Friday, November 27, 2015

வேளசேரி alias வெள்ளசேரி கீதை


வீட்டைசுற்றி வெள்ளக்காடு அடுத்த தெருவில் படகு விட்டார்கள் Main road ன் மேடான பகுதியில் இறக்கிவிட்டார்கள்
இறங்கும் போது இருவர் பேசியது காதில் விழுந்தது
4 கோடியில் வீடு வாங்கினேன் ரெண்டு பிள்ளைங்க அமெரிக்காவிலே மாசாமாசம் டாலர்லே அனுப்பறாங்க வீட்டு லே எல்லா ரூம்லேயும் AC எக்கசக்க ELECTRONIC பொருட்கள் எல்லாம் இருக்கு ஆனா படகுலே ஏறும்போது கட்டின துணியோட வான்னு சொல்லிட்டான் மேல வரும்போது எதையும் கொண்டு வரலை திரும்பி போகும்போது எதையும் கொண்டு போகப்போறதில்லை
இவர் தன் வீட்டைப்பற்றிதான் சொன்னார் ஆனாலும் மிகவும் சிந்திக்க தூண்டியது
சுஜாதாவின கணேஷ் வசந்த் கதா பாத்திரங்களை அவரது எழுத்திற்கு பொருத்தமான நடிகர்களை வைத்து படமாக்கப்பட்ட கொலையுதிர்காலம் தொடரில் நடிகர் விவேக் வசந்தாகவும் பானுபிரகாஷ் கணேஷ் ஆக நடித்தனர்

இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் பாவை சந்திரனும் இயககுனர் 
MM RANGASAMY ம் ஆவார்கள் அருமையான கதை அருமையான பாத்திரங்கள் மிக அருமையான தொடர்

பொதிகையில் மதிய நேரத்தில் வந்து அதற்குண்டான பெரிப இடத்தை தொடாமல் போனது ரசிகர்களின் துரதிர்ஷ்டம்

இதில் குமாரவியாசன் பாத்திரத்தில் நான் நடிக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்து இயக்குனரை சம்மதிக்க வைத்தவர் தயாரிப்பாளர் பாவை சந்திரன் அவர்கள்

இருபது வருடங்களுக்கு பிறகு பல தொடர்களுக்குபிறகு சிலர் என்னிடம் நீங்கள்தானே குமார வியாசன் என கேட்கும் போது சுஜாதாவின் பாத்திர படைப்பிற்கும் தயாரிப்பாளர் பாவை சந்திரனுக்கும் தலை வணங்குகிறேன்

