Friday, November 27, 2015

வேளசேரி alias வெள்ளசேரி கீதை


வீட்டைசுற்றி வெள்ளக்காடு அடுத்த தெருவில் படகு விட்டார்கள் Main road ன் மேடான பகுதியில் இறக்கிவிட்டார்கள்
இறங்கும் போது இருவர் பேசியது காதில் விழுந்தது
4 கோடியில் வீடு வாங்கினேன் ரெண்டு பிள்ளைங்க அமெரிக்காவிலே மாசாமாசம் டாலர்லே அனுப்பறாங்க வீட்டு லே எல்லா ரூம்லேயும் AC எக்கசக்க ELECTRONIC பொருட்கள் எல்லாம் இருக்கு ஆனா படகுலே ஏறும்போது கட்டின துணியோட வான்னு சொல்லிட்டான் மேல வரும்போது எதையும் கொண்டு வரலை திரும்பி போகும்போது எதையும் கொண்டு போகப்போறதில்லை
இவர் தன் வீட்டைப்பற்றிதான் சொன்னார் ஆனாலும் மிகவும் சிந்திக்க தூண்டியது
சுஜாதாவின கணேஷ் வசந்த் கதா பாத்திரங்களை அவரது எழுத்திற்கு பொருத்தமான நடிகர்களை வைத்து படமாக்கப்பட்ட கொலையுதிர்காலம் தொடரில் நடிகர் விவேக் வசந்தாகவும் பானுபிரகாஷ் கணேஷ் ஆக நடித்தனர்

இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் பாவை சந்திரனும் இயககுனர் 
MM RANGASAMY ம் ஆவார்கள் அருமையான கதை அருமையான பாத்திரங்கள் மிக அருமையான தொடர்

பொதிகையில் மதிய நேரத்தில் வந்து அதற்குண்டான பெரிப இடத்தை தொடாமல் போனது ரசிகர்களின் துரதிர்ஷ்டம்

இதில் குமாரவியாசன் பாத்திரத்தில் நான் நடிக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்து இயக்குனரை சம்மதிக்க வைத்தவர் தயாரிப்பாளர் பாவை சந்திரன் அவர்கள்

இருபது வருடங்களுக்கு பிறகு பல தொடர்களுக்குபிறகு சிலர் என்னிடம் நீங்கள்தானே குமார வியாசன் என கேட்கும் போது சுஜாதாவின் பாத்திர படைப்பிற்கும் தயாரிப்பாளர் பாவை சந்திரனுக்கும் தலை வணங்குகிறேன்

போஜனம் 


சிறுகதை




நந்தனம் சிக்னலில் கார் வந்து நின்ற பொது உடனே ஒருவன் காலை விந்தி விந்தி ஓடி வந்து கார் கதவை டோக் டோக் என்றுதட்டி கை நீட்டினான்
ரங்கநாதனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது
இவன் என்ன கார் கதவை தட்டி பிச்சை கேட்பது
என்று நினைக்க அருகில் இருந்த அவர் மனைவி
போனாப்போகுது ஒரு 5 ரூபாய் கொடுதிடுங்களேன்
என்று சிபாரிசு செய்தாள் அவருக்கு இன்னும் ஆத்திரம் பற்றிகொண்டு வந்தது
கேக்கறது பிச்சை இதுலே அதிகார பிச்சையா என் கார் கதவை தட்டறானே இதை துடைக்க அவனுக்கு அருகதை இல்லை என்று பொங்கினார்
பாவங்க கால் வேற சரியில்லை
அதெலாம் சும்மா கொஞ்ச நேரம் கழிச்சி பாரு ஓடுவான்
என்று சொல்லிவிட்டு சிக்னல் கிடைத்ததும் வேகமாக காரை கிளப்பிக்கொண்டு சென்றார் ரங்கநாதன்
மறுநாள் அவருடைய பெண்ணிற்கு கல்யாணம் மிகப்பெரிய சத்திரத்தில்
அதை சத்திரம் என்று சொல்லிவிட முடியாது
அது ஒரு RESORT என்று சொல்லலாம்
ஊருக்கு வெளியே மகாபலிபுரம் போகும் வழியில் கடற்கரை ஓரமாக மிகப்பெரிய தோட்டம் அதிலே உள்ளே ஒரு கோடியில் மிக பிரம்மடமான மண்டபம் சாலையிலிருந்து உள்ளே வர ஒரு கிலோமீட்டருக்கு மேலே இருக்கும் அதுவரையில் ஒரே தோப்பும் துரவும்தான்
ரங்கநாதன் சென்னையின் குறிபிட்டு சொல்லக்கூடிய வர்த்தகர்களில் ஒருவர் குறைந்த பட்சம் 5௦௦௦ பேர்களாவது திருமண வரவேற்பிற்கு வந்து விடுவார்கள் அதற்காகவே இந்த RESORT ஏற்பாடு செய்திருந்தார் அவர்
மாலைக்கு மேல் வருகின்றவர்கள் இரவு தாமதம் ஆனால் அங்கேயே தங்கி கொள்ளலாம் சகல வசதிகளும் அங்கே உண்டு
பல குளிசாதன அறைகள் பார் ஸ்விம்மிங் POOL டென்னிஸ் கோர்ட்
என்ன இல்லை அங்கு
பார்த்து பார்த்து அழைத்திருந்தார் சென்னையின் மற்ற VVIP களை அவரது நட்பு வட்டாரம் அரசியல் கலப்பில்லாத நண்பர்கள் கொண்டது
அதனால் பெரிய போலீஸ் கெடுபிடி போன்றவை அங்கே இருக்காது
காலையிலேயே RESORT க்கு வந்து விட்டார் ரங்கநாதன் கூடவே அவர் மனைவியும் வந்து விட்டார்
பத்திரிக்கைகள் மடுமே கிட்டதட்ட 5௦௦௦ தாண்டி விட்டது
நிச்சயம் 5௦௦௦ இலைகளுக்கு குறைவிருக்காது என்று CONTRACTOR இடம் சொல்லி ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டார்
பிரமாண்டமான சமயலறையில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது
இந்த மாதிரி ஒரு இடத்தை முதல்லே கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணவன் நானாகத்தான் இருப்பேன் என்று பெருமை அடித்து கொண்டிருந்தார் மனைவியிடம்
மொத்தம் 102 வகையறாக்கள்
20 வகை ஊருகாய் பீடாவோட சேர்த்து
என்று இவரது கர்வத்திற்கு எஎண்ணை விட்டுகொண்டிருந்தார் CONTRACTOR
வாசலில் இலைகளையும் அதில் மிச்சமாகப் போகும் உணவையும் கொட்டுவதற்கு ராட்சத பீப்பாய்கள் வந்து அடுக்கி வைக்க பட்டன
இலையை எடுத்து போட்டவுடனே மிச்சத்தை சாப்பிடறதுக்கு அள்ளிகிட்டு போறதுக்குன்னு ஒரு கும்பல் வரும் அதுங்க மொத்த இடத்தையும் அசிங்கம் பண்ணிடுவாங்க நாலு ஆட்களைப் போட்டு அந்த மாதிரி கும்பல்களை முன்னாடியே விரட்டி அடிச்சிடுங்க
என்றார் CONTRACTOR ன் ஆளிடம்
அவரோ ஒரு பெரிய ஆர்வக்கோளறு சிறு வயது
கவலையே படாதிங்க சார் ஒரு நாய் வராது என்றான்
ரங்கநாதனுக்கு சுருக்கென்றது நாய் என்றதும்
முக்கியமா நாயெல்லாம் வராம பாத்துக்க இலை எல்லாம் கொதறிப் போட்டு கிழே தள்ளிவிட்டிடும்
என்று சொல்லி விட்டு வேறு வேலை கவனிக்க சென்றார்
மாலை முன்று மணி இருக்கும் வாசலில் கார்டனில் பெரிய பெரிய வண்ண குடைகளை நட்டு காப்பி ட்ரிங்க்ஸ் பானி பூரி பேல்ல் பூரி பாப்கோர்ன் பழங்கள் போன்றவற்றை தனித்தனியாக ருசிக்க சுவைத்து மகிழ ஸ்டால்களை நிர்மாணித்து கொண்டிருந்தார்கள்
ஒவ்வொன்றாக விசிட் அடித்து கொண்டு வந்த ரங்கநாதன் எந்தெந்த ஸ்டால் எங்கெங்கு இருக்க வேண்டும் என்று முறைபடுதிக்கொண்டிருந்தார்
காற்று மெல்ல விசிக் கொண்டிருந்தது
குடைகள் லேசாக ஆடிக்கொண்டிருந்தன
நான் போய் டிரஸ் பண்ணிகிட்டு தயாராகிட்டு வந்திடறேன்
என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் வழக்கம் போல தன மனைவி பின் தொடர
உள்ளே AC ரூமிற்குள் நுழைந்து தனது புதிய சூட் எவ்வளவு அழகா பிட்டிங்கா இருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும் போது லேசாக பட்டாசு வெடி போல சத்தம் கேட்டது
ஆகா கல்யாணத்திற்கு வான வேடிக்கை சொல்லாமல் போய்விட்டோமே என கொஞ்சம் வருத்தம் கொண்டார்
மறுபடியும் அந்த சதம் இன்னும் அருகில் கேட்பது போல கேட்டது
ஜன்னலை திறந்து நோக்கினர் தூரத்தே கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன
JUST PASSING CLOUDS
என்று தனக்குள் சொல்லிவிட்டு தனது கோட்டை மாட்டிக்கொண்டு வெளியே வந்தவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஒரு பல வண்ண குடை அவர் காலடியில் வந்து விழுந்தது
என்ன சங்கர் என்னாச்சு
என்று அந்த உதவியாளரை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்க்குள் வர அவரது கோட்டில் காக்கை எச்சம்போல பச்சகென்று ஒரு பொட்டு நிர் பட்டு தெரித்தது
என்ன என்று அவர் அண்ணாந்து பார்க்கும் பொது அவர் முகத்தில் டைரக்டர் ஆகஷன் என்று சொன்னவுடன் பெய்யுமாமே அப்படி திடிரென மழை நீர் விழுந்தது
சுதாரித்துக்கொண்டு வெளியே வர மழை வேகமாக பெய்ய ஆரம்பித்தது
மின்விளக்குகளை தூக்கிக்கொண்டு ஓடினார்கள் சிலர்
அதை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு முடினார்கள்
குடைகள் வேகமாக இருப்பிடத்தை விட்டு மேல்நோக்கி நகர்தன பேப்பர் கப்புகள் பறக்க ஆரம்பித்தன மேஜை விரிப்புகள் கலைந்தன ஒவ்வொன்றாக ரங்கநாதன் பார்த்து முடிப்பதற்குள் வேகமான காற்றும் பலமான மழையும் பிடித்து கொண்டன
மணி 5 இது துவக்க நேரம்தான்
இதன் பிறகு இடைவேளை விடாத திரைப்படம்போல மழை வெளுத்து வாங்கியது காற்றும் மழையும் தவிலும் நாதஸ்வரமும் போல கச்சேரி செய்தன இடியும் மின்னலும் பக்க வாத்தியங்களாக ஒலித்தன மழை மழை மழை தான்
முதலில் வந்த ஒரு 50 பேர்கள் தவிர வேறு யாரும் அந்த மண்டபத்திற்கு அதுவரையில் வந்து சேரவில்லை வழியில் வெள்ளமாம் மரம் விழுந்து விட்டதாம் கார்கள் பஸ்கள் லாரிகள் என அங்கங்கே நிற்கிறதாம்
ஒவ்வொருவருக்கும் தொலைபேசி விவரங்களை தெரிந்து கொண்டார் ரங்கநாதன்
எல்லாரும் ஒரே குரலில் தங்கள் வருதத்தை ஓரேவார்த்தையில் தெரிவித்துக்கொண்டனர்
ஒரு வேளை கல்யாணத்தை ஏவிஎம் ரஜெஸ்வரியிலே வச்சிருக்கலாமோ சரவணன் கூட நம்ம FRIEND தானே என யோசித்தார்
ஆனால் சற்று நேரத்திற் கெல்லாம் சரவணனே போன் செய்து ஏவிஎம் ரஜேஸ்வரி நிலை இன்னும் மோசம் என்று பகிர்ந்து கொண்டார் அவரும் ஒற்றை வார்த்தையில் SORRY
ரமணனை அழைத்தோமா என்று அப்போது அவருக்கு சந்தேகம் வந்தது
மணமக்களுக்கு பின்னாலிருக்கும் மேஜையை பார்த்தார்
ஒரு சில கலர் பெட்டிகளே அங்கு நிரம்பி இருந்தன பெண்ணும் மாப்பிள்ளையும் நின்று நின்று களைத்து போகாமல் உற்சாகமா காதல் மொழிகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்
சாப்பிடும் ஹாலை எட்டிப் பார்த்தார் அங்கே 100 பேர் அமரும் வரிசையில் இருவர் சாப்பிடடு கொண்டிருந்தனர் பல வரிசைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு நாற்பது பேர் தேறும்
எவ்வளவு ஆடம்பரமாக நடந்து இருக்க வேண்டிய திருமணம் இது என்று யோசித்து கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்து கொள்ளலாமா என யோசித்தவர் நாலு பேருக்கு முன்னால் வேண்டாமென தன தனி அறைக்கு திருமினார்
சிறிது நேரத்திற்கு எல்லாம் CONTRACTOR MRS ரங்கநாதனுடன் உள்ளே நுழைந்து
அண்ணா கச்சேரி ஆட்கள் கூட வந்து சேரலை அதெல்லாம் கூட நான் உங்க கிட்ட கேட்டு வாங்க மாட்டேன் ஆனா 5௦௦௦ சாப்பாடு மிச்சமாறது ஸ்வீட் வடை VEG ரோல் எல்லாமே அஞ்சாயிரம் அஞ்சாயிரமனு இருக்கே என்னாலே திருப்பி எடுத்துண்டு போக முடியாது சாக்கடையிலே கொட்டவும் மனசு வரலை...ஒண்ணு ரெண்டுன்ன நாங்க எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் எடுத்துண்டு போய்டுவோம் மீதிய என்ன பண்ணறதுன்னு.....
என்று கையை பிசைய
மற்ற நேரமாக இருந்தால என் தலையிலே கொட்டுய்யான்னு கோபமாகக் கத்தி இருப்பார் ரங்கநாதன்
ஆனால் இப்போது அந்த குரல் வரவில்லை
மனது கனத்தது
என்ன தப்பு பண்ணேன் என்று யோசித்தார் சற்று நேரம்
டோக் டோக் என்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது அந்த சத்தம் தனக்கு கடவுள் ஏதோ ஒரு பதில் சொன்னது போல இருந்தது ரங்கநாதனுக்கு
கதவை திறந்து கொண்டு RESORT மேனேஜர் வந்தார்
அவருக்கும் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது
அய்யா பக்கத்துலே ஒரு அநாதை ஆசிரமம் இருக்கு அங்கே ஒரு இரண்டாயிரம் குழந்தைங்க ஐநுறு வயசானவங்க இருக்காங்க அவங்களுக்கு இன்னக்கு மழையிலே சாப்பாடு இல்லையாம் இதெல்லாம் அங்கே கொண்டு போயிட்டிங்கன்னா...... ஐயா தப்பா நினைக்கக் கூடாது
என்று தயங்கி தயங்கி கூறினார்
ரங்கநாதன் அதிக நேரம் யோசிக்கவில்லை
CONTRACTOR ஐப் பார்த்து
புறப்படுங்க
என்றார்
ரங்கநாதனின் பெரிய காரில் சாதமும் பருப்பும் சாம்பாரும் பட்சணங்களும் அப்பளமும் சிப்சும் வடைகளும் பாயசமும் மாயா பஜார் படத்தில் வரூவது போல பவனி வந்தன
மழை லேசாக விட்டு அவர்களுக்கு வழி கொடுத்தது மின்னல் வெளிச்சம் வழி காட்டியது இடி முழக்கம் துரத்தே யாரோ கைதட்டுவது போல கேட்ட்டது மாப்பிள்ளையும் பெண்ணும் மனைவியும் கூட வர இலைகள் பச்சை கொடி காட்ட ஆசிரமத்தை அடைந்து எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினார்கள்
எல்லோரும் வேண்டியதை மட்டும் கேட்டு சாப்பிட்டார்கள்
திருப்தியாக சாப்பிட்டார்கள் சந்தோஷமாக கைகுலுக்கினார்கள்
பெரியவர்கள் மணமக்களை எந்தவித போலித்தனமும் இல்லாமல் வாழ்த்தினார்கள்
அவசர அவசரமாக கொண்டு வந்த கிப்ட் பாக்கெட்டை கையிலே திணித்து விட்டு போட்டோ வீடியோ எடுத்துக்கொண்டுசாப்பாட்டு கூடத்தை நோக்கி ஓடும் அவசரம் அங்கு இல்லை
காதை கிழிக்கும் சத்தங்கள் இல்லை
ஒரு மாபெரும RECEPTION அங்கு அரங்கேறியது
சாப்பிட்டு முடித்தவுடன் இலைகள் அடுத்த பந்திக்கு தயார் என்பது போல சுத்தமாக இருந்தன
கமலா ரொம்ப திருப்தியா இருக்கு என்றார் ரங்கநாதன் மனைவியிடம்
கமலா! அங்கே எவ்வளவு பேர் சாப்பிட்டாலும் அதுலே மிச்சம் மிதி வச்சு வீண் அடிக்கறதைவிட விட இங்கே எல்லாமே பயன்பட்டதுலே ரொம்ப திருப்தியா இருக்கு சக்கரை வியாதிக்காரன் இனிப்பு வாங்கி விணடிபான் BP காரன் ஊறுகாயையும் உருளையும் போட்டுகிட்டு ஒதுக்குவான் இதெல்லாம் தான் என் பெருமைக்கு காரனம்ம்னு நினைச்சேன் ஆனா இப்பதான் தெரியுது பசிச்சவனுக்கு சோறு போடறதுதான் உத்தமம்னு
என்று சொல்;லிவிடடு டிரைவரிடம்
ஆமாம்.... போற வழியிலே தானே நந்தனம்,சிக்னல்?
என்று விசாரித்துக் கொண்டார்

