Saturday, October 31, 2015

Netherlands பயணம்:::

.....................................................................................................................
என்னுடைய நெதர்லாண்ட்ஸ் பயணம் ஒரு மாதத்திலிருந்தே சூடு பிடித்து விட்டது என்னென்ன கொண்டு போக வேண்டும் எப்படி PACK செய்ய வேண்டும் என அவ்வப்போது என் மகள் போனில் சொல்லிக் கொண்டிருப்பாள் தினமும் ஒவ்வொரு மளிகை பொருளாக சேர்ந்து கொண்டே இருந்தது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ITEM
நானும் என் மனைவியும் எதோ புதுக்குடித்தனம் போவது போல ஒவ்வொன்றொன்றாக சேமித்து கொண்டிருந்தோம் இதற்கு இடையில் அவ்வப்போது 60 KILO விற்கு மேல் ஒரு ஒரு கிராம் கூடினால் கூட EMIRATES ல் ALLOW பண்ண மாட்டான் என்று ஒரு நாள் போன்
90 கிலோ எடையை ஒரே மாதத்தில் எப்படி குறைப்பேன் என்று நான் யோசித்து கொண்டிருக்கையில் என் மனைவி அது LUGGAGE எடை என்று நினைவுட்டினாள்
இரண்டு பெட்டி நிறைய அரிசி மாவு பருப்பு வகயராக்கள் புளி மிளகைபோடி என ஏகப்பட்ட ITEMS இதற்கு இடையில் 3 மாதம் தங்குவதற்கு தேவையான உடைகளுக்கு இடம் எங்கே இருக்க போகிறது என்று என் கவலையை தெரிவிக்க மகள் நீங்கள் வரபோவது டெலிவரிக்கு 3 மாதம் எங்கே வெளியே போகப்போகிறிகள் என்று ஒரு முன்னெச்சரிக்கை பதில் வைத்திருந்தாள்
எப்படியோ சமாளித்து கொஞ்சம் உடைகளை எடுத்து வைத்து அவ்வப்போது கிழ் விட்டிளிர்துந்து எடை MACHINE வாங்கி வந்து (அவர்கள் அட்கிக்கடி துபாய் லண்டன் என்று போய் வருகிறார்கள் வேறு எதற்கு இரண்டு பெண்களுக்கு பிரசவம் பார்க்கத்தான் ) எடை பார்த்து ஒவ்வொரு நாlளும் தேறிவரும் நோயாளியை போல பெட்டி எடை கூடிக்கொண்டே வந்தது இதற்கு இடையில் வாங்கி வந்த அரிசி மாவு அரைத்து வந்த மிளகாய்பொடி காபி போடி எல்லாம் அப்படியே எடுத்து போக முடியுமா இதற்கென்றே பிரத்யேகமாக MYLAPORE ல் ஒரு PACKING கடை இருக்கிறது அங்கு போய் இதை எல்லாவற்றையும் (கொட்டி) கொடுத்து விட்டால் அவர் கைதேர்ந்த கஸ்டம்ஸ் அதிகாரி போல நமக்கு விளக்கமாக எடுத்து சொல்லி அழகாக வெள்ளி பேப்பர் பிளாஸ்டிக் பேப்பர் என உருட்டி தருகிறார் அவற்றை கொண்டு வந்து நமது பேண்ட ஷர்ட் புடவை முதலியவற்றை சுற்றி வைத்து PACKING செய்து விட்டேன்
வெறும் டிரஸ் என்று மட்டுமில்லாமல் அதற்கு ஒரு PURPOSEவந்து விட்டது அல்லவா? மறுபடியும் எடை பார்க்க 63 கிலோ காட்டியது