போஜனம் 


சிறுகதை




நந்தனம் சிக்னலில் கார் வந்து நின்ற பொது உடனே ஒருவன் காலை விந்தி விந்தி ஓடி வந்து கார் கதவை டோக் டோக் என்றுதட்டி கை நீட்டினான்
ரங்கநாதனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது
இவன் என்ன கார் கதவை தட்டி பிச்சை கேட்பது
என்று நினைக்க அருகில் இருந்த அவர் மனைவி
போனாப்போகுது ஒரு 5 ரூபாய் கொடுதிடுங்களேன்
என்று சிபாரிசு செய்தாள் அவருக்கு இன்னும் ஆத்திரம் பற்றிகொண்டு வந்தது
கேக்கறது பிச்சை இதுலே அதிகார பிச்சையா என் கார் கதவை தட்டறானே இதை துடைக்க அவனுக்கு அருகதை இல்லை என்று பொங்கினார்
பாவங்க கால் வேற சரியில்லை
அதெலாம் சும்மா கொஞ்ச நேரம் கழிச்சி பாரு ஓடுவான்
என்று சொல்லிவிட்டு சிக்னல் கிடைத்ததும் வேகமாக காரை கிளப்பிக்கொண்டு சென்றார் ரங்கநாதன்
மறுநாள் அவருடைய பெண்ணிற்கு கல்யாணம் மிகப்பெரிய சத்திரத்தில்
அதை சத்திரம் என்று சொல்லிவிட முடியாது
அது ஒரு RESORT என்று சொல்லலாம்
ஊருக்கு வெளியே மகாபலிபுரம் போகும் வழியில் கடற்கரை ஓரமாக மிகப்பெரிய தோட்டம் அதிலே உள்ளே ஒரு கோடியில் மிக பிரம்மடமான மண்டபம் சாலையிலிருந்து உள்ளே வர ஒரு கிலோமீட்டருக்கு மேலே இருக்கும் அதுவரையில் ஒரே தோப்பும் துரவும்தான்
ரங்கநாதன் சென்னையின் குறிபிட்டு சொல்லக்கூடிய வர்த்தகர்களில் ஒருவர் குறைந்த பட்சம் 5௦௦௦ பேர்களாவது திருமண வரவேற்பிற்கு வந்து விடுவார்கள் அதற்காகவே இந்த RESORT ஏற்பாடு செய்திருந்தார் அவர்
மாலைக்கு மேல் வருகின்றவர்கள் இரவு தாமதம் ஆனால் அங்கேயே தங்கி கொள்ளலாம் சகல வசதிகளும் அங்கே உண்டு
பல குளிசாதன அறைகள் பார் ஸ்விம்மிங் POOL டென்னிஸ் கோர்ட்
என்ன இல்லை அங்கு
பார்த்து பார்த்து அழைத்திருந்தார் சென்னையின் மற்ற VVIP களை அவரது நட்பு வட்டாரம் அரசியல் கலப்பில்லாத நண்பர்கள் கொண்டது
அதனால் பெரிய போலீஸ் கெடுபிடி போன்றவை அங்கே இருக்காது
காலையிலேயே RESORT க்கு வந்து விட்டார் ரங்கநாதன் கூடவே அவர் மனைவியும் வந்து விட்டார்
பத்திரிக்கைகள் மடுமே கிட்டதட்ட 5௦௦௦ தாண்டி விட்டது
நிச்சயம் 5௦௦௦ இலைகளுக்கு குறைவிருக்காது என்று CONTRACTOR இடம் சொல்லி ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டார்
பிரமாண்டமான சமயலறையில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது
இந்த மாதிரி ஒரு இடத்தை முதல்லே கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணவன் நானாகத்தான் இருப்பேன் என்று பெருமை அடித்து கொண்டிருந்தார் மனைவியிடம்
மொத்தம் 102 வகையறாக்கள்
20 வகை ஊருகாய் பீடாவோட சேர்த்து
என்று இவரது கர்வத்திற்கு எஎண்ணை விட்டுகொண்டிருந்தார் CONTRACTOR
வாசலில் இலைகளையும் அதில் மிச்சமாகப் போகும் உணவையும் கொட்டுவதற்கு ராட்சத பீப்பாய்கள் வந்து அடுக்கி வைக்க பட்டன
இலையை எடுத்து போட்டவுடனே மிச்சத்தை சாப்பிடறதுக்கு அள்ளிகிட்டு போறதுக்குன்னு ஒரு கும்பல் வரும் அதுங்க மொத்த இடத்தையும் அசிங்கம் பண்ணிடுவாங்க நாலு ஆட்களைப் போட்டு அந்த மாதிரி கும்பல்களை முன்னாடியே விரட்டி அடிச்சிடுங்க
என்றார் CONTRACTOR ன் ஆளிடம்
அவரோ ஒரு பெரிய ஆர்வக்கோளறு சிறு வயது
கவலையே படாதிங்க சார் ஒரு நாய் வராது என்றான்
ரங்கநாதனுக்கு சுருக்கென்றது நாய் என்றதும்
முக்கியமா நாயெல்லாம் வராம பாத்துக்க இலை எல்லாம் கொதறிப் போட்டு கிழே தள்ளிவிட்டிடும்
என்று சொல்லி விட்டு வேறு வேலை கவனிக்க சென்றார்
மாலை முன்று மணி இருக்கும் வாசலில் கார்டனில் பெரிய பெரிய வண்ண குடைகளை நட்டு காப்பி ட்ரிங்க்ஸ் பானி பூரி பேல்ல் பூரி பாப்கோர்ன் பழங்கள் போன்றவற்றை தனித்தனியாக ருசிக்க சுவைத்து மகிழ ஸ்டால்களை நிர்மாணித்து கொண்டிருந்தார்கள்
ஒவ்வொன்றாக விசிட் அடித்து கொண்டு வந்த ரங்கநாதன் எந்தெந்த ஸ்டால் எங்கெங்கு இருக்க வேண்டும் என்று முறைபடுதிக்கொண்டிருந்தார்
காற்று மெல்ல விசிக் கொண்டிருந்தது
குடைகள் லேசாக ஆடிக்கொண்டிருந்தன
நான் போய் டிரஸ் பண்ணிகிட்டு தயாராகிட்டு வந்திடறேன்
என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் வழக்கம் போல தன மனைவி பின் தொடர
உள்ளே AC ரூமிற்குள் நுழைந்து தனது புதிய சூட் எவ்வளவு அழகா பிட்டிங்கா இருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும் போது லேசாக பட்டாசு வெடி போல சத்தம் கேட்டது
ஆகா கல்யாணத்திற்கு வான வேடிக்கை சொல்லாமல் போய்விட்டோமே என கொஞ்சம் வருத்தம் கொண்டார்
மறுபடியும் அந்த சதம் இன்னும் அருகில் கேட்பது போல கேட்டது
ஜன்னலை திறந்து நோக்கினர் தூரத்தே கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன
JUST PASSING CLOUDS
என்று தனக்குள் சொல்லிவிட்டு தனது கோட்டை மாட்டிக்கொண்டு வெளியே வந்தவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஒரு பல வண்ண குடை அவர் காலடியில் வந்து விழுந்தது
என்ன சங்கர் என்னாச்சு
என்று அந்த உதவியாளரை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்க்குள் வர அவரது கோட்டில் காக்கை எச்சம்போல பச்சகென்று ஒரு பொட்டு நிர் பட்டு தெரித்தது
என்ன என்று அவர் அண்ணாந்து பார்க்கும் பொது அவர் முகத்தில் டைரக்டர் ஆகஷன் என்று சொன்னவுடன் பெய்யுமாமே அப்படி திடிரென மழை நீர் விழுந்தது
சுதாரித்துக்கொண்டு வெளியே வர மழை வேகமாக பெய்ய ஆரம்பித்தது
மின்விளக்குகளை தூக்கிக்கொண்டு ஓடினார்கள் சிலர்