Tuesday, November 10, 2015

நெதர்லாண்ட்ஸ் பயணம் மூன்றாம் பகுதி

........................................................................................................
பயணம் தொடங்குவதற்கு முதல் நாள் என் மகள் என்னை அழைத்து உன்னுடைய மொபைல் போனில் இன்டர்நேஷனல் ரோமிங் இருகிறதா பார்த்துக்கொள் என்று சிறிய லக்ஷ்மி வெடியை தூக்கி போட்டாள்
இதேதடா சோதனை என்று மனதில் நினைத்துகொண்டு AIRCEL அலுவலகத்திற்கு போன் செய்து கேட்கலாமே என்று தொடர்பு கொண்டால் அவர்கள் லேசில் வந்து விடுவார்களா என்ன
திருவிளையாடல் சிவாஜி என்கிற சிவ பெருமான் சுந்தரம்பாள் என்கிற ஔவையாரிடம் என்னை ஒன்று இரண்டு என்று வரிசை படுத்தி பாடு என்று சொல்ல அவர் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அர்த்தம் கற்பிப்பது போல இவர்களும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை ஏதேதோ சொல்லிகொண்டு போனார்கள் எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்பதுதான் நானும் ஒன்றை அழுத்திவிட்டு பாடல் முடியட்டுமென காத்திருந்தேன்
இறுதியில் பிரச்னை தீர்க்கும் நாரதர் போல ஒரு அதிகாரி வந்தார்
என்ன விஷயம்
என்று கேட்டார் INTERNATIONAL ரோமிங் பற்றி விசாரித்தேன்
அவர்கள் எப்பவுமே இந்த PREPAID ஆசாமிகளை இளைய தாரத்து குழந்தை போலவே பாவிப்பார்கள்
அதெல்;லாம் POSTPAID CONNECTION க்குத்தான் உங்களுக்கு இல்லை
என்று கேவலபடுத்த
நான்
அப்போ நாங்கள் என்ன செய்வது
என்று கேட்க
நீங்க அந்த நாட்டுக்கு போன உடனே அதுவா வேலை செஞ்சாலும் செய்யும் இல்லன்னா இல்லை
என்று யாரோ அரசு அதிகாரியை பற்றி சொல்வது போல கூறினார்
சரி நமது தலை எழுத்து என்று எண்ணிக்கொண்டே என் மகளிடம் இதை தெரிவிக்க
அவள்
ஒரு வேளை நாங்கள் யாரவது ஏர்போர்ட் வரவில்லை என்றால் எங்களை அழைப்பதற்காக சொன்னேன்
என்று சொல்ல இப்போது தான என் மனதில் குருவி வெடி வெடித்தது TRAIN ல் சென்றாலே ஸ்டேஷன் உள்ள நுழுயும் போதே நம்மை RECEIVE பண்ண யார் வந்திருக்காங்கன்னு பதட்டம் பட்டு வளர்ந்தவங்க
S2 COMPARTMENT, PLATFORM உள்ள நுழையும்போதே S5 லிருந்து இதோ வந்திட்டேன்னு கை ஆட்டற கும்பலைச் சேந்தவங்களாச்சே
இப்ப என்னடான்னா AIRPORT,.....அதுவும் புது நாடு.... பாஷை வேற தெரியாது... அது என்னவோ DUTCH ஆமே....சுத்தம்
நான் காலேஜ் முடிசசவுடனே எங்கப்பா என்னை MAXMUELLER BHAVAN லே GERMAN படிக்க வச்சாரு அப்பவே அந்த வாழப்பழத்தை வாயிலே அடக்கிகிட்டு பேசற மொழி கொஞ்சமும் மனசுலே ஏறலை
ஓரளவுக்கு GERMAN லே என் பேரை சொல்ல கத்துகிட்டேன் அவ்வளவுதான் இதை வச்சு சமாளிக்கலாமான்னு கேட்க
இது வேற அது வேற என்றாள்
சரி இப்ப என்ன செய்யனுங்கிற
என்று கேட்டு வைத்தேன்
ஒண்ணும் பிரச்சனை இல்லைப்பா (எவ்வளவு சுலபமா சொல்லிட்ட) ஒரு வேளை நாங்க ஏர்போர்ட் வரலைன்னா (வந்திடும்மா) எனக்கு டெலிவரி டைம் ஆகி நான் HOSPITAL போகிறதா இருந்தா வரமாட்டோம் நீ என்ன பண்றே ஏர்போர்ட் வந்த வுடனே உன் மொபைல் வேலை செய்யுதா பாரு இல்லன்னா WI FI CONNECTION எங்க இருக்குன்னு கேளு போய் அதுலே CONNECTION வாங்கிக்க
அம்மா என் WIFE கூடவே நான் பல சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கேன் இதுலே எப்படிம்மா WI FI எல்லாம்
எனக்கேட்க நினைத்தேன் என் அமைதியை பார்த்து மறுபடியும்
ஒண்ணும்பிரச்னை இல்லைப்பா அங்கே இருக்கறவங்க கிட்ட WI FI எப்படி காங்நேச்டின் வாங்கணும்னு கேளு
நானு!!ஒரு பாஷை தெரியாத ஊர்லே கேக்கணும்!!! சரிதான்
ஒண்ணும் பிரச்னை இல்லைபா என்று அவள் ஆரம்பிக்க
சரி என்று கேட்க துவங்கினேன்
அவங்ககிட்ட கேக்கும் பொது உங்களுக்கு ENGLISH தெரியுமான்னு கேளு
அம்மா எங்க ஊர்லே யார்கிட்டயாவது இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்ட அடிப்பங்கம்மா என்றேன்
அப்பா! ஒண்ணும்....
தெரியும் ஒண்ணும் பிரச்னை இல்லை அதானே
ஆமாம் இங்க யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க உங்க கிட்ட ENGLISH லே பேசலாமான்னு கேளு.........
அடடே!!!!
இந்த கேள்வியை நம்ம ஊர்லே பல பேர்கிட்ட நான் கேட்காததாலே வந்த சிக்கலை நினைத்துகொண்டேன்
பேசலாம்னு சொன்னா அப்ப WI FI பத்தி கேளு அவங்க GUIDE பண்ணுவாங்க அப்புறம் எங்களுக்கு போன் பண்ணு AIRPORT லேந்துஎப்படி வீட்டுக்கு வரணும்னு சொல்லறேன்
அம்மா உங்க விடு எவ்வளவு துரம்மா
ஒண்ணும் பிரச்னை இல்லைப்பா 200 கிலோ மீட்டர்தான் TRAIN பிடிச்சு வந்திடலாம்
அய்யஹோ ஏர்போர்ட் அப்புறம் ரயில்வே ஸ்டேஷன் அப்புறம் LUGGAGE அப்புறம் ஸ்டேஷன் லேந்து வீடு
ஒண்ணும் பிரச்சனை இல்லம்மா
என்று சொல்லிட்டு போனை வைத்துவிட்டேன்
இதுக்கப்புறம் PLANE
ஆங் முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்திட்டேனே நல்ல வேளை என் பெண் எனக்கும் என் மனைவிக்கும் சாப்பாடு DIABETIC DIET என்று எழுதிக்கொடுக்கவில்லை
கொடுத்திருந்தால்
எனக்கு இத்தனை நேரம் தாடி முளைச்சு ரெண்டு கொம்பு முளைச்சு எங்கியாவது கசாப்பு கடையில் தொங்கிக்கொண்டிருப்பேன்
எப்படியோ AMSTERDAM வந்து சேர்ந்தேன்
(இதற்கு பிறகு பகுதி ரெண்டில் உள்ள இந்த பகுதியை சேர்த்து கொள்ளவும்)
நேராக கஸ்டம்ஸ் green சேனல்
எதுவும் declare செய்ய தேவை இல்லாதவர்கள் இது வழியாக செல்லலாம் என்று அறிவிப்பு
நான் போய் விடலாம் என்றேன் என் மனைவி இல்லை நாம் கஸ்டம்ஸ் போய் காட்டிவிட்டே போவோம் என்றாள் (ஹரிச்சந்திரிணி) அதுதான் Australia வில் வழக்கம் என்று விளம்பரம் வேறு இல்லாவிட்டால் நாய் வருமாம்
கஸ்டம்ஸ் செக்கிங் கூண்டுகள் எங்கே எங்கே என்று தேடி அலைந்து பார்த்துவிட்டு ஒரு வேளை green சேனல் வழியாக போனால் அவர்கள் மடக்கி பிடித்து கொள்வார்களோ என்னவோ என்று யோசித்து ஒரு பாதை வழியாக நுழைந்தோம் அதுவும் green சேனல் தான வேறு எதுவும் கண்ணில் படவில்லை
ஐயாநான் யார் கிட்டயாவது என் பொட்டியை திறந்து காட்டணுமே என்று புலம்பாமல் புலம்பிக்கொண்டு திரு திரு வென முழித்துக்கொண்டு trolley ஐ தள்ளினேன் இவ்வளவு முழிக்கிறேனே அப்ப கூட யாருக்கும் என் மேல் சந்தேகம் வரவில்லையா? ஐயா என் பெட்டியை பாருங்க சாப்பாட்டு சாமான் தவிர் வேறு எதுவும இல்லை என்று கூவ வேண்டும் போல இருந்தது எல்லாரும் என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லராங்களேன்னு கண்ணை கசக்கி கிட்டு ஒரு கதவு வழியா வெளியே வந்தா அங்கே நான் கண்ட காட்சி...........
அங்கே பார்த்தால் என் மாப்பிள்ளை கையை ஆட்டிக்கொண்டே நிற்கிறார்
மாப்பிள்ளை நீங்க எங்கே இங்கே
கஸ்டம்ஸ் லே சேர்ந்துட்டிங்களா
என்று வழக்கமாக ஒரு அசட்டுதனமான் கேள்வியை கேட்க
என் மனைவி ஒரு இடி இடித்தாள்
அப்பா நீங்க வெளியே வந்துட்டிங்க
என்று ஜெயிலிருந்து வெளி வந்த கைதியை வரவேற்பது போல வரவேற்றார்
அப்போ கஸ்டம்ஸ் எதுவுமே செக் அப் பண்ணலியே நான் உள்ள பொய் ஒருதடவை திறந்து கட்டிட்டு வந்திடட்டுமா
என்று கேட்டுக்கொண்டு TROLLEY ஐ திருப்ப
ஐயோ நீங்க AIRPORTக்கு வெளியே வந்திட்டிங்க என்று கூறி எங்களை கார் பார்கிங்க்கு அழைத்து போனார்
மணி என்ன என்று கேட்டேன்
மணி இரவு 9 ஐ காட்டியது
வெளியே பட்டப்பகல் போல வெய்யில் அடித்துகொண்டிருந்தது ஒரு வேளை இது வேற நாடோ என்ற ஐயம் என் அசட்டு மனதில் தோன்றாமல் இல்லை
இங்கே ராத்திரி பத்தரைக்கு தான அஸ்தமனம் என்று மாப்பிள்ளை கூற
உதயம்??? என்று நான் கேட்க
அது காலை 5 மணிக்கெல்லாம் ஆயிடும்
அப்ப நான் கொஞ்ச நாளைக்கு ராத்திரியே பாக்க போறதில்லையா
கவலையே படாதிங்க இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் ஒரு நாலு மணி நேரம் தான பகல் பாக்கியெல்லாம் ராத்திரிதான்
என்றார் என் மாப்பிள்ளை
பசி வயிற்றை கிள்ளியது குறிப்பறிந்து ஒரு TIFFEN CARRIER ஐ தர....
திறந்தால் எனக்கும் என் மனைவிக்கும் ரவை இட்லி தயிர்சாதம் மோர் மிளகாய்
காரில் பயனித்துக்கொண்டே எங்கள் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டோம்
இரண்டு நாட்களுக்கு பிறகு ரவை இட்லியும் தாயிர் சாதமும் மோர் மிளகாயும் அமிர்தமாக இருந்தன
இரண்டு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம்
இனி இங்கு தாங்கும் நாட்கள் ஒரு மூன்று மாதம்