இப்போது எதை நீக்குவது என்று யோசிக்க என் மனைவி என்னை ஒரு முறை பரிதாபமாக பார்க்க தாயே நாலு மாசத்துக்கு நாலு PANT எடுத்திருக்கேன் எனக்கு முக்கால் PANT எல்லாம் போட்டு பழக்கமில்லை என நான் கேவலமாக விழிக்க ஒரு புளி பாக்கெட்டை எடுத்து விடுவது என முடிவு செய்து கழித்தல் ஒரு 2 கிலோ தேறியது இன்னும் GRAND SWEETS முறுக்கு MIXTURE கிருஷ்ணா ஸ்வீட்ஸ் MYSORE PAK என இடம் வேண்டும் என்று யோசித்து யோசித்து எடுக்கப்போக இறுதியில் பெட்டி முழுவதும் எங்களது 3 மாத தேவைக்கான மருந்துகளும் என் மனைவயின் இன்சுலின் பாட்டில்களும் வாங்கிப்போகும் மளிகை சாப்பாட்டு சாமான்களும் தான் மிச்சமிருந்தன
இடை இடையிடையே கொஞ்சம் துணி வகைகள் குறிப்பாக என் பனியன் ஜட்டி போன்றவை)
இதற்கிடையில் இன்சுலின் ஊசிகள் எடுத்து செல்லலாமா தீவிரவாதிகள் என்று எங்களை ஜெயிலில் போட்டு சித்திரவதை செய்து விடுவார்களோ என்ற பயங்கர நினைவுகள் வேறு
DIABETIC டாக்டரிடம் சென்று ஒரு CERTIFICATE வாங்கிக்கொண்டேன் மகள் எதற்கும் எமிரேட்ஸ் ல் சொல்லிவிடு என்றாள் எமிரேட்ஸ் மும்பைக்கு போன் செய்து என் மனைவி சுகர் PATIENTஎன்றும் இன்சுலின் மருந்து எடுத்து செல்ல வேண்டுமென்றும் சொல்ல அவர்கள் ஒரு நாள் தேவை மட்டும் கையில் கொண்டு செல்லுங்கள் மீதி BAGGAGE செக் பண்ணி விடுங்கள் என்றார்கள்
திடிரென ஒரு சந்தேகம் ஒரு வேளை BAG காணமல் போய் விட்டால்........அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு எங்கள் விமானத்தில் வராமல் போய்விட்டால் என்ன செயவது என்று ஒரு பயம் ஏற்பட்டது அதனால் என்ன ஆனாலும் ஆகட்டுமென ஒரு வாரத்திற்கான மருந்துகளை HAND LUGGAGE எடுத்து செல்வது என முடிவு செய்து ஒரு எக்ஸ்ட்ரா BAG ஐயே கழித்து கட்டிவிட்டு எல்லாவற்றையும் 3 பெட்டியில் PACK செய்து கொண்டு புறப்பட்டோம்
எனக்கோ இது இரண்டாம் முறை தான் வெளி நாடு செல்வது என் மனைவி என்னை விட சீனியர் முதல் மகளுக்கு பிரசவம் பார்க்க சென்ற அனுபவம்
அதனால் அவள் AIRPORT வந்தவுடன் எனக்கு எதுவும் தெரியாது என்ற பாணியில் எனக்கு முன்னால் நடந்து சென்று ஒவ்வொரு COUNTER ஆக போனாள் எனக்கு வரிசையில் நிற்கும் போதெல்லாம் ஒரு சின்ன நடுக்கம் கஸ்டம்ஸ் நாய் வந்து குதருவது போல கற்பனை ஓடியது பெங்களூர் AIRPORT ல் எமிரேட்ஸ் கவுன்டரில் வரிசையில் நின்று என் மகளின் வாயில் நுழையாத நெதர்லண்ட்ஸ் விலாசத்தை எழுதி எழுதி பெட்டிகளில் கட்டிக்கொண்டிருந்தேன்
வந்தாச்சு கவுன்ட்டர் அருகே ஒருவன் இளைஞன் ஒருத்தி சின்ன பெண்ண இந்த பெண்ணைப் பார்த்தால் கேள்வி எதுவும் கேட்கமாட்டாள் போல தோன்றியது கவுண்ட்டர் அருகே வந்ததும் அவள் எங்கள் பெட்டியெல்லாம் எடை பார்க்க எதையெல்லாம் இங்கே தரையில் உட்கார்ந்து பிரித்து போட்டு தூக்கி எறிய வேண்டுமோ என யோசித்து கொண்டிருக்கையில் சரியாக 61 கிலோ காட்டியது
