப்பதிவு செய்தேன்
அவர் திருப்தி அடைந்தார்
அந்த காட்சியில் இவர் கொடுத்த சில சிறப்பு சப்தங்கள் படிக்கும்போது நிச்சயம் கிடைக்காது
இவர் நந்தினியோடு பேசும் காட்சிகளில் இழையோடிய ஒரு அடிமை மயக்கத்தை கவர்ச்சியின் காமத்தை தனது வீரத்தோடு மிக அழகாக கேட்டபடி கொடுத்திருப்பார்
அதுதான் கல்கி அவர்கள் எழுதியதும்
இதற்குமேல் அவர் நடிப்பை பற்றி நான் பெற்ற வெற்றி பற்றி நீங்கள் தான் எழுத வேண்டும்
ஒரு இயக்குனரின் நடிகர் இவர்
இவர்களெல்லாம் பயன்படுத்தபடாமல் நமது சீரியல் உலகம் இன்னும் ஒரு சிலர் பின்னாடியே சுற்றிக்கொண்டிருப்பது நமது துரதிர்ஷ்டம்
அடுத்து கடல் புறா
ஒரு ராட்சதத்தனமான குரல் கொண்ட ஒரு அரசன் கடல் கொள்ளை காரன் மகள் மேல் பாசத்தை பொய்யாக பொழிபவன் அகுதாவிடம் அஞ்சுபவன் ஒரு வில்லன் பாத்திரம் இளையபல்லவனிடம் அடிமைபட்டு போனவன்
பலவர்மன்
இதற்கு இவர் குரலை தவிர என்னால் வேறு எந்த குறலையும் யோசிக்க முடியவில்லை
இங்கு ஒரு கூடுதல் தகவல்
இந்த கடல் புறா ஒலிப்பதிவு முழுவதும் என்னுடன் இயக்கத்தில் பெரும் உறுதுணையாக இருந்தவர்
இவர் பெற்ற modulation உச்சரிப்பு நடிப்பு மற்றவர்களுக்கு பயன்படாதா என்ற எண்ணத்தில் இவருக்கு அந்த பொறுப்பும் கொடுக்கப் பட்டது
மேலும் என் குரலை ஒலிப்பதிவு செய்யும் பொது எனக்கு ஒருவர் என் தவறுகளையும் சுட்டிக்காட்ட தேவைப்பட்டது அதற்கு பெரும் உதவியாக இருந்தவர் வேலுசாமி அவர்கள் அவர் இருந்தால் நான் கொஞ்சம் ஒய்வு எடுப்பேன்
மேலும் ஒரு நடிகர் அல்லது நடிகை நடிக்கும்போது செய்யும் தவறுகளை ஒரு இயக்குனராக உணர்ந்தாலும் ஒரு தயாரிப்பாளனாக நான் சில சமயம் studiotime பண விரயம் கருதி ஆமோதித்தாலும் இவர் விட மாட்டார்
அதனால் we aimed at perfection together
வேலுசாமி இவர் பெயர்
ஆனால் எல்லோரும் என்னிடம் இவரை பற்றி பேசும்போது பழுவேட்டரையர் அல்லது புலிகேசி என்றுதான் அழைக்கிறார்கள்
இவருடன் மேலும் பல ஒலிப்புதகங்களில் பங்கு பெற ஆசைபடுகிறேன்
THANK YOU VELUCHAMY
நான் மட்டும் அல்ல நாடகம் போடும் எல்லோரும் இவர் உதவியை நாடி அங்கு வருவார்கள்
தென்னக ரயில்வேயில் ஒரு பொறுப்புள்ள அதிகாரி யாக இவர் முன்பதிவு பிரிவில் பணியாற்றி வந்தார்
நாங்களெல்லாம் அப்போது நிறைய வெளியூர் நாடகங்களுக்கு போக வேண்டியிருந்ததால் bulkbooking எனப்படும் குழு முன்பதிவிற்கு அங்கு செல்வோம்
அப்போதெல்லாம் மயிலை மற்ற இடங்களில் இந்த வசதி கிடையாது அங்கு போய் இவரை பார்த்தால் போதும் மட மட வென்று நாடக குழுக்களுக்கான வேலைகளை முடித்து தந்து விடுவார் ஏனென்றால் இவரும் ஒரு நாடக காரர்தானே இவருக்கும் உதவி புரியும் குணமும் அதிகம்
இதன் பிறகு சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகம் எடுத்த போது என் செவிகளிலேயே ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஒன்று இவர்தான் புலிகேசி என்று நினைவுட்டியது அப்படித்தான் நாங்கள் இந்த ஒலிப்புத்தக வேலைகளில் இணைந்தோம்