Thursday, November 5, 2015



அமரர் கல்கி அவர்கள் தனது பொன்னியின் செல்வன் புதினத்தில் பல பாடல்களை அந்தந்த காட்சிகளின் தேவைகேற்ப இணைத்திருப்பார்
இந்த பாடல்களை கதாமாந்தர்கள் இசையுடன் பாடியதாகவும் அவரது நாவலின் குறிபிடப்பட்டுள்ளது.
இந்த நாவலைப் படிக்கும் பொது அந்தப் பாடல் வரிகளை நாம் இசையுடன் பாடிக்கொண்டே படித்திருக்க மாட்டோம் என்பது உண்மை
பலர் அந்த பாடல் வரிகளை படிக்காமலேயே அடுத்த பத்திக்கு சென்றிருப்பார்கள். ஆனால் ஒலிப்புத்தகங்களின் நிலைமை அப்படி அல்ல.
வசனங்களும் வர்ணனைகளும் ஒலி வடிவில் இடம் பெறும் போது
பாடல்களும் காட்சிக்கேற்ப இசை வடிவில் இடம் பெற வேண்டும் அல்லவா...?
ஆகையால் அவர் குறிப்பிட்டிருந்த எல்லா பாடல்களையும் இசை அமைத்து பாடகர்களை கொண்டு பாட வைத்து அந்தந்த பகுதியில் இணைத் திருக்கிறோம்.
தற்போது அந்த புதினத்தில் இடம் பெற்ற சில’ பாடல்களை மட்டும் ஒரு தனி ஒலித்தகடாக கொண்டு வர விருப்பப்பட்டு,பாடல் இடம் பெற்ற அத்தியாயம், எந்த காட்சியில் பாடப் பெற்றது என்ற விவரங்களுடனும் வெளியிடுகிறோம் பாடல்களுக்கு முன்னும் பின்னும் இடம் பெறும் காட்சி வர்ணனைகள் பாடல்களுக்கு இன்னும் சுவை ஊட்டுகின்றன.
கேட்டு ரசித்து மகிழுங்கள்.
விரைவில் உங்கள் கைகளில்