அதை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு முடினார்கள்
குடைகள் வேகமாக இருப்பிடத்தை விட்டு மேல்நோக்கி நகர்தன பேப்பர் கப்புகள் பறக்க ஆரம்பித்தன மேஜை விரிப்புகள் கலைந்தன ஒவ்வொன்றாக ரங்கநாதன் பார்த்து முடிப்பதற்குள் வேகமான காற்றும் பலமான மழையும் பிடித்து கொண்டன
மணி 5 இது துவக்க நேரம்தான்
இதன் பிறகு இடைவேளை விடாத திரைப்படம்போல மழை வெளுத்து வாங்கியது காற்றும் மழையும் தவிலும் நாதஸ்வரமும் போல கச்சேரி செய்தன இடியும் மின்னலும் பக்க வாத்தியங்களாக ஒலித்தன மழை மழை மழை தான்
முதலில் வந்த ஒரு 50 பேர்கள் தவிர வேறு யாரும் அந்த மண்டபத்திற்கு அதுவரையில் வந்து சேரவில்லை வழியில் வெள்ளமாம் மரம் விழுந்து விட்டதாம் கார்கள் பஸ்கள் லாரிகள் என அங்கங்கே நிற்கிறதாம்
ஒவ்வொருவருக்கும் தொலைபேசி விவரங்களை தெரிந்து கொண்டார் ரங்கநாதன்
எல்லாரும் ஒரே குரலில் தங்கள் வருதத்தை ஓரேவார்த்தையில் தெரிவித்துக்கொண்டனர்
ஒரு வேளை கல்யாணத்தை ஏவிஎம் ரஜெஸ்வரியிலே வச்சிருக்கலாமோ சரவணன் கூட நம்ம FRIEND தானே என யோசித்தார்
ஆனால் சற்று நேரத்திற் கெல்லாம் சரவணனே போன் செய்து ஏவிஎம் ரஜேஸ்வரி நிலை இன்னும் மோசம் என்று பகிர்ந்து கொண்டார் அவரும் ஒற்றை வார்த்தையில் SORRY
ரமணனை அழைத்தோமா என்று அப்போது அவருக்கு சந்தேகம் வந்தது
மணமக்களுக்கு பின்னாலிருக்கும் மேஜையை பார்த்தார்
ஒரு சில கலர் பெட்டிகளே அங்கு நிரம்பி இருந்தன பெண்ணும் மாப்பிள்ளையும் நின்று நின்று களைத்து போகாமல் உற்சாகமா காதல் மொழிகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்
சாப்பிடும் ஹாலை எட்டிப் பார்த்தார் அங்கே 100 பேர் அமரும் வரிசையில் இருவர் சாப்பிடடு கொண்டிருந்தனர் பல வரிசைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு நாற்பது பேர் தேறும்
எவ்வளவு ஆடம்பரமாக நடந்து இருக்க வேண்டிய திருமணம் இது என்று யோசித்து கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்து கொள்ளலாமா என யோசித்தவர் நாலு பேருக்கு முன்னால் வேண்டாமென தன தனி அறைக்கு திருமினார்
சிறிது நேரத்திற்கு எல்லாம் CONTRACTOR MRS ரங்கநாதனுடன் உள்ளே நுழைந்து
அண்ணா கச்சேரி ஆட்கள் கூட வந்து சேரலை அதெல்லாம் கூட நான் உங்க கிட்ட கேட்டு வாங்க மாட்டேன் ஆனா 5௦௦௦ சாப்பாடு மிச்சமாறது ஸ்வீட் வடை VEG ரோல் எல்லாமே அஞ்சாயிரம் அஞ்சாயிரமனு இருக்கே என்னாலே திருப்பி எடுத்துண்டு போக முடியாது சாக்கடையிலே கொட்டவும் மனசு வரலை...ஒண்ணு ரெண்டுன்ன நாங்க எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் எடுத்துண்டு போய்டுவோம் மீதிய என்ன பண்ணறதுன்னு.....
என்று கையை பிசைய
மற்ற நேரமாக இருந்தால என் தலையிலே கொட்டுய்யான்னு கோபமாகக் கத்தி இருப்பார் ரங்கநாதன்
ஆனால் இப்போது அந்த குரல் வரவில்லை
மனது கனத்தது
என்ன தப்பு பண்ணேன் என்று யோசித்தார் சற்று நேரம்
டோக் டோக் என்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது அந்த சத்தம் தனக்கு கடவுள் ஏதோ ஒரு பதில் சொன்னது போல இருந்தது ரங்கநாதனுக்கு
கதவை திறந்து கொண்டு RESORT மேனேஜர் வந்தார்
அவருக்கும் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது
அய்யா பக்கத்துலே ஒரு அநாதை ஆசிரமம் இருக்கு அங்கே ஒரு இரண்டாயிரம் குழந்தைங்க ஐநுறு வயசானவங்க இருக்காங்க அவங்களுக்கு இன்னக்கு மழையிலே சாப்பாடு இல்லையாம் இதெல்லாம் அங்கே கொண்டு போயிட்டிங்கன்னா...... ஐயா தப்பா நினைக்கக் கூடாது
என்று தயங்கி தயங்கி கூறினார்
ரங்கநாதன் அதிக நேரம் யோசிக்கவில்லை
CONTRACTOR ஐப் பார்த்து
புறப்படுங்க
என்றார்
ரங்கநாதனின் பெரிய காரில் சாதமும் பருப்பும் சாம்பாரும் பட்சணங்களும் அப்பளமும் சிப்சும் வடைகளும் பாயசமும் மாயா பஜார் படத்தில் வரூவது போல பவனி வந்தன
மழை லேசாக விட்டு அவர்களுக்கு வழி கொடுத்தது மின்னல் வெளிச்சம் வழி காட்டியது இடி முழக்கம் துரத்தே யாரோ கைதட்டுவது போல கேட்ட்டது மாப்பிள்ளையும் பெண்ணும் மனைவியும் கூட வர இலைகள் பச்சை கொடி காட்ட ஆசிரமத்தை அடைந்து எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினார்கள்
எல்லோரும் வேண்டியதை மட்டும் கேட்டு சாப்பிட்டார்கள்
திருப்தியாக சாப்பிட்டார்கள் சந்தோஷமாக கைகுலுக்கினார்கள்
பெரியவர்கள் மணமக்களை எந்தவித போலித்தனமும் இல்லாமல் வாழ்த்தினார்கள்
அவசர அவசரமாக கொண்டு வந்த கிப்ட் பாக்கெட்டை கையிலே திணித்து விட்டு போட்டோ வீடியோ எடுத்துக்கொண்டுசாப்பாட்டு கூடத்தை நோக்கி ஓடும் அவசரம் அங்கு இல்லை
காதை கிழிக்கும் சத்தங்கள் இல்லை
ஒரு மாபெரும RECEPTION அங்கு அரங்கேறியது
சாப்பிட்டு முடித்தவுடன் இலைகள் அடுத்த பந்திக்கு தயார் என்பது போல சுத்தமாக இருந்தன
கமலா ரொம்ப திருப்தியா இருக்கு என்றார் ரங்கநாதன் மனைவியிடம்
கமலா! அங்கே எவ்வளவு பேர் சாப்பிட்டாலும் அதுலே மிச்சம் மிதி வச்சு வீண் அடிக்கறதைவிட விட இங்கே எல்லாமே பயன்பட்டதுலே ரொம்ப திருப்தியா இருக்கு சக்கரை வியாதிக்காரன் இனிப்பு வாங்கி விணடிபான் BP காரன் ஊறுகாயையும் உருளையும் போட்டுகிட்டு ஒதுக்குவான் இதெல்லாம் தான் என் பெருமைக்கு காரனம்ம்னு நினைச்சேன் ஆனா இப்பதான் தெரியுது பசிச்சவனுக்கு சோறு போடறதுதான் உத்தமம்னு
என்று சொல்;லிவிடடு டிரைவரிடம்
ஆமாம்.... போற வழியிலே தானே நந்தனம்,சிக்னல்?
என்று விசாரித்துக் கொண்டார்