EXCESS BAGGAGE எதுவும் கேட்கவில்லை
அடுத்து அவள் கேட்ட கேள்வி ஒன்றுதான் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது ஏண்டி எங்களை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டே ன்னு கோபப்பட வைத்தது
சென்னை தொலைகாட்சி நிலையம் (தூர்தர்ஷன் சென்னை) நாற்பது ஆண்டு காலம் நிறைவு செய்கிறது அழைப்பிதழ் வந்தும் சென்னையில் இல்லாத காரனத்தால் செல்ல முடியவில்லை எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமை இந்த நிலையில் உண்டு
தொலை காட்சி நிலையம் தொடங்கிய முதல் நாள் நிகழ்சிகளில் (15 ஆகஸ்ட் 1975)இடம்பெற்ற நாடகத்தில் அடியேனும் பங்கு பெற வாய்ப்பு கிட்டியது
"வாலிபம் திரும்பினால்"என்ற அந்த நாடகத்தை வெங்கட் எழுதினார்
திரு YGP அவர்களின் UAA குழு பங்குபெற்ற அதில் திருவளர்கள் YGP, ARS,YG மகேந்திரன் சேது
SR சிவகாமி ஆகியோருடன் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது இன்றளவும் மிகவும் பெருமையாக இருக்கின்றது
இந்த நாடகத்தை என்னை முதன் முதலாக மேடை ஏற்றிய திரு TS NARAYANASAMI (ETHIROLI நாராயணசாமி என்று தொலை காட்சியில் அக்காலத்தில் புகழ் பெற்றவர்) தயாரித்திருந்தார்
எனக்கும் இது தொலைகாட்சி நடிப்பிற்கு நாற்பதாவது ஆண்டுதானே தானே
இந்த நாடகம் தொலை காட்சியின் ARCHIVEல் இருக்குமா என தெரியவில்லை
வாழ்த்துக்கள் தூர்தர்ஷன்!!!! பொன்விழா காணப்போகும் உங்களுக்கு
அந்த பொன்னான காலம் மீண்டும் வருமா என ஏங்குகிறேன்
பொன்னியின் செல்வன் பார்த்திபன் கனவு போன்ற ஒலி புத்தகங்கள் வெளியிட்டு விழாக்களில் எனக்கு பெரிதும் பக்க பலமாக இருந்த வரும் அந்தவிழாக்கள் வெகுசிறப்புடன் அமைய பெரும்காரணமாக இருந்தவருமான எனது நண்பர்ஒருவரைப் பற்றிஇது வரை எழுதாமல்இருந்து விட்டேன்
BETTER LATE THAN EVER
இவரை எனக்கு அறிமுகப் படுத்தியவர் திரு Evr Mohan அவர்கள் இருவரும் ஒரே வங்கி
இவரை நான் முதன் முதலில் சந்தித்தது இவர்வேலை பார்த்து வந்த STATE BANK OF NDIA பாண்டிச்சேரி அலுவலகத்தில்
முதன் முதலில் சந்தித்த உடனேய நாங்கள் மிகவும் நெருங்கி விட்டோம அவ்வளவு எளிமையாக இருந்தார்
கவிஞர் எழுத்தாளர் வங்கி அதிகாரி என்ற பல முகங்கள் அவருக்கு
பின்னர் ஒருநாள் இரு வீடு ஒரு வாசல் DVD வெளியிட்டிற்கு பிறகு அவரை அவரது கோபாலபுரம் அலுவலகத்தில் சந்தித்தேன
DVD பற்றி கூறிய வினாடியே அந்த கிளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக சில dvd களை வாங்கிக் கொண்டு எனது வியாபாரத்தை துவக்கி வைத்தவர் அவர்.