நெதர்லாண்ட்ஸ் பயணம் இரண்டாம் பகுதி 


வேளசேரி வீட்டிளிருந்து புறப்பட்டவுடனேயே என் மனைவி பிள்ளயாருக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு போக வேண்டுமென்றாள்
நேரமாகிக்கொண்டே இருப்பதால் வழியில் எங்காவது உடைக்கலாம் என்று நான் சொல்ல அவளும் முணு முணு த்துக் கொண்டே சரி என்க புறப்பட்டு விட்டோம்
ரெண்டு நிமிடத்திற்கு ஒரு முறை பிள்ளையாரை ஞாபகப்படுத்தினாள் சென்னையில் தெருவிற்கு தெருவு இருக்கும் பிள்ளையார் எங்கே பொய் ஒளிந்து கொண்டாரோ தெரியவில்லை இருந்த ஒரே கோவிலும் பூட்டி இருக்கவே BAMGALORE ல் பார்த்துக் கொள்ளலாமென சொல்ல அவள் முகம் இறங்கி போயிற்று
பெங்களூர் வந்தால் Airport ஞாபகமாக இருக்கவே பிள்ளையரை மறந்து போய் துபாய் FLIGHT பிடிக்க விமான நிலையம் வந்து விட்டோம் அப்போதுதான் முதல் படியை கடந்து LUGGAGE வெயிட் பார்த்து விட்டு சரியாக இருக்கவே அந்த பெண் என்னை பார்த்து உள்ளே தேங்காய் வைத்திருக்கிறிகளா என்று கேட்டாள்
எனக்கு பிள்ளையார் ஞாபகம் அப்போதுதான் சுரீர் என்று உரைத்தது என் மனைவி என்னை அர்த்த புஷ்டியுடன் நோக்கினாள் அவளுக்கு இந்த அமானுஷ்ய விவகாரங்களில் பெரும் நம்பிக்கை உண்டு
தேங்காய் எதுவும் இல்லை எனவும், அவள் மிண்டும் ஒரு முறை எங்களை பார்த்து நிச்சயமா சொல்ல முடியுமா என்று கேட்க எதிரில் GOWN அணிந்த பிள்ளையார் என் மனக்கண்ணில் முன்னால் ஒரு முறை வந்து போனார்
நிச்சயமாக சத்தியமாக என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்
என்ன நினைத்துது கொண்டிருக்கிறார்கள் இவர்கள் நான் என்ன நெதர்லாண்ட்ஸ் க்கு தேங்காய் உடைக்கவா போகிறேன் இல்ல எங்களைப் பார்த்தா அப்படி ஏன் தோணனும் என்று உள்ளுக்குள் பொருமி என் இயலாமையை ஆத்திக்கொண்டேன்
அங்கிருந்து நேராக iIMMIGRATION
என்னுடைய பாஸ்போர்டை கொடுத்தவுடன் என்னையும் என் பாஸ்போர்ட் ஐயும் மாறி மாறி பார்த்த அவன் என்ன சார் முதல் முறையா என்று கேட்க நான் இல்லை இதற்கு முன் ஆஸ்திரேலியா ஒரு முறை போயிருக்கிறேன் என்று மெல்ல பதில் சொன்னேன்
அவன் எதற்காக இந்த கேள்வியை என் முகத்தைப் பார்த்து கேட்கிறான் என்பது புரியாமல் ஒருமுறை நெற்றியை கண்ணாடியில் பார்த்து கொள்ளவேண்டும் போல இருந்தது
ஆனா இவள் 6 ம முறை என்று படையப்பா பாணியில் பதில் சொன்னேன்
அவர் கேட்டாரா என்கிற EXPRESSION ல் என் மனைவி என்னை பார்க்க (பார்க்க என்பது ரொம்ப மிதம்)
எதுக்கு சார் போறீங்க என்று அவன் கேட்க
இந்த முறை என் மனைவி முந்திக்கொண்டு மகளுக்கும் பிரசவம் என்று முடித்து வைத்தாள்
அடுத்த கேள்விக்கு நான் தான் பதில் சொல்வேன் என்று QUIZMASTER ஐ எதிர் நோக்கும் மாணவன் போல கை தூக்க தயாராக இருந்தேன்
எத்தனை மாசம் என்றார்
எட்டு என்று சடாலென பதில் சொல்ல
அவர் பாஸ்போர்ட் ஐ கிழே போட்டு விட்டார்
என்ன சார் விசாவே 90 நாள் தான் எப்படி.......என்று இழுக்க
என் மனைவி மறுபடியும் குறுக்கிட்டு (என் விஷயத்தில் குருக்கிடுவதே அவள் வழக்கம்)
அவர் தப்பா சொல்லறார் (பல சந்தர்ப்பங்களில் உளறுகிறார் என்று சொல்லுவாள்)
இன்று என்ன MOOD ஓ தெரியவில்லை நாங்க போறது 3 மாசத்துக்குதான் என் பொண்ணுக்குதான் எட்டு மாசம் என்று திருத்தினாள்
அவர் முகத்தில் முதல் முறையாக ஒரு புன்னகை பார்த்தேன்
பட்டு பட்டு என்று ரெண்டு பாஸ்போர்டிலும் ஸ்டாம்ப் குத்திவிட்டு போங்க என சொல்ல இந்த COUNTER ல் இருந்து புற்றப்பட்டால் போதுமென திரும்பி போக சார் அப்படி போனா வெளியே போய்டுவிங்க இப்படி உள்ளே போங்க என்று என்னை திசை திருப்பினார்
அங்கிருந்து புறபட்டு நேரடியாக கஸ்டம்ஸ் சோதனை
நான் உள்ளே போகும் போதெல்லாம் அது கி.. கி என்று கதற துவங்கியது என்னடா மும்பைக்கு வந்த சோதனை என நினைத்து ஒரு முறை பெல்டை கழட்டினேன் அடுத்த முறை பையிலிருந்தசாவியை எடுத்தேன் அடுத்து பையிலிருந்த காசை எல்லாம் எடுத்து கொட்டினேன் காசெல்லாம் பார்த்தவுடன் அது வாயடைத்து போய்விட்டது
இந்த சோதனையிலும் வெற்றி ஆகா என மகிழ்ந்து ஒரு வழியாக விமானத்தை வந்து அடைந்தோம் சின்ன வயதிலிருந்தே ஜன்னல் ஓர இருக்கையை ஓடி பிடித்து அமர்ந்தவனுக்கு சரியாக மையத்தில் நாடு இருக்கையாக அமைந்தது ஏமாற்றம் தான்
பசி வயிற்றை கிள்ளியது
விமானம் புறப்படத் தயாரானது
ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தவுடன் ஒரு பெண் நீங்கள் VEGETARIAN ஆ என்று கேட்டு விட்டு சென்றாள்
அருகில் உள்ளவர்களுக்கெல்லாம் தட்டு நிறைய ஏதேதோ நிரப்பி வைத்தார்கள் வேஜிடேரியன் தட்டு வந்தது முன்னால் கொடுதவற்றில் பாதிய காணோம்
எனக்கோ கொலை பசி
திறந்து பார்த்தால் என் மனைவி தினமும் காக்காய்க்கு வைக்கும் அளவிற்கு சாதம் ஒரு சரவணா பவன் சாம்பார் கப்பை விட குறைந்த அளவிற்கு ஒரு கூட்டு கொஞ்சம் SALAD ஒரு பொறை அளவிற்கு பன் ஒரு ஸ்வீட் இவ்வளவுதான் எங்கள் மதிய உணவு
யோசித்து பார்த்தால் நாம் வீட்டில் நிறையவே சாப்பிடுகிறோம் என்ற நினைவை அகற்றாமல் இருக்க முடியவில்லை
அடுத்து துபாய் விமான நிலையம்
நிறைய விமானங்கள் நின்று கொண்டிருந்தன இறங்கினவுடன் என் சீனியர் PARTNER நாம இப்போ டெர்மினல் 3 GATE நம்பர் 2 லே AMSTERDAM FLIGHT பிடிக்கிறோம் எண்று ஸ்ரீஹரி கோட்டா விஞஞானி போல கூறினாள்
அடுத்த flight புறப்பட 2 மண் இ நேரம் இருந்தது கொஞ்சம் நேரம் கிடைத்தால் போதுமே காபி சாப்பிட விழையுமே நாக்கு.......காபி சாப்பிடலாமென ஒரு காபி கடைக்கு முன்னால் போய் நின்றால் அங்கு ஏகப்பட்ட காப்பிகள்
எந்த காபியை அர்ந்துவது என யோசித்து அவர்களிடம் coffee with milk என்று சொல்ல அவரைவிட உயரமான ஒரு கப்பில் (அவர் ஒரு சீனாகாரர்) காபியையும் நுறையையும் கலந்து அளித்தார்
ரெண்டு காபி வூட்லண்ட்ஸ் விலையில் 60 ரூபாய் என கணக்கு பண்ணி எவ்வளவு என்று கேட்க 9.5 யுரோ என்றார் உடனே CALCULATOR எடுத்தேன் 700 ரூபாய் நம்ம ஊர கணக்குக்கு வந்தது
எவ்வளவு குடித்தோமோ அதற்கு கழித்து கொண்டு மிதியை தந்து விடுவார்களா என கேட்கவில்லை
ம்ம்ம்ம் கையிலிருந்த 50 ஐரோ வில் 10 காலி
அப்புறம் AMSTERDAM விமானம் பிடித்து ஒரு வழியாக 7 மணி நேரம் பயனித்து வந்து சேர்ந்தோம் இதற்கிடையில் என் மனைவி sound of music மற்றும் சில படங்களை பார்த்து முடித்திருந்தாள்
விமான நிலையத்தில் இறங்கியவுடன் என் மனம் பக் பக்
இங்குதான் கஸ்டம்ஸ் செக்கிங் எல்லாம் ஒவ்வொரு பெட்டியாக எங்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது பார்பதற்கு எல்லாமே ஒரே மாதிரி இருக்க எங்கள் பெட்டியை எப்படி எடுப்பது என்று ஒரு பதைப்பில் இருக்க அதோ பாருங்க நம்ம பெட்டி என்றாள்
எப்படி இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சே
நீங்க எழுதி ஒட்டினது எவ்வளவு அசிங்கமா தொங்குது பாருங்க என்று நான் செல்லோடேப் போட்டு காயத்துக்கு BANDAGE போல ஒட்டியிருந்த பேப்பர் ஐ காட்டினாள்
எல்லாவறையும் எடுத்துக் கொண்டு நேரே iIMMIGRATION
அங்கே எங்கள் return டிக்கெட் மட்டும் பார்த்து விட்டு stamp போட
இனிமேல்தான் கஸ்டம்ஸ்
என் மனக்கண்ணின் முன்னால் நாங்கள் வாங்கி வந்த புளியும் ஊறுகாயும் முறுக்கும் அரிசி மாவும் சின்னா பின்னா படபோவதை எண்ணி கண் கலங்கினேன்
நேராக கஸ்டம்ஸ் green சேனல்
எதுவும் declare செய்ய தேவை இல்லாதவர்கள் இது வழியாக செல்லலாம் என்று அறிவிப்பு
நான் போய் விடலாம் என்றேன் என் மனைவி இல்லை நாம் கஸ்டம்ஸ் போய் காட்டிவிட்டே போவோம் என்றாள் (ஹரிச்சந்திரிணி) அதுதான் Australia வில் வழக்கம் என்று விளம்பரம் வேறு இல்லாவிட்டால் நாய் வருமாம்
கஸ்டம்ஸ் செக்கிங் கூண்டுகள் எங்கே எங்கே என்று தேடி அலைந்து பார்த்துவிட்டு ஒரு வேளை green சேனல் வழியாக போனால் அவர்கள் மடக்கி பிடித்து கொள்வார்களோ என்னவோ என்று யோசித்து ஒரு பாதை வழியாக நுழைந்தோம் அதுவும் green சேனல் தான வேறு எதுவும் கண்ணில் படவில்லை
ஐயாநான் யார் கிட்டயாவது என் பொட்டியை திறந்து காட்டணுமே என்று புலம்பாமல் புலம்பிக்கொண்டு திரு திரு வென முழித்துக்கொண்டு trolley ஐ தள்ளினேன் இவ்வளவு முழிக்கிறேனே அப்ப கூட யாருக்கும் என் மேல் சந்தேகம் வரவில்லையா? ஐயா என் பெட்டியை பாருங்க சாப்பாட்டு சாமான் தவிர் வேறு எதுவும இல்லை என்று கூவ வேண்டும் போல இருந்தது எல்லாரும் என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லராங்களேன்னு கண்ணை கசக்கி கிட்டு ஒரு கதவு வழியா வெளியே வந்தா அங்கே நான் கண்ட காட்சி......

Saturday, October 31, 2015

Netherlands பயணம்:::