Tuesday, November 10, 2015

நெதர்லாண்ட்ஸ் பயணம் மூன்றாம் பகுதி

........................................................................................................
பயணம் தொடங்குவதற்கு முதல் நாள் என் மகள் என்னை அழைத்து உன்னுடைய மொபைல் போனில் இன்டர்நேஷனல் ரோமிங் இருகிறதா பார்த்துக்கொள் என்று சிறிய லக்ஷ்மி வெடியை தூக்கி போட்டாள்
இதேதடா சோதனை என்று மனதில் நினைத்துகொண்டு AIRCEL அலுவலகத்திற்கு போன் செய்து கேட்கலாமே என்று தொடர்பு கொண்டால் அவர்கள் லேசில் வந்து விடுவார்களா என்ன
திருவிளையாடல் சிவாஜி என்கிற சிவ பெருமான் சுந்தரம்பாள் என்கிற ஔவையாரிடம் என்னை ஒன்று இரண்டு என்று வரிசை படுத்தி பாடு என்று சொல்ல அவர் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அர்த்தம் கற்பிப்பது போல இவர்களும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை ஏதேதோ சொல்லிகொண்டு போனார்கள் எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்பதுதான் நானும் ஒன்றை அழுத்திவிட்டு பாடல் முடியட்டுமென காத்திருந்தேன்
இறுதியில் பிரச்னை தீர்க்கும் நாரதர் போல ஒரு அதிகாரி வந்தார்
என்ன விஷயம்
என்று கேட்டார் INTERNATIONAL ரோமிங் பற்றி விசாரித்தேன்
அவர்கள் எப்பவுமே இந்த PREPAID ஆசாமிகளை இளைய தாரத்து குழந்தை போலவே பாவிப்பார்கள்
அதெல்;லாம் POSTPAID CONNECTION க்குத்தான் உங்களுக்கு இல்லை
என்று கேவலபடுத்த
நான்
அப்போ நாங்கள் என்ன செய்வது
என்று கேட்க
நீங்க அந்த நாட்டுக்கு போன உடனே அதுவா வேலை செஞ்சாலும் செய்யும் இல்லன்னா இல்லை
என்று யாரோ அரசு அதிகாரியை பற்றி சொல்வது போல கூறினார்
சரி நமது தலை எழுத்து என்று எண்ணிக்கொண்டே என் மகளிடம் இதை தெரிவிக்க
அவள்
ஒரு வேளை நாங்கள் யாரவது ஏர்போர்ட் வரவில்லை என்றால் எங்களை அழைப்பதற்காக சொன்னேன்
என்று சொல்ல இப்போது தான என் மனதில் குருவி வெடி வெடித்தது TRAIN ல் சென்றாலே ஸ்டேஷன் உள்ள நுழுயும் போதே நம்மை RECEIVE பண்ண யார் வந்திருக்காங்கன்னு பதட்டம் பட்டு வளர்ந்தவங்க
S2 COMPARTMENT, PLATFORM உள்ள நுழையும்போதே S5 லிருந்து இதோ வந்திட்டேன்னு கை ஆட்டற கும்பலைச் சேந்தவங்களாச்சே
இப்ப என்னடான்னா AIRPORT,.....அதுவும் புது நாடு.... பாஷை வேற தெரியாது... அது என்னவோ DUTCH ஆமே....சுத்தம்
நான் காலேஜ் முடிசசவுடனே எங்கப்பா என்னை MAXMUELLER BHAVAN லே GERMAN படிக்க வச்சாரு அப்பவே அந்த வாழப்பழத்தை வாயிலே அடக்கிகிட்டு பேசற மொழி கொஞ்சமும் மனசுலே ஏறலை
ஓரளவுக்கு GERMAN லே என் பேரை சொல்ல கத்துகிட்டேன் அவ்வளவுதான் இதை வச்சு சமாளிக்கலாமான்னு கேட்க
இது வேற அது வேற என்றாள்
சரி இப்ப என்ன செய்யனுங்கிற
என்று கேட்டு வைத்தேன்
ஒண்ணும் பிரச்சனை இல்லைப்பா (எவ்வளவு சுலபமா சொல்லிட்ட) ஒரு வேளை நாங்க ஏர்போர்ட் வரலைன்னா (வந்திடும்மா) எனக்கு டெலிவரி டைம் ஆகி நான் HOSPITAL போகிறதா இருந்தா வரமாட்டோம் நீ என்ன பண்றே ஏர்போர்ட் வந்த வுடனே உன் மொபைல் வேலை செய்யுதா பாரு இல்லன்னா WI FI CONNECTION எங்க இருக்குன்னு கேளு போய் அதுலே CONNECTION வாங்கிக்க
அம்மா என் WIFE கூடவே நான் பல சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கேன் இதுலே எப்படிம்மா WI FI எல்லாம்
எனக்கேட்க நினைத்தேன் என் அமைதியை பார்த்து மறுபடியும்
ஒண்ணும்பிரச்னை இல்லைப்பா அங்கே இருக்கறவங்க கிட்ட WI FI எப்படி காங்நேச்டின் வாங்கணும்னு கேளு
நானு!!ஒரு பாஷை தெரியாத ஊர்லே கேக்கணும்!!! சரிதான்
ஒண்ணும் பிரச்னை இல்லைபா என்று அவள் ஆரம்பிக்க
சரி என்று கேட்க துவங்கினேன்
அவங்ககிட்ட கேக்கும் பொது உங்களுக்கு ENGLISH தெரியுமான்னு கேளு
அம்மா எங்க ஊர்லே யார்கிட்டயாவது இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்ட அடிப்பங்கம்மா என்றேன்
அப்பா! ஒண்ணும்....
தெரியும் ஒண்ணும் பிரச்னை இல்லை அதானே
ஆமாம் இங்க யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க உங்க கிட்ட ENGLISH லே பேசலாமான்னு கேளு.........
அடடே!!!!