இவரும் நாக நந்தியும் பேசும் முன்று நான்கு தொடர்சியான அத்தியாயங்கள் இரண்டே மணி நேரத்தில் முடிந்தது என்பது இவரது திறைமைக்கு அத்தாட்சி
இவர் குரல் எங்கிருந்தாலும் அதிரும்
பின்னர் பெரிய பழுவேட்டரையராக பங்கேற்க அழைத்தேன்
அப்பப்பா
இவர் நந்தினியை சந்திக்க போகும் காட்சியில் ஒரு கிளியை கழுத்தை நெரிக்கும் காட்சி ஆகட்டும்
இவரும் அவர் தம்பியும் உறுமும் காட்சி ஆகட்டும்
மண்டபத்தை சாய்த்து ரவிதாசன் மேல் விழும் காட்சி ஆகட்டும்
வெள்ளத்தில் தவித்து குடந்தை ஜோசியரை சந்தித்து பேசும் காட்சி ஆகட்டும்
இறுதியில் கத்தியை தன மேல் பாய்ச்சிக்கொண்டு தற்கொலை முயலும காட்சி ஆகட்டும் மனிதர் வாழ்ந்து இருப்பார்
பெ. ப மரணமடையும் காட்சி மட்டும் இவர் கேட்டதற்கு இணங்க இரண்டு முறை ஒலிப்பதிவு செய்தேன்
அவர் திருப்தி அடைந்தார்
அந்த காட்சியில் இவர் கொடுத்த சில சிறப்பு சப்தங்கள் படிக்கும்போது நிச்சயம் கிடைக்காது
இவர் நந்தினியோடு பேசும் காட்சிகளில் இழையோடிய ஒரு அடிமை மயக்கத்தை கவர்ச்சியின் காமத்தை தனது வீரத்தோடு மிக அழகாக கேட்டபடி கொடுத்திருப்பார்
அதுதான் கல்கி அவர்கள் எழுதியதும்
இதற்குமேல் அவர் நடிப்பை பற்றி நான் பெற்ற வெற்றி பற்றி நீங்கள் தான் எழுத வேண்டும்
ஒரு இயக்குனரின் நடிகர் இவர்
இவர்களெல்லாம் பயன்படுத்தபடாமல் நமது சீரியல் உலகம் இன்னும் ஒரு சிலர் பின்னாடியே சுற்றிக்கொண்டிருப்பது நமது துரதிர்ஷ்டம்
அடுத்து கடல் புறா
ஒரு ராட்சதத்தனமான குரல் கொண்ட ஒரு அரசன் கடல் கொள்ளை காரன் மகள் மேல் பாசத்தை பொய்யாக பொழிபவன் அகுதாவிடம் அஞ்சுபவன் ஒரு வில்லன் பாத்திரம் இளையபல்லவனிடம் அடிமைபட்டு போனவன்
பலவர்மன்
இதற்கு இவர் குரலை தவிர என்னால் வேறு எந்த குறலையும் யோசிக்க முடியவில்லை
இங்கு ஒரு கூடுதல் தகவல்
இந்த கடல் புறா ஒலிப்பதிவு முழுவதும் என்னுடன் இயக்கத்தில் பெரும் உறுதுணையாக இருந்தவர்
இவர் பெற்ற modulation உச்சரிப்பு நடிப்பு மற்றவர்களுக்கு பயன்படாதா என்ற எண்ணத்தில் இவருக்கு அந்த பொறுப்பும் கொடுக்கப் பட்டது
மேலும் என் குரலை ஒலிப்பதிவு செய்யும் பொது எனக்கு ஒருவர் என் தவறுகளையும் சுட்டிக்காட்ட தேவைப்பட்டது அதற்கு பெரும் உதவியாக இருந்தவர் வேலுசாமி அவர்கள் அவர் இருந்தால் நான் கொஞ்சம் ஒய்வு எடுப்பேன்
மேலும் ஒரு நடிகர் அல்லது நடிகை நடிக்கும்போது செய்யும் தவறுகளை ஒரு இயக்குனராக உணர்ந்தாலும் ஒரு தயாரிப்பாளனாக நான் சில சமயம் studiotime பண விரயம் கருதி ஆமோதித்தாலும் இவர் விட மாட்டார்
அதனால் we aimed at perfection together
வேலுசாமி இவர் பெயர்
ஆனால் எல்லோரும் என்னிடம் இவரை பற்றி பேசும்போது பழுவேட்டரையர் அல்லது புலிகேசி என்றுதான் அழைக்கிறார்கள்
இவருடன் மேலும் பல ஒலிப்புதகங்களில் பங்கு பெற ஆசைபடுகிறேன்
THANK YOU VELUCHAMY