.....................................................................................................................
என்னுடைய நெதர்லாண்ட்ஸ் பயணம் ஒரு மாதத்திலிருந்தே சூடு பிடித்து விட்டது என்னென்ன கொண்டு போக வேண்டும் எப்படி PACK செய்ய வேண்டும் என அவ்வப்போது என் மகள் போனில் சொல்லிக் கொண்டிருப்பாள் தினமும் ஒவ்வொரு மளிகை பொருளாக சேர்ந்து கொண்டே இருந்தது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ITEM
நானும் என் மனைவியும் எதோ புதுக்குடித்தனம் போவது போல ஒவ்வொன்றொன்றாக சேமித்து கொண்டிருந்தோம் இதற்கு இடையில் அவ்வப்போது 60 KILO விற்கு மேல் ஒரு ஒரு கிராம் கூடினால் கூட EMIRATES ல் ALLOW பண்ண மாட்டான் என்று ஒரு நாள் போன்
90 கிலோ எடையை ஒரே மாதத்தில் எப்படி குறைப்பேன் என்று நான் யோசித்து கொண்டிருக்கையில் என் மனைவி அது LUGGAGE எடை என்று நினைவுட்டினாள்
இரண்டு பெட்டி நிறைய அரிசி மாவு பருப்பு வகயராக்கள் புளி மிளகைபோடி என ஏகப்பட்ட ITEMS இதற்கு இடையில் 3 மாதம் தங்குவதற்கு தேவையான உடைகளுக்கு இடம் எங்கே இருக்க போகிறது என்று என் கவலையை தெரிவிக்க மகள் நீங்கள் வரபோவது டெலிவரிக்கு 3 மாதம் எங்கே வெளியே போகப்போகிறிகள் என்று ஒரு முன்னெச்சரிக்கை பதில் வைத்திருந்தாள்
எப்படியோ சமாளித்து கொஞ்சம் உடைகளை எடுத்து வைத்து அவ்வப்போது கிழ் விட்டிளிர்துந்து எடை MACHINE வாங்கி வந்து (அவர்கள் அட்கிக்கடி துபாய் லண்டன் என்று போய் வருகிறார்கள் வேறு எதற்கு இரண்டு பெண்களுக்கு பிரசவம் பார்க்கத்தான் ) எடை பார்த்து ஒவ்வொரு நாlளும் தேறிவரும் நோயாளியை போல பெட்டி எடை கூடிக்கொண்டே வந்தது இதற்கு இடையில் வாங்கி வந்த அரிசி மாவு அரைத்து வந்த மிளகாய்பொடி காபி போடி எல்லாம் அப்படியே எடுத்து போக முடியுமா இதற்கென்றே பிரத்யேகமாக MYLAPORE ல் ஒரு PACKING கடை இருக்கிறது அங்கு போய் இதை எல்லாவற்றையும் (கொட்டி) கொடுத்து விட்டால் அவர் கைதேர்ந்த கஸ்டம்ஸ் அதிகாரி போல நமக்கு விளக்கமாக எடுத்து சொல்லி அழகாக வெள்ளி பேப்பர் பிளாஸ்டிக் பேப்பர் என உருட்டி தருகிறார் அவற்றை கொண்டு வந்து நமது பேண்ட ஷர்ட் புடவை முதலியவற்றை சுற்றி வைத்து PACKING செய்து விட்டேன்
வெறும் டிரஸ் என்று மட்டுமில்லாமல் அதற்கு ஒரு PURPOSEவந்து விட்டது அல்லவா? மறுபடியும் எடை பார்க்க 63 கிலோ காட்டியது
இப்போது எதை நீக்குவது என்று யோசிக்க என் மனைவி என்னை ஒரு முறை பரிதாபமாக பார்க்க தாயே நாலு மாசத்துக்கு நாலு PANT எடுத்திருக்கேன் எனக்கு முக்கால் PANT எல்லாம் போட்டு பழக்கமில்லை என நான் கேவலமாக விழிக்க ஒரு புளி பாக்கெட்டை எடுத்து விடுவது என முடிவு செய்து கழித்தல் ஒரு 2 கிலோ தேறியது இன்னும் GRAND SWEETS முறுக்கு MIXTURE கிருஷ்ணா ஸ்வீட்ஸ் MYSORE PAK என இடம் வேண்டும் என்று யோசித்து யோசித்து எடுக்கப்போக இறுதியில் பெட்டி முழுவதும் எங்களது 3 மாத தேவைக்கான மருந்துகளும் என் மனைவயின் இன்சுலின் பாட்டில்களும் வாங்கிப்போகும் மளிகை சாப்பாட்டு சாமான்களும் தான் மிச்சமிருந்தன
இடை இடையிடையே கொஞ்சம் துணி வகைகள் குறிப்பாக என் பனியன் ஜட்டி போன்றவை)
இதற்கிடையில் இன்சுலின் ஊசிகள் எடுத்து செல்லலாமா தீவிரவாதிகள் என்று எங்களை ஜெயிலில் போட்டு சித்திரவதை செய்து விடுவார்களோ என்ற பயங்கர நினைவுகள் வேறு
DIABETIC டாக்டரிடம் சென்று ஒரு CERTIFICATE வாங்கிக்கொண்டேன் மகள் எதற்கும் எமிரேட்ஸ் ல் சொல்லிவிடு என்றாள் எமிரேட்ஸ் மும்பைக்கு போன் செய்து என் மனைவி சுகர் PATIENTஎன்றும் இன்சுலின் மருந்து எடுத்து செல்ல வேண்டுமென்றும் சொல்ல அவர்கள் ஒரு நாள் தேவை மட்டும் கையில் கொண்டு செல்லுங்கள் மீதி BAGGAGE செக் பண்ணி விடுங்கள் என்றார்கள்
திடிரென ஒரு சந்தேகம் ஒரு வேளை BAG காணமல் போய் விட்டால்........அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு எங்கள் விமானத்தில் வராமல் போய்விட்டால் என்ன செயவது என்று ஒரு பயம் ஏற்பட்டது அதனால் என்ன ஆனாலும் ஆகட்டுமென ஒரு வாரத்திற்கான மருந்துகளை HAND LUGGAGE எடுத்து செல்வது என முடிவு செய்து ஒரு எக்ஸ்ட்ரா BAG ஐயே கழித்து கட்டிவிட்டு எல்லாவற்றையும் 3 பெட்டியில் PACK செய்து கொண்டு புறப்பட்டோம்
எனக்கோ இது இரண்டாம் முறை தான் வெளி நாடு செல்வது என் மனைவி என்னை விட சீனியர் முதல் மகளுக்கு பிரசவம் பார்க்க சென்ற அனுபவம்
அதனால் அவள் AIRPORT வந்தவுடன் எனக்கு எதுவும் தெரியாது என்ற பாணியில் எனக்கு முன்னால் நடந்து சென்று ஒவ்வொரு COUNTER ஆக போனாள் எனக்கு வரிசையில் நிற்கும் போதெல்லாம் ஒரு சின்ன நடுக்கம் கஸ்டம்ஸ் நாய் வந்து குதருவது போல கற்பனை ஓடியது பெங்களூர் AIRPORT ல் எமிரேட்ஸ் கவுன்டரில் வரிசையில் நின்று என் மகளின் வாயில் நுழையாத நெதர்லண்ட்ஸ் விலாசத்தை எழுதி எழுதி பெட்டிகளில் கட்டிக்கொண்டிருந்தேன்
வந்தாச்சு கவுன்ட்டர் அருகே ஒருவன் இளைஞன் ஒருத்தி சின்ன பெண்ண இந்த பெண்ணைப் பார்த்தால் கேள்வி எதுவும் கேட்கமாட்டாள் போல தோன்றியது கவுண்ட்டர் அருகே வந்ததும் அவள் எங்கள் பெட்டியெல்லாம் எடை பார்க்க எதையெல்லாம் இங்கே தரையில் உட்கார்ந்து பிரித்து போட்டு தூக்கி எறிய வேண்டுமோ என யோசித்து கொண்டிருக்கையில் சரியாக 61 கிலோ காட்டியது
EXCESS BAGGAGE எதுவும் கேட்கவில்லை
அடுத்து அவள் கேட்ட கேள்வி ஒன்றுதான் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது ஏண்டி எங்களை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டே ன்னு கோபப்பட வைத்தது
சென்னை தொலைகாட்சி நிலையம் (தூர்தர்ஷன் சென்னை) நாற்பது ஆண்டு காலம் நிறைவு செய்கிறது அழைப்பிதழ் வந்தும் சென்னையில் இல்லாத காரனத்தால் செல்ல முடியவில்லை எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமை இந்த நிலையில் உண்டு
தொலை காட்சி நிலையம் தொடங்கிய முதல் நாள் நிகழ்சிகளில் (15 ஆகஸ்ட் 1975)இடம்பெற்ற நாடகத்தில் அடியேனும் பங்கு பெற வாய்ப்பு கிட்டியது
"வாலிபம் திரும்பினால்"என்ற அந்த நாடகத்தை வெங்கட் எழுதினார்
திரு YGP அவர்களின் UAA குழு பங்குபெற்ற அதில் திருவளர்கள் YGP, ARS,YG மகேந்திரன் சேது
SR சிவகாமி ஆகியோருடன் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது இன்றளவும் மிகவும் பெருமையாக இருக்கின்றது
இந்த நாடகத்தை என்னை முதன் முதலாக மேடை ஏற்றிய திரு TS NARAYANASAMI (ETHIROLI நாராயணசாமி என்று தொலை காட்சியில் அக்காலத்தில் புகழ் பெற்றவர்) தயாரித்திருந்தார்
எனக்கும் இது தொலைகாட்சி நடிப்பிற்கு நாற்பதாவது ஆண்டுதானே தானே
இந்த நாடகம் தொலை காட்சியின் ARCHIVEல் இருக்குமா என தெரியவில்லை
வாழ்த்துக்கள் தூர்தர்ஷன்!!!! பொன்விழா காணப்போகும் உங்களுக்கு
அந்த பொன்னான காலம் மீண்டும் வருமா என ஏங்குகிறேன்
பொன்னியின் செல்வன் பார்த்திபன் கனவு போன்ற ஒலி புத்தகங்கள் வெளியிட்டு விழாக்களில் எனக்கு பெரிதும் பக்க பலமாக இருந்த வரும் அந்தவிழாக்கள் வெகுசிறப்புடன் அமைய பெரும்காரணமாக இருந்தவருமான எனது நண்பர்ஒருவரைப் பற்றிஇது வரை எழுதாமல்இருந்து விட்டேன்
BETTER LATE THAN EVER
இவரை எனக்கு அறிமுகப் படுத்தியவர் திரு Evr Mohan அவர்கள் இருவரும் ஒரே வங்கி
இவரை நான் முதன் முதலில் சந்தித்தது இவர்வேலை பார்த்து வந்த STATE BANK OF NDIA பாண்டிச்சேரி அலுவலகத்தில்
முதன் முதலில் சந்தித்த உடனேய நாங்கள் மிகவும் நெருங்கி விட்டோம அவ்வளவு எளிமையாக இருந்தார்
கவிஞர் எழுத்தாளர் வங்கி அதிகாரி என்ற பல முகங்கள் அவருக்கு
பின்னர் ஒருநாள் இரு வீடு ஒரு வாசல் DVD வெளியிட்டிற்கு பிறகு அவரை அவரது கோபாலபுரம் அலுவலகத்தில் சந்தித்தேன
DVD பற்றி கூறிய வினாடியே அந்த கிளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக சில dvd களை வாங்கிக் கொண்டு எனது வியாபாரத்தை துவக்கி வைத்தவர் அவர்.
அது மட்டுமா என்னை சென்னையில் எல்லா கிளைகளுக்கும் அறிமுகப் படுத்திவைத்து எனக்கு உற்சாகம் அளித்தவர் அவர்
அவரது உதவி மனப்பான்மையினால் பயனடைந்தவர்கள் பலர்
இது ஒரு நல்லபரிசு பொருளாக வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் என்பதை தான் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் எனக்கு ஒரு பாராட்டு கடிதமும் வழங்கி கௌரவித்தார்
இவர் அளித்த ஊக்கம் தான் எனக்குமே;லும் மேலும் DVD க்கள் தயாரிக்க பெரிதும் தைரியத்தைக் கொடுத்தது பின்னர்ஒருநாள் நான் அரவிந்த அன்னையின் பாடல்கள் தயாரிக்க முற்பட்ட போது எனக்காக பல பாடல்களை எழுதிக் கொடுத்து அந்த ஒலிIத் தொகுப்பு பெரிதும் வெற்றியடைய உறுதுணையாக நின்றவர் அன்னையின்பக்தர்
அவர் அன்னையைபற்றி பல கட்டுரைகளை எழுதியவர் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கட்டுமேஎன நான் ஆசைபட்டது சமையல் DVD
SUPERSAMAYAL என்ற பெயரில் நான்வெளியிட்ட DVD ல் இருந்த அத்தனை சமையல் குறிப்புகளும் அவர் மனைவியின் கைவண்ணம்
இவர் சாந்தி விஜய கிருஷ்ணன் என்றபெயரில் டிவி பத்திரிக்கைகளில் மிக பிரபலம்
என்னுடைய தயாரிப்பான எனது முதல்ஒலிப்புதகம் SAIBABA வாழ்க்கை சரித்திரத்தில் குரல் கொடுத்த நால்வரில் ஒருவர்
பாக்கியம்ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் DVD க்கு TITLE SONG இவர் கற்பனையில் உதித்த அழகியபாடல்
கவித்துவமாகவும் நகைச்சுவையாகவும் எழுத முடியுமென நிருபித்தவர் ஆச்சி மனோரமா நடித்த ஆட்சி மாற்றத்திலும் இவரது பாடல்தான்
இப்படி எனனுடைய ஒவ்வொரு தயாரிப்பிலும் இவரது பங்கு பெரிது
இவை எல்லாவற்றிற்கும் மேல் பொன்னியின் செல்வன் வெளியிட்டன்று வந்திருந்த கூட்டத்தை நாற்காலிகளில் கட்டிப் போட்டது இவரது சுவை மிக்க வர்ணனை இன்று எல்லோரும் விழாவைப்பற்றி பேசும் போது இவரைக் குறிப்பிட்டு ஓரிரு வார்த்தைகள் சொல்லாமல் இருக்க மாடார்கள்
இதே போல பார்திபன் கனவுவெளியிட்டு விழாவிலும் இவரது தொகுப்புரை விழாவிற்கே ஒருசிகரம்
அதை மேடையிலே பாராட்டியவர்கள் சிவசகரி இந்திரா சௌந்தரராஜன் போன்ற எழுத்தாளர்களும்ம் ARS வைஜெயந்திமாலா போன்ற கலைஞர்களும் நல்லி செட்டியாரும் ஆவார்கள்
அப்படிப்பட்ட ஒரு சிறந்த நண்பரை எனக்கு அளித்த இறைவா உனக்குநன்றி
ஓ யாரென்று சொல்லவில்லை அல்லவா
வேறு யார்
கவிஞர் பட்டிமன்ற பேச்சாளர் நாவலாசிரியர் சென்னை தொலை காட்சியில் செய்தி வாசிப்பாளர் வங்கிஅதிகாரி போன்ற பன்முகங்களைக் கொண்ட என் இனிய நண்பர் திரு Vijayakrishnan Seshadri அவர்கள்தான்
மிக்க நன்றி கடன் பட்டிருக்கிறேன் சார்
நன்றி நன்றி நன்றி
இவரது நாவல் கடல் நிலம் தனுஷ்கோடி புயல் பின்னணியில் எழுதப்பட்டது
மிக பிரபலமான ஒன்று
இவரிடம் TIME MANAGEMENT பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென நானும மோகனும் அடிக்கடி பேசிக் கொள்வோம்
ஓரிரு வேலைகள் இருந்தாலே நேரமில்லை என்று சொல்லும் என்னை போன்றவர்கள் இவரிடம் அது கற்றுகொள்ளவேண்டிய பாடம் பல முறை கேட்டுப் பார்த்துவிடேன் சிரித்து விட்டார் அடுத்தது எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கொஞ்சமும் ஸ்ட்ரெஸ் ஆகாமல் சிரித்த முகத்துடன் வங்கிப் பணியை கவனிக்கும் நேர்த்தி இதையெல்லாம் நான் பார்த்து வியக்காத நாளே இல்லை