இந்த கேள்வியை நம்ம ஊர்லே பல பேர்கிட்ட நான் கேட்காததாலே வந்த சிக்கலை நினைத்துகொண்டேன்
பேசலாம்னு சொன்னா அப்ப WI FI பத்தி கேளு அவங்க GUIDE பண்ணுவாங்க அப்புறம் எங்களுக்கு போன் பண்ணு AIRPORT லேந்துஎப்படி வீட்டுக்கு வரணும்னு சொல்லறேன்
அம்மா உங்க விடு எவ்வளவு துரம்மா
ஒண்ணும் பிரச்னை இல்லைப்பா 200 கிலோ மீட்டர்தான் TRAIN பிடிச்சு வந்திடலாம்
அய்யஹோ ஏர்போர்ட் அப்புறம் ரயில்வே ஸ்டேஷன் அப்புறம் LUGGAGE அப்புறம் ஸ்டேஷன் லேந்து வீடு
ஒண்ணும் பிரச்சனை இல்லம்மா
என்று சொல்லிட்டு போனை வைத்துவிட்டேன்
இதுக்கப்புறம் PLANE
ஆங் முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்திட்டேனே நல்ல வேளை என் பெண் எனக்கும் என் மனைவிக்கும் சாப்பாடு DIABETIC DIET என்று எழுதிக்கொடுக்கவில்லை
கொடுத்திருந்தால்
எனக்கு இத்தனை நேரம் தாடி முளைச்சு ரெண்டு கொம்பு முளைச்சு எங்கியாவது கசாப்பு கடையில் தொங்கிக்கொண்டிருப்பேன்
எப்படியோ AMSTERDAM வந்து சேர்ந்தேன்
(இதற்கு பிறகு பகுதி ரெண்டில் உள்ள இந்த பகுதியை சேர்த்து கொள்ளவும்)
நேராக கஸ்டம்ஸ் green சேனல்
எதுவும் declare செய்ய தேவை இல்லாதவர்கள் இது வழியாக செல்லலாம் என்று அறிவிப்பு
நான் போய் விடலாம் என்றேன் என் மனைவி இல்லை நாம் கஸ்டம்ஸ் போய் காட்டிவிட்டே போவோம் என்றாள் (ஹரிச்சந்திரிணி) அதுதான் Australia வில் வழக்கம் என்று விளம்பரம் வேறு இல்லாவிட்டால் நாய் வருமாம்
கஸ்டம்ஸ் செக்கிங் கூண்டுகள் எங்கே எங்கே என்று தேடி அலைந்து பார்த்துவிட்டு ஒரு வேளை green சேனல் வழியாக போனால் அவர்கள் மடக்கி பிடித்து கொள்வார்களோ என்னவோ என்று யோசித்து ஒரு பாதை வழியாக நுழைந்தோம் அதுவும் green சேனல் தான வேறு எதுவும் கண்ணில் படவில்லை
ஐயாநான் யார் கிட்டயாவது என் பொட்டியை திறந்து காட்டணுமே என்று புலம்பாமல் புலம்பிக்கொண்டு திரு திரு வென முழித்துக்கொண்டு trolley ஐ தள்ளினேன் இவ்வளவு முழிக்கிறேனே அப்ப கூட யாருக்கும் என் மேல் சந்தேகம் வரவில்லையா? ஐயா என் பெட்டியை பாருங்க சாப்பாட்டு சாமான் தவிர் வேறு எதுவும இல்லை என்று கூவ வேண்டும் போல இருந்தது எல்லாரும் என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லராங்களேன்னு கண்ணை கசக்கி கிட்டு ஒரு கதவு வழியா வெளியே வந்தா அங்கே நான் கண்ட காட்சி...........
அங்கே பார்த்தால் என் மாப்பிள்ளை கையை ஆட்டிக்கொண்டே நிற்கிறார்
மாப்பிள்ளை நீங்க எங்கே இங்கே
கஸ்டம்ஸ் லே சேர்ந்துட்டிங்களா
என்று வழக்கமாக ஒரு அசட்டுதனமான் கேள்வியை கேட்க
என் மனைவி ஒரு இடி இடித்தாள்
அப்பா நீங்க வெளியே வந்துட்டிங்க
என்று ஜெயிலிருந்து வெளி வந்த கைதியை வரவேற்பது போல வரவேற்றார்
அப்போ கஸ்டம்ஸ் எதுவுமே செக் அப் பண்ணலியே நான் உள்ள பொய் ஒருதடவை திறந்து கட்டிட்டு வந்திடட்டுமா
என்று கேட்டுக்கொண்டு TROLLEY ஐ திருப்ப
ஐயோ நீங்க AIRPORTக்கு வெளியே வந்திட்டிங்க என்று கூறி எங்களை கார் பார்கிங்க்கு அழைத்து போனார்
மணி என்ன என்று கேட்டேன்
மணி இரவு 9 ஐ காட்டியது
வெளியே பட்டப்பகல் போல வெய்யில் அடித்துகொண்டிருந்தது ஒரு வேளை இது வேற நாடோ என்ற ஐயம் என் அசட்டு மனதில் தோன்றாமல் இல்லை
இங்கே ராத்திரி பத்தரைக்கு தான அஸ்தமனம் என்று மாப்பிள்ளை கூற
உதயம்??? என்று நான் கேட்க
அது காலை 5 மணிக்கெல்லாம் ஆயிடும்
அப்ப நான் கொஞ்ச நாளைக்கு ராத்திரியே பாக்க போறதில்லையா
கவலையே படாதிங்க இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் ஒரு நாலு மணி நேரம் தான பகல் பாக்கியெல்லாம் ராத்திரிதான்
என்றார் என் மாப்பிள்ளை
பசி வயிற்றை கிள்ளியது குறிப்பறிந்து ஒரு TIFFEN CARRIER ஐ தர....
திறந்தால் எனக்கும் என் மனைவிக்கும் ரவை இட்லி தயிர்சாதம் மோர் மிளகாய்
காரில் பயனித்துக்கொண்டே எங்கள் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டோம்
இரண்டு நாட்களுக்கு பிறகு ரவை இட்லியும் தாயிர் சாதமும் மோர் மிளகாயும் அமிர்தமாக இருந்தன
இரண்டு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம்
இனி இங்கு தாங்கும் நாட்கள் ஒரு மூன்று மாதம்