அது மட்டுமா என்னை சென்னையில் எல்லா கிளைகளுக்கும் அறிமுகப் படுத்திவைத்து எனக்கு உற்சாகம் அளித்தவர் அவர்
அவரது உதவி மனப்பான்மையினால் பயனடைந்தவர்கள் பலர்
இது ஒரு நல்லபரிசு பொருளாக வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் என்பதை தான் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் எனக்கு ஒரு பாராட்டு கடிதமும் வழங்கி கௌரவித்தார்
இவர் அளித்த ஊக்கம் தான் எனக்குமே;லும் மேலும் DVD க்கள் தயாரிக்க பெரிதும் தைரியத்தைக் கொடுத்தது பின்னர்ஒருநாள் நான் அரவிந்த அன்னையின் பாடல்கள் தயாரிக்க முற்பட்ட போது எனக்காக பல பாடல்களை எழுதிக் கொடுத்து அந்த ஒலிIத் தொகுப்பு பெரிதும் வெற்றியடைய உறுதுணையாக நின்றவர் அன்னையின்பக்தர்
அவர் அன்னையைபற்றி பல கட்டுரைகளை எழுதியவர் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கட்டுமேஎன நான் ஆசைபட்டது சமையல் DVD
SUPERSAMAYAL என்ற பெயரில் நான்வெளியிட்ட DVD ல் இருந்த அத்தனை சமையல் குறிப்புகளும் அவர் மனைவியின் கைவண்ணம்
இவர் சாந்தி விஜய கிருஷ்ணன் என்றபெயரில் டிவி பத்திரிக்கைகளில் மிக பிரபலம்
என்னுடைய தயாரிப்பான எனது முதல்ஒலிப்புதகம் SAIBABA வாழ்க்கை சரித்திரத்தில் குரல் கொடுத்த நால்வரில் ஒருவர்
பாக்கியம்ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் DVD க்கு TITLE SONG இவர் கற்பனையில் உதித்த அழகியபாடல்
கவித்துவமாகவும் நகைச்சுவையாகவும் எழுத முடியுமென நிருபித்தவர் ஆச்சி மனோரமா நடித்த ஆட்சி மாற்றத்திலும் இவரது பாடல்தான்
இப்படி எனனுடைய ஒவ்வொரு தயாரிப்பிலும் இவரது பங்கு பெரிது
இவை எல்லாவற்றிற்கும் மேல் பொன்னியின் செல்வன் வெளியிட்டன்று வந்திருந்த கூட்டத்தை நாற்காலிகளில் கட்டிப் போட்டது இவரது சுவை மிக்க வர்ணனை இன்று எல்லோரும் விழாவைப்பற்றி பேசும் போது இவரைக் குறிப்பிட்டு ஓரிரு வார்த்தைகள் சொல்லாமல் இருக்க மாடார்கள்
இதே போல பார்திபன் கனவுவெளியிட்டு விழாவிலும் இவரது தொகுப்புரை விழாவிற்கே ஒருசிகரம்
அதை மேடையிலே பாராட்டியவர்கள் சிவசகரி இந்திரா சௌந்தரராஜன் போன்ற எழுத்தாளர்களும்ம் ARS வைஜெயந்திமாலா போன்ற கலைஞர்களும் நல்லி செட்டியாரும் ஆவார்கள்
அப்படிப்பட்ட ஒரு சிறந்த நண்பரை எனக்கு அளித்த இறைவா உனக்குநன்றி
ஓ யாரென்று சொல்லவில்லை அல்லவா
வேறு யார்
கவிஞர் பட்டிமன்ற பேச்சாளர் நாவலாசிரியர் சென்னை தொலை காட்சியில் செய்தி வாசிப்பாளர் வங்கிஅதிகாரி போன்ற பன்முகங்களைக் கொண்ட என் இனிய நண்பர் திரு Vijayakrishnan Seshadri அவர்கள்தான்
மிக்க நன்றி கடன் பட்டிருக்கிறேன் சார்
நன்றி நன்றி நன்றி
இவரது நாவல் கடல் நிலம் தனுஷ்கோடி புயல் பின்னணியில் எழுதப்பட்டது
மிக பிரபலமான ஒன்று
இவரிடம் TIME MANAGEMENT பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென நானும மோகனும் அடிக்கடி பேசிக் கொள்வோம்
ஓரிரு வேலைகள் இருந்தாலே நேரமில்லை என்று சொல்லும் என்னை போன்றவர்கள் இவரிடம் அது கற்றுகொள்ளவேண்டிய பாடம் பல முறை கேட்டுப் பார்த்துவிடேன் சிரித்து விட்டார் அடுத்தது எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கொஞ்சமும் ஸ்ட்ரெஸ் ஆகாமல் சிரித்த முகத்துடன் வங்கிப் பணியை கவனிக்கும் நேர்த்தி இதையெல்லாம் நான் பார்த்து வியக்காத நாளே இல்லை
நான் சமீபத்தில் பார்த்த கேட்ட நகைச்சுவை நாடகங்களில் எந்த வசனமெல்லாம் சிரிப்பு வரவழைக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறாகளோ அங்கேயெல்லாம் டொய்ங் டொய்ங் என்று இசையால் இம்சித்தார்கள்
இந்த மாதிரி வாசிப்பு எல்லாம் ஒரு 30 அல்லது 40 வருஷத்திற்கு முந்தய சமாசாரம் அதை இன்னும் ஏன் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள் என தெரியவில்லை மக்களை சிரிக்க வைக்க (எப்படியாவது)
இது ஒரு வழி என நினைக்கிறார்களா??
