Wednesday, August 17, 2016

எங்களது ஒலிப்புத்தகங்கள் பற்றி ஒரு விண்ணப்பம் இருமுறை எழுதியிருந்தேன் அதற்கு நணபர் ஒருவரின் பதில் இது
சார், நீங்க சொன்ன பயணாளிகள் வரிசையில நான் முதலிடத்திலுள்ளேன். ிதுவரை நாம் சந்தித்ததில்லை, ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை. ஆநால், பேராசிரியர் திவாகர் சாரும், ஞானகுரு சாரும் தங்களை அறிமுகப்படுத்தினார்கள். திவாகர் சாரின் உதவியால், நீங்க பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியிட்ட அன்றே என்னால் ஒலிப்புத்தகத்தை வாங்கி கேட்க முடிந்தது. ஆங்கிலத்தில, "got the money's worth" என ஒரு வாக்கியம...ுண்டு. ஆனால், நான் புத்தகத்தை வாங்க கொடுத்த 200 ரூபாய்க்கு நூறு மடங்கு அதிக பலனை அனுபவித்ததாய் உணர்கிறேன். அறிவுக்கு விலை மதிப்புண்டோ. hats of to you. அதைவிட முக்கியம், எனக்கு வந்த பிறந்தநாள் பரிசுகளில், 2014 ஆமாண்டு பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தை எனது பேராசிரியர் வாங்கி பரிசளித்தார். அதன் மதிப்பு அப்போதைக்கு புரியவில்லை, தற்போது மூன்றாவது முறையாய் பொன்னியின் செல்வனை கேட்டுவரும்போது தான் தெளிவானது. நான் ஒரு புத்தக பைத்தியம்.. தமிழில் கேட்க போதய ொலிப்புத்தகங்களில்லை, அதைவிட பிறர் வாசித்துக்கேட்பதில் அவ்வளவு பயனும் கிடைப்பதில்லை. உங்களோட இந்த முயற்சியின் பலனென்ன என்பது, நானறிந்தவரையில் இன்னும் உங்களால் கூட கணிக்க இயலாதென்றே நினைக்கிறேன். ஆங்கில புத்தகங்களில் மூழ்கியிருந்த என்னைப்போன்றோரை, தமிழின்பால் தள்ளிவிட்டது உங்களுடைய பொன்னியின் செல்வன் மற்றும் பார்த்திபன் கனவு. பொன்னியின் செல்வன் போன்ற தலைசிறந்த படைப்பை, உங்களோட ஒலிப்புத்தகமில்லன்னா என்னால படிச்சிருக்கவே முடியாது. நான் தற்போது indian administrative service (IAS) தேர்வு பயிற்சியிலிருக்கிறேன். நான் வெற்றிபெரும் பட்சத்தில், கல்யான்ஜீயின் குறலே எனது மானசீக குரு. அனிருத்த பிரம்மராயர் நான் அதிகம் விரும்பும் கதா பாத்திரம். குறிப்பாய், மூன்றாம் பாகம் அத்தியாயம் 26, 27 மற்றும் 28 நான் அடிக்கடி கேட்கக்கூடியவை. சுந்தர சோழர் மற்றும் சிவனடியாருக்கான குறல் என்னைப்பொருத்தளவில் "A legendary voice." உங்கள் சார்பில் நானும், அனைவரையும் இந்த ஒலிப்புத்தகங்களை வாங்கி கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி Bala Nagendran

No comments:

Post a Comment