Thursday, November 5, 2015



அமரர் கல்கி அவர்கள் தனது பொன்னியின் செல்வன் புதினத்தில் பல பாடல்களை அந்தந்த காட்சிகளின் தேவைகேற்ப இணைத்திருப்பார்
இந்த பாடல்களை கதாமாந்தர்கள் இசையுடன் பாடியதாகவும் அவரது நாவலின் குறிபிடப்பட்டுள்ளது.
இந்த நாவலைப் படிக்கும் பொது அந்தப் பாடல் வரிகளை நாம் இசையுடன் பாடிக்கொண்டே படித்திருக்க மாட்டோம் என்பது உண்மை
பலர் அந்த பாடல் வரிகளை படிக்காமலேயே அடுத்த பத்திக்கு சென்றிருப்பார்கள். ஆனால் ஒலிப்புத்தகங்களின் நிலைமை அப்படி அல்ல.
வசனங்களும் வர்ணனைகளும் ஒலி வடிவில் இடம் பெறும் போது
பாடல்களும் காட்சிக்கேற்ப இசை வடிவில் இடம் பெற வேண்டும் அல்லவா...?
ஆகையால் அவர் குறிப்பிட்டிருந்த எல்லா பாடல்களையும் இசை அமைத்து பாடகர்களை கொண்டு பாட வைத்து அந்தந்த பகுதியில் இணைத் திருக்கிறோம்.
தற்போது அந்த புதினத்தில் இடம் பெற்ற சில’ பாடல்களை மட்டும் ஒரு தனி ஒலித்தகடாக கொண்டு வர விருப்பப்பட்டு,பாடல் இடம் பெற்ற அத்தியாயம், எந்த காட்சியில் பாடப் பெற்றது என்ற விவரங்களுடனும் வெளியிடுகிறோம் பாடல்களுக்கு முன்னும் பின்னும் இடம் பெறும் காட்சி வர்ணனைகள் பாடல்களுக்கு இன்னும் சுவை ஊட்டுகின்றன.
கேட்டு ரசித்து மகிழுங்கள்.
விரைவில் உங்கள் கைகளில்