நமது நகைச்சுவை நாடகங்களில் இன்னும் ஒன்று நான் பார்த்தது நகைச்சுவை பாத்திரங்களில் நடிப்பவர்களே தங்களை அஷ்ட கோணலாக்கிகொண்டு நான் காமெடியன் என்று தனக்கும் மற்றவர்களுக்கும் அடிக்கடி நினைவூட்டுவது அந்த பாத்திரத்தை மிக செயற்கையாக்கி மிகைபடுத்தி நடிப்பது
மற்றொன்று சில நடிகர்கள் ஜோக் அடித்து விட்டு முதலில் அவர்களே அதற்கு சிரித்துவிடுவார்கள் பின்னர் பார்வையாளர்கள் follow suite,,,,
A SNUFF BOX NEVER SNEEZES
சமிபத்தில் ஒரு ஆங்கில நகைச்சுவை படம் ஒன்று பார்த்தேன் அருமையான நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த ஒருவர் கடைசி வரை அவர் சிரிக்க வில்லை அமைதியாக பார்பவர்களை மிகையாக சிரிக்க வைத்தார் என்றால் அது மிகை ஆகாது
என் தந்தையும் நானும்
என் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் போது எதாவது வேண்டுமென்று அழுது அடம் பிடித்தால் என் அப்பா உடனடியாக அதை வாங்கித் தரவேண்டுமென சிபாரிசு செய்வார்ட்
அப்பா குழந்தையை செல்லம் கொடுத்து கெடுக்காதீர்கள் என்று சொன்னால்
குழந்தை அழுதுடா போனால் போகட்டுமே என்பார்
அதே குழந்தைக்கு 5 வயது ஆகும்போது அதன் பின்னாடியே shoe போட uniform போட்டு விட ஓடுவார் 
அதன் ஸ்கூல் bag ஐ தூக்கிக்கொண்டு போய் ரிக்க்ஷாவில் வைப்பார்
காலையில் அதற்கு பல் தேய்த்து விடுவதிலிருந்து எல்லாம் அவர் உபயம்தான்
அப்பா அவனை INDEPENDANT ஆ வளக்கணும்னு சொன்னா ஒப்புகொள்ள மாட்டார்
போடா நீ சின்ன வயசுலே என்ன பண்ணே சொல்லட்டுமான்னு மானத்தை வாங்குவார்
10 வயதில் என் பையன் பள்ளியிலிருந்து வரும் வரையில் வாசலிலே இருந்து அவன் விசிறி எறியும் புத்தக மூட்டைகளை சாப்பாடு கூடைகளை சுமந்து வருவார்
தாத்தாவிற்கு தொந்தரவு தரக்கூடாது நீதான் எடுத்து வரவேண்டும் என்று கண்டித்தால் குழந்தை எதிரிலேயே நம்மை கண்டிப்பார் பாவம்
குழத்தை TIRED ஆ வருவான் போனாப் போறது விடு என்று அவர் கூற குழந்தை என்னைப்பார்த்து பரிகசிக்கும் அப்பா மேல் கோபம் கோபமாகக் வரும்
பையன் பள்ளியிலிருந்து வருவர்தற்கு நேரமானால் வாசலிலேயே காத்திருப்பார்
அப்பா வருவான் என்று சொன்னால் கேட்க மாட்டார்
நேரம் ஆகுதுடா என்பார்
இதே போலத்தான் நான் அலுவலகம் சென்று திரும்பி வர கொஞ்சம் காலதாமதம் ஆனால் என் கார் விட்டு வாசல் தொடும் வரை BALCONY லேயே நின்று கொண்டிருப்பார் இரவு நேரமானால் துங்க போக மட்டார் எதாவது போன வந்ததா என என் மனவியை அரித்து விடுவார்
வீட்டிற்கு வரும்போது அவர் பால்கனியில் நிற்பதை பார்க்க கோபம் கோபமாக வரும் என் தலையை பார்த்தவுடன் ஓடிப்போய் பெட்ரூமில் ஒளிந்து கொள்வார கேட்டால் பாசமென்பார்