நான் சமீபத்தில் பார்த்த கேட்ட நகைச்சுவை நாடகங்களில் எந்த வசனமெல்லாம் சிரிப்பு வரவழைக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறாகளோ அங்கேயெல்லாம் டொய்ங் டொய்ங் என்று இசையால் இம்சித்தார்கள்
இந்த மாதிரி வாசிப்பு எல்லாம் ஒரு 30 அல்லது 40 வருஷத்திற்கு முந்தய சமாசாரம் அதை இன்னும் ஏன் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள் என தெரியவில்லை மக்களை சிரிக்க வைக்க (எப்படியாவது)
இது ஒரு வழி என நினைக்கிறார்களா??
நமது நகைச்சுவை நாடகங்களில் இன்னும் ஒன்று நான் பார்த்தது நகைச்சுவை பாத்திரங்களில் நடிப்பவர்களே தங்களை அஷ்ட கோணலாக்கிகொண்டு நான் காமெடியன் என்று தனக்கும் மற்றவர்களுக்கும் அடிக்கடி நினைவூட்டுவது அந்த பாத்திரத்தை மிக செயற்கையாக்கி மிகைபடுத்தி நடிப்பது
மற்றொன்று சில நடிகர்கள் ஜோக் அடித்து விட்டு முதலில் அவர்களே அதற்கு சிரித்துவிடுவார்கள் பின்னர் பார்வையாளர்கள் follow suite,,,,
A SNUFF BOX NEVER SNEEZES
சமிபத்தில் ஒரு ஆங்கில நகைச்சுவை படம் ஒன்று பார்த்தேன் அருமையான நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த ஒருவர் கடைசி வரை அவர் சிரிக்க வில்லை அமைதியாக பார்பவர்களை மிகையாக சிரிக்க வைத்தார் என்றால் அது மிகை ஆகாது
என் தந்தையும் நானும்
என் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் போது எதாவது வேண்டுமென்று அழுது அடம் பிடித்தால் என் அப்பா உடனடியாக அதை வாங்கித் தரவேண்டுமென சிபாரிசு செய்வார்ட்
அப்பா குழந்தையை செல்லம் கொடுத்து கெடுக்காதீர்கள் என்று சொன்னால்
குழந்தை அழுதுடா போனால் போகட்டுமே என்பார்
அதே குழந்தைக்கு 5 வயது ஆகும்போது அதன் பின்னாடியே shoe போட uniform போட்டு விட ஓடுவார் 
அதன் ஸ்கூல் bag ஐ தூக்கிக்கொண்டு போய் ரிக்க்ஷாவில் வைப்பார்
காலையில் அதற்கு பல் தேய்த்து விடுவதிலிருந்து எல்லாம் அவர் உபயம்தான்
அப்பா அவனை INDEPENDANT ஆ வளக்கணும்னு சொன்னா ஒப்புகொள்ள மாட்டார்
போடா நீ சின்ன வயசுலே என்ன பண்ணே சொல்லட்டுமான்னு மானத்தை வாங்குவார்
10 வயதில் என் பையன் பள்ளியிலிருந்து வரும் வரையில் வாசலிலே இருந்து அவன் விசிறி எறியும் புத்தக மூட்டைகளை சாப்பாடு கூடைகளை சுமந்து வருவார்
தாத்தாவிற்கு தொந்தரவு தரக்கூடாது நீதான் எடுத்து வரவேண்டும் என்று கண்டித்தால் குழந்தை எதிரிலேயே நம்மை கண்டிப்பார் பாவம்
குழத்தை TIRED ஆ வருவான் போனாப் போறது விடு என்று அவர் கூற குழந்தை என்னைப்பார்த்து பரிகசிக்கும் அப்பா மேல் கோபம் கோபமாகக் வரும்
பையன் பள்ளியிலிருந்து வருவர்தற்கு நேரமானால் வாசலிலேயே காத்திருப்பார்
அப்பா வருவான் என்று சொன்னால் கேட்க மாட்டார்
நேரம் ஆகுதுடா என்பார்
இதே போலத்தான் நான் அலுவலகம் சென்று திரும்பி வர கொஞ்சம் காலதாமதம் ஆனால் என் கார் விட்டு வாசல் தொடும் வரை BALCONY லேயே நின்று கொண்டிருப்பார் இரவு நேரமானால் துங்க போக மட்டார் எதாவது போன வந்ததா என என் மனவியை அரித்து விடுவார்
வீட்டிற்கு வரும்போது அவர் பால்கனியில் நிற்பதை பார்க்க கோபம் கோபமாக வரும் என் தலையை பார்த்தவுடன் ஓடிப்போய் பெட்ரூமில் ஒளிந்து கொள்வார கேட்டால் பாசமென்பார்
வெளியூர் போனால்; தினமும் தொலைபெசவேண்டும் இல்லைஎன்றால என் மனைவி பாடு அவ்வளவுதான் என் அம்மா அப்படியல்ல கொஞ்சம் தைரியம் அதிகம்
அப்பாவை அப்பப்ப அடக்கி வைக்க வேண்டும் என்று கடிந்து கொள்வார்
நாம் 10 ரூபாய்க்கு தோசை சாப்பிட்டால் விலை ரொம்ப அதிகம் என்று சொல்லி அவர் காலத்து தோசை விலையை சொல்லி அந்த காலத்து கோல்ட் விலை நிலம் விலை வீட்டு விலை எல்லாம் சொல்லி பொறுமையை சொதிப்பார்
அப்பா அந்த காலம் வேற இந்த காலம் வேற என்றால் ஒப்புகொள்ள மாட்டார்
இன்று எனக்கு 64 வயசு
பால்கனியில் நின்றிருக்கிறேன்
என் மகன் அவன் குழந்தைகளை நான் ரொம்ப செல்லம் கொடுத்து கெடுப்பதாக கோபப் படுகிறான்
அடேடே மணி நாலாச்சு இன்னும் குழந்தை ஸ்கூல் லேந்து வரலை ஆடடோ ரிக்ஷா வரலியே என்னாச்சு என் பையன் வெளியூர் பொய் நாலு நாள் ஆச்சு இன்னும் ஒரு போன் வரலை பொறுப்பில்லாம இருக்கான்
DINING டேபிள் மேலே SARAVANA BHAVAN பிளாஸ்டிக் டப்பாவிலே 75 ரூபாய் கொடுத்து ஒரு ரவா தோசை வாங்கி வச்சிருக்காங்க ரொம்ப அநியாயம் அப்பெல்லாம் ஒரு தோசை விலை வெறும் பத்து ரூபாய்
ஏம்மா வசந்தி எதாவது போன் வந்ததாம்மா என்று என் மருமகளை அழைக்கப் போகிறேன்
என் மனைவி என் இப்படி முறைக்கிறா;ள்???
என் அப்பா நினைவு வந்தது
பெயர் ரகசியம்
என்னை எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்வி உங்களுக்கு ஏன் பாம்பே கண்ணன் என்று பெயர் என்பதுதான்
இதையே பல பத்திரிக்கை அன்பர்களும் கேட்டுள்ளார்கள் பேட்டிியிலும விளக்கம் அளித்திருக்கிறேன்
இருந்தும் இங்கு விளக்கம் தருவது என் கடமையாகிறது
முதலில் ஒரு உண்மையை சொல்லிவிடுகிறேன் இந்த பெயர் எனக்கு நானே வைத்துகொண்ட பெயரோ அல்லது காரண பெயரோ அல்ல
நான் பிறந்த ஊரும் பாம்பே அல்ல கொஞ்ச நாட்கள் அங்கே வசித்து இருக்கிறேன் அவ்வளவுதான் நானும் சென்னை வாசிதான் இன்னும் சொல்லப்போனால் மன்னார்குடி கண்ணன் என்றோ அல்லது நாகை கண்ணன் என்றோ பெயர் மிக பொருத்தமாக இருந்திருக்கும்
சென்ட்ரல் வங்கியில் வேலை பார்த்து கொண்டிருந்த எனக்கு PROMOTION என்ற பேய் பயங்கரமாக அறைய நான் சென்று விழுந்த ஊர் பம்பாய் அதற்கு முன்னால் சுமார் 7 வருடங்கள் திரு YGP அவர்களின் குழுவில் சிறிய வேடத்தில் துவங்கி சற்றே பெரிய வேடம் வரை வந்திருந்த நான் தொலை காட்சியிலும் வானொலியிலும் கொஞ்சம் பிரபலம்
1977 வருடம் நான் அந்த குழுவிலிருந்து விலகி நாடகம் எதுவும் நடிக்காமல் இருந்தேன் அப்போதுதான் BANK OF INDIA சீனா தயாரித்த வெங்கட் எழுதிய யாமிருக்க பயமேன் என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது அருளியவர் சீனா அந்த நாடகத்தை பற்றி வீ எஸ்வீ அவர்கள் விமர்சனத்தில் பாம்பே கண்ணான் நடிப்பில் நல்ல வேகம் தெரிகிறது என்று குறிப்பிட்டிருந்தார்
எதோ சில காரணங்களுக்காக அந்த நாடகம் 20 காட்சிகளையே தொட்டது இந்த நேரத்தில் தான் எனக்கு பதவி உயர்வு மாற்றலோடு வந்து சேரவே போதும் இந்த கலைப்பணி இனி சென்னை திரும்பி வந்தால் ஒரு AGM/DGM ஆக திரும்பி வருவது என முடிவு செய்து கையிலிருந்த ஸ்கிரிப்ட்களை எல்லாம் ( நான் அப்போதே நாடகம் தொலைகாட்சிக்கு எழுத துவங்கி இருந்தேன்அதை பற்றி பின்னல் எழுதுகிறேன்) எடுத்து ஒரு பரணில் அடுக்கிவிட்டு bank சம்மந்தப்பட்ட புத்தகங்களாக எடுத்து கொண்டு பம்பாய் செல்ல தீர்மானித்தேன்
இந்த நேரத்தில் விதி என்னைப்பார்த்து சிரித்தது எனக்குக் தெரியாது
எதோ ஒரு கதையில் வரூமாமே எங்கு போனால் ஒருவன் சாவிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறானோ அங்குதான் அவனுக்கு விதி காத்திருக்கிறது என்று எமன் சொல்வாராமே அப்படித்தான் பாம்பே சென்றேன நான்
முதலில் பம்பாயில் பார்த்தது லிப்டில் கூட புட்போர்டில் தொங்கிக்கொண்டு செல்லும் கூட்டம்
SUN THEATRE ல் புதுப்படமாக பார்த்து கொண்டிருந்த நான் அங்கு சக்ரதாரிக்கு கூட அட்வான்ஸ் BOOKING செய்ய வேண்டி இருந்தது சரி அந்த நிகழ்வுகளை அப்புறம் பார்ப்போம் இப்பொது முதலில் பெயருக்கு வருவோம்
வருடா வருடம் 40 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு சென்னை விஜயம்
என்னதான் நாடகம் வேண்டாமென்று நினைத்தாலும் நாடக நண்பர்களையும் நாடகங்களையும் பார்க்கும் ஆசை விட்டு விடுமா
இன்றும் என் மனைவி சொல்லி காடடும் ஒரு விஷயம்
ஒவ்வோறு வருடமும் 40 நாட்கள் சென்னை வருவதற்கு பதிலாக 10 நாட்கள் ஊர் சுற்றி இருந்தால் கூட மகாராஷ்டிரா முழுக்க பார்த்திருக்கலாம் என்பதுதான்
இப்போது LFC இல்லாமல் சொந்த செலவில் அஜந்தா எல்லோரா கோல்ஹாபூர் என்று மனைவியை அழைத்துக்கொண்டு போய் வருகிரேன்
வருடா வருடம் சென்னை போகும்போதெல்லாம் நான் கண்ணன் வந்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் போன் செய்து குறிப்பாக பம்பாயிலிருந்து என்று சொல்லுவேன் எல்லோரும் பம்பாயிலிருந்து வந்திருக்கும் கண்ணனை பார்க்க பேச ஒஎறு குடுவோம் அல்லது பம்பாயிலிருந்து வந்திருக்கும் கண்ணன் எல்லோரையும் பார்க்க விடு விடாக அலைவான்
நடுவில் சில பக்கங்களை மறந்தவிட்டு ஒரு 7 வருடம் தாண்டி விடுவோம்
1985 ள் நான் சென்னைக்கு மாற்றல் வாங்கிகொண்டு வந்து விட்டேன் அந்த வருடம் சீனா மிண்டும் யாமிருக்க பயமேன் நாடகம் போடுவதாக அறிவித்து என்னை நடிக்க வைத்தார்
அந்த நாடகம் அரங்கேறறமான அன்று காலையில் ஒரே அதிர்ச்சி ஹிந்து பேப்பரில் என் பெயர் பாம்பே கண்ணன் நடிக்கும் என்று வந்திருந்தது
அந்த நேரத்தில் சென்னை குழுக்களில் பல கண்ணண்கள் குறிப்பாக பவித்ராலயா கண்ணன் கவர்ச்சி வில்லன் கண்ணன் செந்தாமரை கண்ணன மேக்கப் கண்ணன் எழுத்தாளர் வேதம் கண்ணன் என்று பலர் புழங்கிகொண்டிருந்ததால் இந்த பெயரில் அழைக்க பட்டேன் அவ்வளவுதான்
இருந்தும் எனக்கு என்னவோ கூச்சமாக இருந்தது இப்போது பழகிய அளவிற்கு அப்போத அந்த பெயர் எனக்குள் ஒட்டவில்லை அதனால் சில மாதங்கள் வரை நான் என்னை கண்ணன் என்று மட்டுமே சொல்லிக்கொண்டேன் ஒரு விசிடிங் கார்டு கூட அடித்து கொள்ளவில்லை மேலும் வங்கியில் வேறு பொறுப்பான பதவியில் இருந்ததால் இந்த பெயர் எனக்கு அவ்வளவாக பயன் படவில்லை
இருந்தும் அடுத்தடுத்த நாடகங்களான அமிர்தம் கோபாலின் குழவில் நான் பாம்பே கண்ணன் என்றே அறியப்பட்டேன் சபாக்களில் நான் எதோ புது பிறவி எடுத்து வந்த பம்பாய் பிறவியாக பார்க்கப்பட்டேன் இங்கிருந்து போன அதே பழைய கண்ணன் தான் என்பது பலருக்கு அப்போது தெரியவில்லை
போவதற்கு முன் போய் வந்தபின் என்று என் நாடக வாழ்கையை இரண்டு பிரிவுகளாகக் பிரிக்கலம்
ஒரு கட்டத்திற்கு மேல் விட்டில் உறவினர்களுக்கு தொலைபேசினால் கூட பாம்பே கண்ணன் என்றே சொல்ல வேண்டிய நிலைமை வந்த பின்தான் விசிடிங் கார்டு அடித்தேன்
அதன் பிறகு பாம்பே என்னுடன் நிலையாக ஒட்டிக்கொண்டு விட்டது ஆனால் பம்பாயில் இருந்தபோது பாம்பே எனக்கு விருப்பமில்லாமல் போனது அதற்கு பரிகாரமாக இப்போது நான் என் பெயரை I LOVE BOMBAY என்று சொல்லிக்கொள்கிறேன் இன்னொன்றும் சொல்லிக்கொள்கிறேன்
I MISS YOU BOMBAY
பம்பாயின் பெயர் மும்பை ஆனபிறகு மும்பை கண்ணன் என்று பெயர் மாற்றம் செய்யவில்லையா என பலர் கேட்கின்றனர்
ஏன் மறைந்த மேதை பின்னணி பாடகர் PBS அவர்கள் என்னை DRVE IN WOODLANDS ல் சந்தித்த போதெல்லாம் மும்பை கண்ணன் என்றே அழைப்பார் ஒரு வாழ்த்துப்பா கூட எழுதி கொடுத்திருக்கிறார்
பெயர் எப்போது மாறும் என்று கேட்டால் என் ஒரே பதில் எப்போது மைசூர் பாக் பெயர் மாறுகிறதோ எப்போது பாம்பே ஹலவா பெயர் மாறுகிறதோ எப்போது CALCUTTA ரசகுல்லா பெயர் மாறுகிறதோ எப்போது மங்களூர் போண்டா பெயர் மாறுகிறதோ அப்போதுதான்
சரிதானே
இப்போது பெயர் ரகசியம் புரிந்து விட்டது அல்லவா
நான் சூட்டிக்கொண்ட பெயர் அல்ல
எனது BAMBAY ஐ எப்போது நினைவு கூறுவதற்காக இறைவன் எனக்கு அளித்த வரம்
இருந்தும் இந்த பெயரை எனக்கு அளித்த சீனாவுக்கு நன்றி!!!