நெதர்லாண்ட்ஸ் பயணம் இரண்டாம் பகுதி 


வேளசேரி வீட்டிளிருந்து புறப்பட்டவுடனேயே என் மனைவி பிள்ளயாருக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு போக வேண்டுமென்றாள்
நேரமாகிக்கொண்டே இருப்பதால் வழியில் எங்காவது உடைக்கலாம் என்று நான் சொல்ல அவளும் முணு முணு த்துக் கொண்டே சரி என்க புறப்பட்டு விட்டோம்
ரெண்டு நிமிடத்திற்கு ஒரு முறை பிள்ளையாரை ஞாபகப்படுத்தினாள் சென்னையில் தெருவிற்கு தெருவு இருக்கும் பிள்ளையார் எங்கே பொய் ஒளிந்து கொண்டாரோ தெரியவில்லை இருந்த ஒரே கோவிலும் பூட்டி இருக்கவே BAMGALORE ல் பார்த்துக் கொள்ளலாமென சொல்ல அவள் முகம் இறங்கி போயிற்று
பெங்களூர் வந்தால் Airport ஞாபகமாக இருக்கவே பிள்ளையரை மறந்து போய் துபாய் FLIGHT பிடிக்க விமான நிலையம் வந்து விட்டோம் அப்போதுதான் முதல் படியை கடந்து LUGGAGE வெயிட் பார்த்து விட்டு சரியாக இருக்கவே அந்த பெண் என்னை பார்த்து உள்ளே தேங்காய் வைத்திருக்கிறிகளா என்று கேட்டாள்
எனக்கு பிள்ளையார் ஞாபகம் அப்போதுதான் சுரீர் என்று உரைத்தது என் மனைவி என்னை அர்த்த புஷ்டியுடன் நோக்கினாள் அவளுக்கு இந்த அமானுஷ்ய விவகாரங்களில் பெரும் நம்பிக்கை உண்டு
தேங்காய் எதுவும் இல்லை எனவும், அவள் மிண்டும் ஒரு முறை எங்களை பார்த்து நிச்சயமா சொல்ல முடியுமா என்று கேட்க எதிரில் GOWN அணிந்த பிள்ளையார் என் மனக்கண்ணில் முன்னால் ஒரு முறை வந்து போனார்
நிச்சயமாக சத்தியமாக என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்
என்ன நினைத்துது கொண்டிருக்கிறார்கள் இவர்கள் நான் என்ன நெதர்லாண்ட்ஸ் க்கு தேங்காய் உடைக்கவா போகிறேன் இல்ல எங்களைப் பார்த்தா அப்படி ஏன் தோணனும் என்று உள்ளுக்குள் பொருமி என் இயலாமையை ஆத்திக்கொண்டேன்
அங்கிருந்து நேராக iIMMIGRATION
என்னுடைய பாஸ்போர்டை கொடுத்தவுடன் என்னையும் என் பாஸ்போர்ட் ஐயும் மாறி மாறி பார்த்த அவன் என்ன சார் முதல் முறையா என்று கேட்க நான் இல்லை இதற்கு முன் ஆஸ்திரேலியா ஒரு முறை போயிருக்கிறேன் என்று மெல்ல பதில் சொன்னேன்
அவன் எதற்காக இந்த கேள்வியை என் முகத்தைப் பார்த்து கேட்கிறான் என்பது புரியாமல் ஒருமுறை நெற்றியை கண்ணாடியில் பார்த்து கொள்ளவேண்டும் போல இருந்தது
ஆனா இவள் 6 ம முறை என்று படையப்பா பாணியில் பதில் சொன்னேன்
அவர் கேட்டாரா என்கிற EXPRESSION ல் என் மனைவி என்னை பார்க்க (பார்க்க என்பது ரொம்ப மிதம்)
எதுக்கு சார் போறீங்க என்று அவன் கேட்க
இந்த முறை என் மனைவி முந்திக்கொண்டு மகளுக்கும் பிரசவம் என்று முடித்து வைத்தாள்
அடுத்த கேள்விக்கு நான் தான் பதில் சொல்வேன் என்று QUIZMASTER ஐ எதிர் நோக்கும் மாணவன் போல கை தூக்க தயாராக இருந்தேன்
எத்தனை மாசம் என்றார்
எட்டு என்று சடாலென பதில் சொல்ல
அவர் பாஸ்போர்ட் ஐ கிழே போட்டு விட்டார்
என்ன சார் விசாவே 90 நாள் தான் எப்படி.......என்று இழுக்க
என் மனைவி மறுபடியும் குறுக்கிட்டு (என் விஷயத்தில் குருக்கிடுவதே அவள் வழக்கம்)
அவர் தப்பா சொல்லறார் (பல சந்தர்ப்பங்களில் உளறுகிறார் என்று சொல்லுவாள்)
இன்று என்ன MOOD ஓ தெரியவில்லை நாங்க போறது 3 மாசத்துக்குதான் என் பொண்ணுக்குதான் எட்டு மாசம் என்று திருத்தினாள்
அவர் முகத்தில் முதல் முறையாக ஒரு புன்னகை பார்த்தேன்
பட்டு பட்டு என்று ரெண்டு பாஸ்போர்டிலும் ஸ்டாம்ப் குத்திவிட்டு போங்க என சொல்ல இந்த COUNTER ல் இருந்து புற்றப்பட்டால் போதுமென திரும்பி போக சார் அப்படி போனா வெளியே போய்டுவிங்க இப்படி உள்ளே போங்க என்று என்னை திசை திருப்பினார்
அங்கிருந்து புறபட்டு நேரடியாக கஸ்டம்ஸ் சோதனை
நான் உள்ளே போகும் போதெல்லாம் அது கி.. கி என்று கதற துவங்கியது என்னடா மும்பைக்கு வந்த சோதனை என நினைத்து ஒரு முறை பெல்டை கழட்டினேன் அடுத்த முறை பையிலிருந்தசாவியை எடுத்தேன் அடுத்து பையிலிருந்த காசை எல்லாம் எடுத்து கொட்டினேன் காசெல்லாம் பார்த்தவுடன் அது வாயடைத்து போய்விட்டது
இந்த சோதனையிலும் வெற்றி ஆகா என மகிழ்ந்து ஒரு வழியாக விமானத்தை வந்து அடைந்தோம் சின்ன வயதிலிருந்தே ஜன்னல் ஓர இருக்கையை ஓடி பிடித்து அமர்ந்தவனுக்கு சரியாக மையத்தில் நாடு இருக்கையாக அமைந்தது ஏமாற்றம் தான்
