Thursday, November 5, 2015



அமரர் கல்கி அவர்கள் தனது பொன்னியின் செல்வன் புதினத்தில் பல பாடல்களை அந்தந்த காட்சிகளின் தேவைகேற்ப இணைத்திருப்பார்
இந்த பாடல்களை கதாமாந்தர்கள் இசையுடன் பாடியதாகவும் அவரது நாவலின் குறிபிடப்பட்டுள்ளது.
இந்த நாவலைப் படிக்கும் பொது அந்தப் பாடல் வரிகளை நாம் இசையுடன் பாடிக்கொண்டே படித்திருக்க மாட்டோம் என்பது உண்மை
பலர் அந்த பாடல் வரிகளை படிக்காமலேயே அடுத்த பத்திக்கு சென்றிருப்பார்கள். ஆனால் ஒலிப்புத்தகங்களின் நிலைமை அப்படி அல்ல.
வசனங்களும் வர்ணனைகளும் ஒலி வடிவில் இடம் பெறும் போது
பாடல்களும் காட்சிக்கேற்ப இசை வடிவில் இடம் பெற வேண்டும் அல்லவா...?
ஆகையால் அவர் குறிப்பிட்டிருந்த எல்லா பாடல்களையும் இசை அமைத்து பாடகர்களை கொண்டு பாட வைத்து அந்தந்த பகுதியில் இணைத் திருக்கிறோம்.
தற்போது அந்த புதினத்தில் இடம் பெற்ற சில’ பாடல்களை மட்டும் ஒரு தனி ஒலித்தகடாக கொண்டு வர விருப்பப்பட்டு,பாடல் இடம் பெற்ற அத்தியாயம், எந்த காட்சியில் பாடப் பெற்றது என்ற விவரங்களுடனும் வெளியிடுகிறோம் பாடல்களுக்கு முன்னும் பின்னும் இடம் பெறும் காட்சி வர்ணனைகள் பாடல்களுக்கு இன்னும் சுவை ஊட்டுகின்றன.
கேட்டு ரசித்து மகிழுங்கள்.
விரைவில் உங்கள் கைகளில்

No comments:

Post a Comment