வெளியூர் போனால்; தினமும் தொலைபெசவேண்டும் இல்லைஎன்றால என் மனைவி பாடு அவ்வளவுதான் என் அம்மா அப்படியல்ல கொஞ்சம் தைரியம் அதிகம்
அப்பாவை அப்பப்ப அடக்கி வைக்க வேண்டும் என்று கடிந்து கொள்வார்
நாம் 10 ரூபாய்க்கு தோசை சாப்பிட்டால் விலை ரொம்ப அதிகம் என்று சொல்லி அவர் காலத்து தோசை விலையை சொல்லி அந்த காலத்து கோல்ட் விலை நிலம் விலை வீட்டு விலை எல்லாம் சொல்லி பொறுமையை சொதிப்பார்
அப்பா அந்த காலம் வேற இந்த காலம் வேற என்றால் ஒப்புகொள்ள மாட்டார்
இன்று எனக்கு 64 வயசு
பால்கனியில் நின்றிருக்கிறேன்
என் மகன் அவன் குழந்தைகளை நான் ரொம்ப செல்லம் கொடுத்து கெடுப்பதாக கோபப் படுகிறான்
அடேடே மணி நாலாச்சு இன்னும் குழந்தை ஸ்கூல் லேந்து வரலை ஆடடோ ரிக்ஷா வரலியே என்னாச்சு என் பையன் வெளியூர் பொய் நாலு நாள் ஆச்சு இன்னும் ஒரு போன் வரலை பொறுப்பில்லாம இருக்கான்
DINING டேபிள் மேலே SARAVANA BHAVAN பிளாஸ்டிக் டப்பாவிலே 75 ரூபாய் கொடுத்து ஒரு ரவா தோசை வாங்கி வச்சிருக்காங்க ரொம்ப அநியாயம் அப்பெல்லாம் ஒரு தோசை விலை வெறும் பத்து ரூபாய்
ஏம்மா வசந்தி எதாவது போன் வந்ததாம்மா என்று என் மருமகளை அழைக்கப் போகிறேன்
என் மனைவி என் இப்படி முறைக்கிறா;ள்???
என் அப்பா நினைவு வந்தது
பெயர் ரகசியம்
என்னை எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்வி உங்களுக்கு ஏன் பாம்பே கண்ணன் என்று பெயர் என்பதுதான்
இதையே பல பத்திரிக்கை அன்பர்களும் கேட்டுள்ளார்கள் பேட்டிியிலும விளக்கம் அளித்திருக்கிறேன்
இருந்தும் இங்கு விளக்கம் தருவது என் கடமையாகிறது
முதலில் ஒரு உண்மையை சொல்லிவிடுகிறேன் இந்த பெயர் எனக்கு நானே வைத்துகொண்ட பெயரோ அல்லது காரண பெயரோ அல்ல
நான் பிறந்த ஊரும் பாம்பே அல்ல கொஞ்ச நாட்கள் அங்கே வசித்து இருக்கிறேன் அவ்வளவுதான் நானும் சென்னை வாசிதான் இன்னும் சொல்லப்போனால் மன்னார்குடி கண்ணன் என்றோ அல்லது நாகை கண்ணன் என்றோ பெயர் மிக பொருத்தமாக இருந்திருக்கும்
சென்ட்ரல் வங்கியில் வேலை பார்த்து கொண்டிருந்த எனக்கு PROMOTION என்ற பேய் பயங்கரமாக அறைய நான் சென்று விழுந்த ஊர் பம்பாய் அதற்கு முன்னால் சுமார் 7 வருடங்கள் திரு YGP அவர்களின் குழுவில் சிறிய வேடத்தில் துவங்கி சற்றே பெரிய வேடம் வரை வந்திருந்த நான் தொலை காட்சியிலும் வானொலியிலும் கொஞ்சம் பிரபலம்
1977 வருடம் நான் அந்த குழுவிலிருந்து விலகி நாடகம் எதுவும் நடிக்காமல் இருந்தேன் அப்போதுதான் BANK OF INDIA சீனா தயாரித்த வெங்கட் எழுதிய யாமிருக்க பயமேன் என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது அருளியவர் சீனா அந்த நாடகத்தை பற்றி வீ எஸ்வீ அவர்கள் விமர்சனத்தில் பாம்பே கண்ணான் நடிப்பில் நல்ல வேகம் தெரிகிறது என்று குறிப்பிட்டிருந்தார்
