Monday, August 25, 2014

இப்போதெல்லாம் நிறைய பேர்கள் எழுத்தாளர் சுஜாதாவை பற்றி அடிக்கடி எழுதுவதை பார்க்கிறேன். ஆகையால் என் பங்கிற்கு என் அநுபவத்தை நானும் பகிர்ந்து கொள்ளலாம் என ஆசைப்பட்டு........இதோ
சுஜாதா அவர்களின் இறுதிகாலத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது அவருடைய கதை ஒன்றை Home Vedio என சொல்லப்படும் VCD/dvd க்காக பிரத்யேகமாக தயாரிக்கும் முயற்சியில் அவரை சந்தித்து பேசினேன்... என்ன கதை என்று முடிவு செய்யவில்லை... நாலைந்து கதைகளை குறிப்பிட்டேன்... ஒரு வாரம் கழித்து பேசுவதாக சொல்லிவிட்டு அனுப்பிவிட்டார்!! ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவரை சந்தித்தபோது இந்தDVD/VCD மார்க்கெட் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி எனக்கு என்ன நஷ்டம் வரலாம் என்றும் எத்தனை பேர் வாங்கலாம் என்றும் மொத்த statistics கொடுத்து என் ஆர்வத்திற்காக அனுமதி வழங்கினார் ஒரு வாரத்திற்குள் என்ன home work!!! என்று ஆச்சரியமும் ஆனந்தமும் பட்டுக்கொண்டே விடு திரும்பினேன்... நாங்கள் தேர்ந்தெடுத்த கதை அவருடைய சிறுகதை "வாசல்".... "மாமா விஜயம்" என்ற தலைப்பில் டெல்லி கணேஷ் நடிக்க வெளிவந்தது.... அதான் சுஜாதா... இவர் நாடகம் எழுத முதன் முதலில் வந்தபோது 3 மாதம் சென்னையில் தங்கி எல்லா தமிழ் நாடகங்களையும் பார்த்துவிட்டு மக்களின் நாடியை நன்கு புரிந்து கொண்டு பின்னர் தான் பூர்ணம்சாருக்கு எழுதினார் என்றும் கேள்விப்படுகிறேன் இதை நாடக எழுத்தாளர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் நமக்கு புரியும்படி நாடகம் போடுவதை விட மக்களுக்கு புரியும்படி நாடகம் போடுவது மிகவும் முக்கியம் நமக்கு பிடித்தபடி நாடகம் போடுவதை விட அவர்களுக்கு பிடித்தபடி நாடகம் போடுவது மிகவும் முக்கியம் நமக்கு plane ஓட்ட தெறியுமென்றால் பார்வையாளர்கள் எல்லோருக்கும் விமானம் மற்றும் அதன் செயல்பாடு நன்கு தெரியும் என்று நினைத்துக்கொள்வது விபரிதம்.. இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் பார்வையாளர்களை அடிமுட்டாள்கள் என்று எண்ணி விடுகிறார்கள் அது இதைவிட அபாயம்...... இன்னும்......

No comments:

Post a Comment