Sunday, June 14, 2015

இது கல்யாண சீசன் கல்யாணங்களுக்கு போகும் போது என்ன அன்பளிப்பு அளிப்பது என்று சற்று குழம்பத்தான் வேண்டி இருக்கிறது
மலர்கொத்து கொடுத்தால் அழகாகத்தான்இருக்கிறது
ஆனால் மறுநாள் அதன் புகலிடம் எல்லோரும்அறிந்ததே
சாமி படங்கள் பொம்மைகள் எல்லாமே Meant for circulation தான்
பணமாக கொடுத்தால் உதவியாக இருக்கும் ஆனால் ....5௦௦ ரூபாய் கொடுத்தால் கூட இன்றைய கல்யாண செலவில் நாம்அணில் போலதான் இருப்போம்
ஆனால் தடவிக்கொடுக்க ராமர் வேண்டுமே
பயனுள்ள பரிசாக இருக்க வேண்டும்
நீண்ட நாட்கள் அவர்கள் கவனத்தை கவர வேண்டும் நம்மையும் நம் பரிசையும் நினைத்து அவர்கள் மகிழவேண்டும்
புத்தகங்கள் அருமையான choice
இதற்குமேல் எனது ஒலிப்புத்தகங்களை முயன்று பார்க்கலாமே
பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு போன்றவை மிகச்சிறந்த பரிசாக அமையும்
காலத்தால் அழியாதவை இந்த குறுந்தகடுகள்
தமிழ் படிக்க தெரியாதவர்களும் கேட்டு மகிழலாம்
இவற்றை தவிர வேறு சில ஒலி நூல்களும் Telefilm களும் உண்டு உங்கள் பரிசு தொகையின் அளவிற்கு ஏற்ப இவற்றை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்
GIFT WRAPPING இலவசம்

Friday, May 1, 2015

ஒரு திரைப்படம் என்பது பொழுது போக்கு அம்சம்
கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை
அவர் நடித்த படம் கூட சிறந்த படமாக இருக்கலாம் அதிலும் எனக்கு ஐயமில்லை
ஆனால் ஒரு படம் வெளிவந்த அன்று குழந்தை குட்டிகளுடன் காலை 6 மணி காட்சிக்கே போய் திரை அரங்கில் நிற்க வேண்டுமா
அதுவும் அந்த படம் வெளியாக வில்லை என்றால் அதற்கு இவ்வளவு எதோ குடும்ப இழப்பு போல வருந்த வேண்டுமா
பொழுது போக்கு என்பது நமக்கு வேலை இல்லாதபோது பொழுது போக பார்ப்பது
அதுவே எப்படி நம் வாழ்கையின் ஒரு அங்கமாக மாறிவிடுகிறது என்பதை நான் தமிழ் மக்களிடம் அதிகமாக காண்கிறேன் இதை வைத்துகொண்டு தமிழ் சானல்கள் பொழுது போக்குகின்றன
ஒரு முறை நான் மதுரை சென்றிருந்தேன் அது திபாவளி நேரம் அந்த வருடம் ஒரு கதாநாயகனின் படம் வெளிவரவில்லை அதற்கு அவர் ரசிகர்கள் போஸ்டர் ஓடியிருந்தார்கள்
தலைவா உன் படம் வெளிவராத தீபாவளி எங்களுக்கு துக்க நாள்
என்று
சாதாரணமாக நெருங்கிய உறவினர் மரண மடைந்து விட்டால்தான் நாம் தீபாவளி அந்த வருடம் கொண்டாட மாட்டோம்
இவர்கள் அபிமான நடிகர் படம் வராததால் தீபாவளி கொண்டாடவில்லை ஆனால் அந்த நடிகர் ஆனந்தமாக தீபாவளி கொண்டாடினார்
இவர்கள் ரசிகர்களா
அல்லது அவர் இவர்களின் செய்கையை ரசிக்கிறாரா......