எதோ சில காரணங்களுக்காக அந்த நாடகம் 20 காட்சிகளையே தொட்டது இந்த நேரத்தில் தான் எனக்கு பதவி உயர்வு மாற்றலோடு வந்து சேரவே போதும் இந்த கலைப்பணி இனி சென்னை திரும்பி வந்தால் ஒரு AGM/DGM ஆக திரும்பி வருவது என முடிவு செய்து கையிலிருந்த ஸ்கிரிப்ட்களை எல்லாம் ( நான் அப்போதே நாடகம் தொலைகாட்சிக்கு எழுத துவங்கி இருந்தேன்அதை பற்றி பின்னல் எழுதுகிறேன்) எடுத்து ஒரு பரணில் அடுக்கிவிட்டு bank சம்மந்தப்பட்ட புத்தகங்களாக எடுத்து கொண்டு பம்பாய் செல்ல தீர்மானித்தேன்
இந்த நேரத்தில் விதி என்னைப்பார்த்து சிரித்தது எனக்குக் தெரியாது
எதோ ஒரு கதையில் வரூமாமே எங்கு போனால் ஒருவன் சாவிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறானோ அங்குதான் அவனுக்கு விதி காத்திருக்கிறது என்று எமன் சொல்வாராமே அப்படித்தான் பாம்பே சென்றேன நான்
முதலில் பம்பாயில் பார்த்தது லிப்டில் கூட புட்போர்டில் தொங்கிக்கொண்டு செல்லும் கூட்டம்
SUN THEATRE ல் புதுப்படமாக பார்த்து கொண்டிருந்த நான் அங்கு சக்ரதாரிக்கு கூட அட்வான்ஸ் BOOKING செய்ய வேண்டி இருந்தது சரி அந்த நிகழ்வுகளை அப்புறம் பார்ப்போம் இப்பொது முதலில் பெயருக்கு வருவோம்
வருடா வருடம் 40 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு சென்னை விஜயம்
என்னதான் நாடகம் வேண்டாமென்று நினைத்தாலும் நாடக நண்பர்களையும் நாடகங்களையும் பார்க்கும் ஆசை விட்டு விடுமா
இன்றும் என் மனைவி சொல்லி காடடும் ஒரு விஷயம்
ஒவ்வோறு வருடமும் 40 நாட்கள் சென்னை வருவதற்கு பதிலாக 10 நாட்கள் ஊர் சுற்றி இருந்தால் கூட மகாராஷ்டிரா முழுக்க பார்த்திருக்கலாம் என்பதுதான்
இப்போது LFC இல்லாமல் சொந்த செலவில் அஜந்தா எல்லோரா கோல்ஹாபூர் என்று மனைவியை அழைத்துக்கொண்டு போய் வருகிரேன்
வருடா வருடம் சென்னை போகும்போதெல்லாம் நான் கண்ணன் வந்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் போன் செய்து குறிப்பாக பம்பாயிலிருந்து என்று சொல்லுவேன் எல்லோரும் பம்பாயிலிருந்து வந்திருக்கும் கண்ணனை பார்க்க பேச ஒஎறு குடுவோம் அல்லது பம்பாயிலிருந்து வந்திருக்கும் கண்ணன் எல்லோரையும் பார்க்க விடு விடாக அலைவான்
நடுவில் சில பக்கங்களை மறந்தவிட்டு ஒரு 7 வருடம் தாண்டி விடுவோம்
1985 ள் நான் சென்னைக்கு மாற்றல் வாங்கிகொண்டு வந்து விட்டேன் அந்த வருடம் சீனா மிண்டும் யாமிருக்க பயமேன் நாடகம் போடுவதாக அறிவித்து என்னை நடிக்க வைத்தார்
