Saturday, October 31, 2015

சென்னை தொலைகாட்சி நிலையம் (தூர்தர்ஷன் சென்னை) நாற்பது ஆண்டு காலம் நிறைவு செய்கிறது அழைப்பிதழ் வந்தும் சென்னையில் இல்லாத காரனத்தால் செல்ல முடியவில்லை எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமை இந்த நிலையில் உண்டு
தொலை காட்சி நிலையம் தொடங்கிய முதல் நாள் நிகழ்சிகளில் (15 ஆகஸ்ட் 1975)இடம்பெற்ற நாடகத்தில் அடியேனும் பங்கு பெற வாய்ப்பு கிட்டியது
"வாலிபம் திரும்பினால்"என்ற அந்த நாடகத்தை வெங்கட் எழுதினார்
திரு YGP அவர்களின் UAA குழு பங்குபெற்ற அதில் திருவளர்கள் YGP, ARS,YG மகேந்திரன் சேது
SR சிவகாமி ஆகியோருடன் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது இன்றளவும் மிகவும் பெருமையாக இருக்கின்றது
இந்த நாடகத்தை என்னை முதன் முதலாக மேடை ஏற்றிய திரு TS NARAYANASAMI (ETHIROLI நாராயணசாமி என்று தொலை காட்சியில் அக்காலத்தில் புகழ் பெற்றவர்) தயாரித்திருந்தார்
எனக்கும் இது தொலைகாட்சி நடிப்பிற்கு நாற்பதாவது ஆண்டுதானே தானே
இந்த நாடகம் தொலை காட்சியின் ARCHIVEல் இருக்குமா என தெரியவில்லை
வாழ்த்துக்கள் தூர்தர்ஷன்!!!! பொன்விழா காணப்போகும் உங்களுக்கு
அந்த பொன்னான காலம் மீண்டும் வருமா என ஏங்குகிறேன்

No comments:

Post a Comment