Saturday, August 23, 2014

ஒலிப்புத்தகத்தில் நடிப்பது பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.. குறிப்பாக என்னுடைய ஒலிப்புத்தகம்... வானொலியில் நடிப்பதற்கும் இதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு.. வானொலியில் நாடகத்தில் ஒரு வசனம் முடிந்தவுடன் உங்கள் வசனம் ஆரம்பித்தால் அந்த வசனத்தின் உணர்வுக்கும் காட்சி அமைப்பிற்கும் ஏற்ப நீங்கள் பேசினால் போதுமானது.. ஏற்ற இறக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மை, காட்சி அமைப்பிற்கு ஏற்ப modulation mood அமையுமானால் காடசியும் சிறப்பாக அமையும். அங்கே ஒரு தொடர்ச்சியான conversation அமைகிறது.. ஆனால் என் ஒலிப்புத்தகத்தில் கதை சொல்லி என்று ஒரு குரல் உள்ளது இவர் அவ்வப்போது வசனங்களுக்கு இடையே குறுக்கிடுவார் இவர் யாருமல்ல கதை ஆசிரியர் தான் இதானால் உங்கள் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது.. மீண்டும் வசனம் வரும்போது உங்கள் கவனம் வசனம் விடப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும் அங்கிருந்து தொடர்ந்து வர வேண்டும்.. இது படிப்பதாற்கு எதோ மிகவும் எளிமையாக தோன்றலாம் ஆனால் நாடகத்தில் மிக அனுபவமுள்ள நடிகர்களே கொஞ்சம் பழகும் வரை தினறியதைப் பார்த்த அநுபவத்தை தான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இந்த மாதிரி ஒலிப்புத்தகங்களில் ஒரு சிறு சௌகரியமும் உள்ளது.. நீங்கள் என்ன உணர்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதை யாரும் சொல்லித்தராமலேயே நீங்கள் கதையை படிக்கும்போதே தெரிந்து கொண்டு விடலாம் ஏனென்றால் அந்த ஆசிரியர் வசனம் எப்படி பேசப்படவேண்டும் என்பதை எழுதியிருப்பார் (கோபமாக கூறினான் சிரித்துக்கொண்டே பேசினான் போன்றவை) எதோ எனாக்கு தெரிந்தவரையில் என் அனுபவத்தை வைத்து எழுதிவிட்டேன் பிழையோ அல்லது முதிர்ச்சியோ இல்லஎன்றால் ப்ளீஸ் ignore

No comments:

Post a Comment