அந்த நாடகம் அரங்கேறறமான அன்று காலையில் ஒரே அதிர்ச்சி ஹிந்து பேப்பரில் என் பெயர் பாம்பே கண்ணன் நடிக்கும் என்று வந்திருந்தது
அந்த நேரத்தில் சென்னை குழுக்களில் பல கண்ணண்கள் குறிப்பாக பவித்ராலயா கண்ணன் கவர்ச்சி வில்லன் கண்ணன் செந்தாமரை கண்ணன மேக்கப் கண்ணன் எழுத்தாளர் வேதம் கண்ணன் என்று பலர் புழங்கிகொண்டிருந்ததால் இந்த பெயரில் அழைக்க பட்டேன் அவ்வளவுதான்
இருந்தும் எனக்கு என்னவோ கூச்சமாக இருந்தது இப்போது பழகிய அளவிற்கு அப்போத அந்த பெயர் எனக்குள் ஒட்டவில்லை அதனால் சில மாதங்கள் வரை நான் என்னை கண்ணன் என்று மட்டுமே சொல்லிக்கொண்டேன் ஒரு விசிடிங் கார்டு கூட அடித்து கொள்ளவில்லை மேலும் வங்கியில் வேறு பொறுப்பான பதவியில் இருந்ததால் இந்த பெயர் எனக்கு அவ்வளவாக பயன் படவில்லை
இருந்தும் அடுத்தடுத்த நாடகங்களான அமிர்தம் கோபாலின் குழவில் நான் பாம்பே கண்ணன் என்றே அறியப்பட்டேன் சபாக்களில் நான் எதோ புது பிறவி எடுத்து வந்த பம்பாய் பிறவியாக பார்க்கப்பட்டேன் இங்கிருந்து போன அதே பழைய கண்ணன் தான் என்பது பலருக்கு அப்போது தெரியவில்லை
போவதற்கு முன் போய் வந்தபின் என்று என் நாடக வாழ்கையை இரண்டு பிரிவுகளாகக் பிரிக்கலம்
ஒரு கட்டத்திற்கு மேல் விட்டில் உறவினர்களுக்கு தொலைபேசினால் கூட பாம்பே கண்ணன் என்றே சொல்ல வேண்டிய நிலைமை வந்த பின்தான் விசிடிங் கார்டு அடித்தேன்
அதன் பிறகு பாம்பே என்னுடன் நிலையாக ஒட்டிக்கொண்டு விட்டது ஆனால் பம்பாயில் இருந்தபோது பாம்பே எனக்கு விருப்பமில்லாமல் போனது அதற்கு பரிகாரமாக இப்போது நான் என் பெயரை I LOVE BOMBAY என்று சொல்லிக்கொள்கிறேன் இன்னொன்றும் சொல்லிக்கொள்கிறேன்
I MISS YOU BOMBAY
பம்பாயின் பெயர் மும்பை ஆனபிறகு மும்பை கண்ணன் என்று பெயர் மாற்றம் செய்யவில்லையா என பலர் கேட்கின்றனர்
ஏன் மறைந்த மேதை பின்னணி பாடகர் PBS அவர்கள் என்னை DRVE IN WOODLANDS ல் சந்தித்த போதெல்லாம் மும்பை கண்ணன் என்றே அழைப்பார் ஒரு வாழ்த்துப்பா கூட எழுதி கொடுத்திருக்கிறார்
பெயர் எப்போது மாறும் என்று கேட்டால் என் ஒரே பதில் எப்போது மைசூர் பாக் பெயர் மாறுகிறதோ எப்போது பாம்பே ஹலவா பெயர் மாறுகிறதோ எப்போது CALCUTTA ரசகுல்லா பெயர் மாறுகிறதோ எப்போது மங்களூர் போண்டா பெயர் மாறுகிறதோ அப்போதுதான்
சரிதானே
இப்போது பெயர் ரகசியம் புரிந்து விட்டது அல்லவா
நான் சூட்டிக்கொண்ட பெயர் அல்ல
எனது BAMBAY ஐ எப்போது நினைவு கூறுவதற்காக இறைவன் எனக்கு அளித்த வரம்
இருந்தும் இந்த பெயரை எனக்கு அளித்த சீனாவுக்கு நன்றி!!!