Tuesday, April 28, 2015

உபநயனம் 

சிறுகதை

“பெரியவாளை பாக்க போறே பூநூலை எடுத்து மாட்டிண்டு போடா”
என்று அம்மா கெஞசினாள்
போம்மா உனக்கு வேற வேலை இல்லை
என்று சொல்லிவிட்டு பனியனுக்கும் மேல் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு புறப்பட்டான் கேஷவ்
அம்மா மறுபடியும் அதே பல்லவியை பாட
ஏம்மா நான் பூநூலை போட்டுண்டு சட்டையை மேல போட்டுண்டு தான் போகப்போறேன் அதுக்கு எதுக்கு உள்ள போட்டுக்கணும்
என்று HANGER தொங்கிய அந்த பூநூலை பார்த்தவாரே கூறினான் கேஷவ்
எப்படியோ போ
என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே போனாள்
இந்த கேஷவ் இருக்கிறானே அவன் எப்பவும் இப்படித்தான் எதாவது ஏடாகூடமாக படித்து விட்டு அதை வைத்துக்கொண்டு சில பழக்க வழக்கங்களை கிண்டலடித்துக் கொண்டிருப்பான் அவன் சொல்வது பல நேரங்களில் சரியான பதிலாகவே மேற்கொண்டு பேசமுடியாமல் செய்யும் வாதமாகவே இருக்கும் ஆனால் பழமையில் ஊறி ப்போன அவன் அம்மா போன்ற வர்களுக்கு அது விதண்டா வாதமாக இருததில் ஆச்சர்யமில்லை
இப்படித்தான் ஒரு நாள் அவர்கள் கிராமமான பரித்திசேரியிலிருந்து கோவில் பட்டாச்சாரியரும் வேறு ஒரு பிராமணரும் விட்டிற்கு சாப்பிட வந்திருந்தார்கள் அவர்களுடன் இவனும் மரியாதைக்கு அருகில் அமர்ந்து சாப்பாட்டிற்கு துணை கொடுத்தான்
அவர்கள் இலையை சுற்றி வட்டமாக நீரை உள்ளங்கையினால் தெளித்துவிட்டு பரிசேஷனம் என்று சொல்லகூடிய ஒரு கடமையை செய்து சிறிது சாதபருக்கைகளை எடுத்து மாதவா கேசவா என்று வாயில் போட்டுக்கொள்ள அம்மா இவனை நோக்கினாள்
இவன் அதற்குள் சாதத்தில் வெண்டைக்காயை பிசைந்து சாப்பிடத் துவங்கி விட்டான்
பையனுக்கு உபநயனம் ஆயிடுத்தோ என்று வினவினார் ராமர் கோவில் பட்டாசாரியார்
“ஆச்சு”
என்று அரைகுறையாக சொன்னார் ஒரு கடமைக்கு அதே காரியத்தை செய்து முடித்து விட்டிருந்த அப்பா
அன்று மாலை அம்மா பெரியவா முன்னாடி சாப்பிடும்போது பரிசேஷனை செய்யணும்ம்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்
என்று அவள் புலம்பலை ஆரம்பிக்க அப்பாவும்
ஆமாண்டா
என்று ஒத்து பாட கேஷவ் அவன் நிண்ட பிரசங்கத்தை ஆரம்பித்து விட்டான்
அப்பா, அந்தகலத்துலே எல்லாரும் தரையிலே உக்காந்து சாப்பிட்டாங்க இலை போட்டு அதுலே எறும்பு பூச்சி எதாவது உள்ளே வந்துடப் போறதேன்னு தண்ணியிலே BRIDGE கட்டினாங்க அதுக்கு பேர் பரிசேஷனம் இப்பத்தான் நாம வீட்டை சுத்தமா வச்சிருக்கோம் டேபிள்லே சாப்பிடறோம் அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத வேலை அப்பா.... சாப்பாட்டுக்கு முன்னாடி தொண்டையை நனைச்சிக்கணும்கிறதுக்காக இந்த தண்ணியை கொஞ்சம் எடுத்து வாயிலே விட்டுக்கறோம் அதை செய்யுன்னு சொன்னா ஒரு பயலும் செய்ய மாட்டான் அதுக்குத்தான் இந்த சாமிபெயரெல்லாம்
என்று சொல்லி விட்டு வெளியேறிவிட்டான்
இப்படி ஒவ்வொன்றிலும் தர்க்கம் குதர்க்கம்
அம்மாவுக்கு ஏகப்பட்ட வேதனை
அப்பாவுக்கு
அவன் சொல்வது சரிபோல தோன்றும் ஆனால் பொண்டாட்டிக்காக விட்டுகொடுக்க மனமில்லாமல் அரை குறையாக அந்த கடமையை செய்து முடிக்கும் ஒரு சாதாரண அரை குறை ஜன்மம்
தாத்தா தெவசத்தின் போது இவன் படுத்தி வச்ச பாடு இருக்கிறதே அப்பா!!!!
அம்மா வெறுத்து பொய் எக்கேடுகெட்டு போய்த் தொலை! தெவசமெல்லாம் பண்ணா உனக்கு உன் குழந்தைகளுக்கு நல்லது என்ன சொல்லறேள்
என்று அம்மா அப்பாவைப் பார்த்து கேட்க அப்பாவும்
இதற்கு பயந்துதானே இத்தனை வருஷமா நீ சொல்லறதெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்
என்று நினைத்துக்கொண்டார்
மானசிகமாக கேஷவை பெருமையாகப் பார்த்தாலும் ஒப்புக்கொள்ள முடியாமல் ஆமாம் என்று தலை அசைத்து வைத்தார்
என்ன நல்லது?
ஆரம்பித்து விட்டான் கேஷவ்
அந்தகாலத்துலே பிராமணா வேற வேலை இல்லாமல் இருந்தா யாராவது சாப்பாடு போட மாட்டாளான்னு ஏங்கினா அதனாலே ஒவ்வொரு சிறார்த்தின் போதும் அவங்களை கூப்பிட்டு சாப்பாடு போடணும்னு அவங்களாகவே ஒரு விதியை உண்டாக்கினாங்க ஒரு வேளைக்கு 3 பேரை சும்மா கூப்பிட்டா நீங்க சாப்பாடு போடுவீங்களா... மாட்டீங்க அதனாலே அவங்கள்ளே ஒருத்தரை விஷ்ணுன்னும் ஒருத்தரை பிரம்மான்னும் ஒருத்தரை பித்ருன்னும் சொல்லி சாப்பாடு போட்டாங்க இல்லன்னா உங்களை எப்படி பயமுறுத்தறது இதுல வேற அவங்களைப் பாத்து சாப்பாடு நன்னா இருந்துதான்னு தமிழ்லே கேக்க மாட்டாங்க சமஸ்கிரத்துலே கேட்டா தான் அது மந்திரம் அவங்களும் திருப்தியா சாப்பிட்டேன்ன்னு போய்டுவாங்க ஏன் தெவசத்தன்னிக்கு பத்து பேருக்கு அன்னதானம் பண்ணுங்களேன்
டேய் போதும் நிறுத்துடா மந்திரத்தை எல்லாம் பழிக்காதே
என்ன மந்திரம் இன்னாருக்கு நான் சாதம் போடறேன்னு நெய் போடறேன்னு சொல்லி அக்னியிலே போடறதுக்கு பேரு மந்திரமா
அம்மா வால் இரண்டு சொட்டு கண்ணீரை தவிர வேறு எதையும் பதிலாக சொல்ல முடியவில்லை இவன் இதெல்லாம் எந்த புஸ்தகத்துலே படிச்சான் IIT படிக்க வச்சு ரெண்டு வருஷம் அமெரிக்க அனுப்பினது தப்போ என்று நொந்து கொண்டாள்
இவன் விஷயத்தில் இனிமேல் எதுவும் பேசாமல் இருப்பது தான் உசிதம் என்ற முடிவுக்கும் வந்தாள்
இந்த குலம் இப்படி அழிந்து போவதற்கு காரணம் என்னவென்று அவளுக்கு ஓரளவுக்கு விளங்க ஆரம்பித்தது
இது எல்லாத்துக்கும் மேலே ஒரு நாள் இவங்க வீட்டிற்கு ஒரு பெரிவர் வந்திருந்தார்
இவன் அவரை நமஸ்கரித்தான்
அவர் சும்மா இல்லாமல் கேசவாஉனக்கு அபிவாதையே தெரியுமா எனக்கேட்டு விட்டார்
ஓ நல்லா தெரியும் நான் இன்னார் குலத்துலே இந்த பாரத பூமியிலே இந்த கோத்திரத்துலே இந்த தாத்தாவுக்கு பேரனா இந்த அப்பாவுக்கு பையனா பொறந்திருக்கேன் என் பேரு கேசவன் என்னை ஆசீர்வாதம் பன்னுங்கோன்னு ஆங்கிலத்துலேயும் தமிழுலேயும் கலந்து அடிச்சான் பாருங்கோ அவர் முகம் சிறுத்து போய்விட்டது
நான் வரேம்பா பையன் கருப்பு சிகப்பு கட்சிலே சேர்ந்துட்டானோ
என்று கூறிவிட்டு புறப்பட்டார்
அன்றையிலிருந்து ரெண்டு நாட்கள் அம்மா அவனிடம் பேசவில்லை
அன்று ஒரு வெள்ளிக்கிழமை
மாலை
இவன் விட்டிற்கு திரும்பும் போது முகமெல்லாம் வாடி காணப்பட்டான்
அம்மா மனது தாங்குமா
என்னடா உடம்பு சரியில்லையா என்றாள்
அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா
என்று சொல்லி விட்டுல் குளித்து விட்டு வந்து டைனிங் டேபிள் நாற்காலில் அமர்ந்தான்
அம்மா ரெண்டு தோசை எடுத்து தட்டில் வைத்து விட்டு மிளகாய்பொடி போடுவதற்கு முன்பு
என்னடா ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கே டாக்டரை பாக்கணுமா
அதெல்லாம் இல்லைம்மா வரும்போது ஒரு INCIDENT பாத்தேன்
ACCIDENT ஆ உனக்கு ஒண்ணுமில்லையேடா
ஐயோ அம்மா அது ACCIDENT இல்லை ஒரு இன்சிடென்ட் மாம்பலத்துலே ஒரு வயசானவர் சைக்கிள்லே போயிண்டு இருந்தார் நெத்தியிலே பட்டையா திருமண் திறந்த மார்பு கட்டையா குடுமி சட்டை ஏதும் போட்டுக்காம சைக்கிள்ளே வந்திண்டிருந்தார் அப்ப திடிர்னு ரெண்டுபேர் மோட்டார் சைக்கிள்லே வந்தாங்க
டே ஐய்யரே நில்லுடா ன்னாங்க அவர் தட்டு தடுமாறி கிழே சைக்கிளை போட்டுண்டு விழாத குறையா உக்கார இவங்க ஏன்டா உனக்கு ஒரு பூநூல் ஒரு குடுமி பாப்பார பயலே கோவிலுக்கு போறியோ என்று சொல்லிவிட்டு ஒருத்தன் அவர் குடுமியை பிடிச்சு இழுக்கறான் கண்ட வார்தைகளாலே திட்டி கன்னத்துலே ரெண்டு அறை பல்லு உடைஞ்சு வாயிலே ரத்தம் வழியறது
அய்யய்யோ
ஒருத்தன் கத்திரிகோலாலே குடுமிய வெட்டறான் ஒருத்தன் அவர் பூநூலை வெடுக்குன்னு பல்லாலே கடிச்சு அறுத்துட்டான்
அவர் கத்தறார் ஐயோ நாராயண என் பூநூல் ன்னு கத்தறார்
ஒருத்தன் ஹெல்புக்கு வரணுமே ஊஹும் நான்ந்தாம்மா அவரை பிடிச்சு உக்கரவச்சிட்டு சோடா வாங்கி கொடுத்து அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் போனோம் எல்லாரும் போடடோ எடுத்துண்டா.. பேப்பர்லே போட! கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்தேன்
தோசையை சாப்ப்பிடாமல் எழுந்தான்
என்னடாது கலி முத்திடுத்துன்னு வேதம் சொல்லறது சரிதான் சாப்பிடுடா
இல்லைம்மாவேணாம்
என்று சொல்லிவிட்டு படுக்க போனான் கேஷவ்
மறுநாள் கலை
அவன் யாரிடமும் பேசவில்லை குளித்து விட்டு உடை மாறிக்கொண்டு office போக தயாரானான் அம்மா எதேச்சயாக அவன் உடைகள் வைத்திருக்கும் அலமாரிக்குள் பார்க்க அங்கு எப்போதும் மாட்டிவைத்திருக்கும் இடத்தில் அவனது பூநூலை காணவில்லை
வாசலுக்கு வந்த அம்மா மோட்டார்சைக்கிள் உதைத்து கொண்டிருந்த கேஷவிடம் வந்து
நீ எதையும் மனசிலே வச்சிண்டு கவலைபடாதே ஜாக்கிரதையா போயிடடு வா
என்று சொல்லி வழியனுப்பி வைக்குமுன் அவனை கட்டிக்கொண்டாள் அவள் விரல்கள் முதுகை வருடின
அங்கு நெருடியது
அம்மா புன்னகைத்தாள்
Like · Comment · 

Saturday, April 18, 2015

Bombay Kannan Kannan's photo.

கடல்புறா

பிரபல சரித்திர நாவலாசிரியர் அமரர் சாண்டில்யன் அவர்களின் நாவல் ஒலிப்புத்தகமாக தயாராகி வருகிறது ஒலிப்பதிவு வேலைகள் வெகு மும்முரமாக நடைபெற்று வருகின்றன 
விரைவில் எதிர்பாருங்கள் 
பல பிரபல நாடக நடிகர்களும் புதுக்குரல்கள் பலரும் பங்கேற்கின்றனர்

குரு வந்தனம் 


நான் பம்பாய் சென்ற போதுதான் நாடகம் எழுதவும் இயக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன
ஒரு நாடகத்தை ஒவ்வொரு காட்சியாக அலசி எப்படி அதை தேவையான நீளத்தில் வைக்க வேண்டும்
அந்த காட்சியில் வரும் வசனங்கள் வேறு எங்காவது அந்த நாடகத்தில் வருகிறதா
நாடகத்தில் எங்காவது ஒரு வசனத்திலாவது தொய்வு ஏற்படுகிறதா
காட்சியின் ஆரம்பம் என்ன முடிவு என்ன அது
ஒவ்வொரு காட்சியும் நாடகத்தை ஒரு அங்குலமாவது சுவாரஸ்யமாக முன்னோக்கி நகர்த்தி செல்கிறதா
நாடகத்தை நாம் பார்த்தால் அந்த காட்சியை ரசிப்போமா அல்லது ஜோக்கிற்கு சிரிப்போமா
ஒத்திகையின் போது வசனத்தின் ஏற்ற தாழ்வுகள் என்ன
நாடகத்தின் ஆரம்ப காட்சியிலேயே மக்களை நாடகத்தின் உள்ளே இழுத்து விட வேண்டும்
போன்றவற்றை எல்லாம் உன்னிப்பாக கவனித்தே நாடகத்தை இயக்கினேன்
இவற்றிற்கெல்லாம் நான் என் மானசீக குருவாக வரித்துக் கொண்டவர் திரு ARS அவர்கள்
இவருடன் 6 வருட காலம் UAA ல் இருந்தபோது ஒரு ஏகலைவனாக நான் கற்றுக் கொண்ட பாடங்கள் எனக்கு பெரும் உதவியாக இருந்தது
இது தவிர நாடகம் நடக்கும் போது ரசிகர்களின் மன நிலைமையை எடை போடுவதில் மன்னர் அவர்
உண்மையிலேயே ரசிக்கிறார்களா அல்லது ரசிப்பது போல நம்மை கிண்டலடிக்கிறார்களா என்பதை அறிவதில் வல்லவர்
ஒரு சமயம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நாடகம் எனக்கு கண் தெரியாத ஒரு சிறுவனின் வேடம் (197௦)
சென்னையில் நாடகம் நடை பெற்ற போதெல்லாம் என் காட்சிகளுக்கு எனக்கு கைதட்டல் வரும் பாராட்டு கிடைக்கும்
இதே நாடகம் ஒருமுறை வெளியூர் ஒன்றில் நடந்த போது அவர்கள் அந்த நாடகத்தையே பெரிதாக ரசிக்கவில்லை
என் காட்சியின் பொது லேசாக கைதட்டல் நான் உணர்ச்சி வசப்பட்டு ஆர்வக் கோளாறினால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே நடிக்க துவங்கினேன் (நான் கண்களை BANDAGE போட்டு கட்டியிருந்ததால் என்னால் AUDIENCE யோ நடிகர்களையோ பார்க்க முடியாது)
என் பின்னால் இருந்து ருந்து ஒரு கை அழுத்தமாக என் தோளில் விழுந்தது
ஒரு குரல் ரகசியமாக “உன்னை கிண்டல் செய்கிறார்கள் சீக்கிரம் வசனத்தை பேசி முடித்துவிட்டு போய்விடு என்றது
ARS குரல் என்று எனக்கு தெளிவாக புரிந்தது
அவர் சொன்னது உண்மை என்று நாடகம் முடிந்தபோது தெரிந்து கொண்டேன்
அவரிடம் கற்ற பாடம் எனக்கு மேடையில் நடிக்கும் போது பேருதவியாக இருந்தது
அந்த அளவிற்கு துல்லியமாக பாராட்டு கைதட்டல் எது கலாட்டா கைதட்டல் எது என்று கணிக்க கூடியவர் அவர் இப்பவும் என் நாடகம் நடக்கும் போது ரசிகர்களின் தன்மைக்கேற்ப என்னால் நாடக வேகத்தை மாற்றி கொள்ள முடிகிறது என்றால் அதற்கு அவர் காரணம் 
அவரை என் நாடக குருவாக வணங்குகிறேன்