பசி வயிற்றை கிள்ளியது
விமானம் புறப்படத் தயாரானது
ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தவுடன் ஒரு பெண் நீங்கள் VEGETARIAN ஆ என்று கேட்டு விட்டு சென்றாள்
அருகில் உள்ளவர்களுக்கெல்லாம் தட்டு நிறைய ஏதேதோ நிரப்பி வைத்தார்கள் வேஜிடேரியன் தட்டு வந்தது முன்னால் கொடுதவற்றில் பாதிய காணோம்
எனக்கோ கொலை பசி
திறந்து பார்த்தால் என் மனைவி தினமும் காக்காய்க்கு வைக்கும் அளவிற்கு சாதம் ஒரு சரவணா பவன் சாம்பார் கப்பை விட குறைந்த அளவிற்கு ஒரு கூட்டு கொஞ்சம் SALAD ஒரு பொறை அளவிற்கு பன் ஒரு ஸ்வீட் இவ்வளவுதான் எங்கள் மதிய உணவு
யோசித்து பார்த்தால் நாம் வீட்டில் நிறையவே சாப்பிடுகிறோம் என்ற நினைவை அகற்றாமல் இருக்க முடியவில்லை
அடுத்து துபாய் விமான நிலையம்
நிறைய விமானங்கள் நின்று கொண்டிருந்தன இறங்கினவுடன் என் சீனியர் PARTNER நாம இப்போ டெர்மினல் 3 GATE நம்பர் 2 லே AMSTERDAM FLIGHT பிடிக்கிறோம் எண்று ஸ்ரீஹரி கோட்டா விஞஞானி போல கூறினாள்
அடுத்த flight புறப்பட 2 மண் இ நேரம் இருந்தது கொஞ்சம் நேரம் கிடைத்தால் போதுமே காபி சாப்பிட விழையுமே நாக்கு.......காபி சாப்பிடலாமென ஒரு காபி கடைக்கு முன்னால் போய் நின்றால் அங்கு ஏகப்பட்ட காப்பிகள்
எந்த காபியை அர்ந்துவது என யோசித்து அவர்களிடம் coffee with milk என்று சொல்ல அவரைவிட உயரமான ஒரு கப்பில் (அவர் ஒரு சீனாகாரர்) காபியையும் நுறையையும் கலந்து அளித்தார்
ரெண்டு காபி வூட்லண்ட்ஸ் விலையில் 60 ரூபாய் என கணக்கு பண்ணி எவ்வளவு என்று கேட்க 9.5 யுரோ என்றார் உடனே CALCULATOR எடுத்தேன் 700 ரூபாய் நம்ம ஊர கணக்குக்கு வந்தது
எவ்வளவு குடித்தோமோ அதற்கு கழித்து கொண்டு மிதியை தந்து விடுவார்களா என கேட்கவில்லை
ம்ம்ம்ம் கையிலிருந்த 50 ஐரோ வில் 10 காலி
அப்புறம் AMSTERDAM விமானம் பிடித்து ஒரு வழியாக 7 மணி நேரம் பயனித்து வந்து சேர்ந்தோம் இதற்கிடையில் என் மனைவி sound of music மற்றும் சில படங்களை பார்த்து முடித்திருந்தாள்
விமான நிலையத்தில் இறங்கியவுடன் என் மனம் பக் பக்
இங்குதான் கஸ்டம்ஸ் செக்கிங் எல்லாம் ஒவ்வொரு பெட்டியாக எங்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது பார்பதற்கு எல்லாமே ஒரே மாதிரி இருக்க எங்கள் பெட்டியை எப்படி எடுப்பது என்று ஒரு பதைப்பில் இருக்க அதோ பாருங்க நம்ம பெட்டி என்றாள்
எப்படி இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சே
நீங்க எழுதி ஒட்டினது எவ்வளவு அசிங்கமா தொங்குது பாருங்க என்று நான் செல்லோடேப் போட்டு காயத்துக்கு BANDAGE போல ஒட்டியிருந்த பேப்பர் ஐ காட்டினாள்
எல்லாவறையும் எடுத்துக் கொண்டு நேரே iIMMIGRATION
அங்கே எங்கள் return டிக்கெட் மட்டும் பார்த்து விட்டு stamp போட
இனிமேல்தான் கஸ்டம்ஸ்
என் மனக்கண்ணின் முன்னால் நாங்கள் வாங்கி வந்த புளியும் ஊறுகாயும் முறுக்கும் அரிசி மாவும் சின்னா பின்னா படபோவதை எண்ணி கண் கலங்கினேன்
நேராக கஸ்டம்ஸ் green சேனல்
எதுவும் declare செய்ய தேவை இல்லாதவர்கள் இது வழியாக செல்லலாம் என்று அறிவிப்பு
நான் போய் விடலாம் என்றேன் என் மனைவி இல்லை நாம் கஸ்டம்ஸ் போய் காட்டிவிட்டே போவோம் என்றாள் (ஹரிச்சந்திரிணி) அதுதான் Australia வில் வழக்கம் என்று விளம்பரம் வேறு இல்லாவிட்டால் நாய் வருமாம்
கஸ்டம்ஸ் செக்கிங் கூண்டுகள் எங்கே எங்கே என்று தேடி அலைந்து பார்த்துவிட்டு ஒரு வேளை green சேனல் வழியாக போனால் அவர்கள் மடக்கி பிடித்து கொள்வார்களோ என்னவோ என்று யோசித்து ஒரு பாதை வழியாக நுழைந்தோம் அதுவும் green சேனல் தான வேறு எதுவும் கண்ணில் படவில்லை
ஐயாநான் யார் கிட்டயாவது என் பொட்டியை திறந்து காட்டணுமே என்று புலம்பாமல் புலம்பிக்கொண்டு திரு திரு வென முழித்துக்கொண்டு trolley ஐ தள்ளினேன் இவ்வளவு முழிக்கிறேனே அப்ப கூட யாருக்கும் என் மேல் சந்தேகம் வரவில்லையா? ஐயா என் பெட்டியை பாருங்க சாப்பாட்டு சாமான் தவிர் வேறு எதுவும இல்லை என்று கூவ வேண்டும் போல இருந்தது எல்லாரும் என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லராங்களேன்னு கண்ணை கசக்கி கிட்டு ஒரு கதவு வழியா வெளியே வந்தா அங்கே நான் கண்ட காட்சி......