ஒலிப்புத்தகங்கள்
வெளியிட்டதும் பலர் ஒலிப்புத்தகம் என்றால் என்ன வென்று கேட்டார்கள்..
புத்தகத்திற்கு ஓலிவடிவம் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவைத்தேன்...
இருந்தாலும், இந்த முயற்சியிலே பலர் ஈடு பட்டு இருந்த்தால் நான் எப்படி
வேறுபடுகிறேன் என்று சொல்ல வேண்டி இருந்தது. சில ஒலிப்புத்த்கங்களில் ஒரே
குரலில் எந்தவிதமான உணர்சிகளும் இல்லாமல் படிக்கப்பட்டிருக்கும்... இதை
நான் முதலில் தவிர்க்க விரும்பினேன்.. ஒவ்வொரு
எழுத்தாளனும் தான எழுதும் ஒவ்வொரு வரியையும் எதோ ஒரு உணர்வை மனதிற்குள்
நினைத்துக்கொண்டு அல்லது நடித்துக்கொண்டுதான் எழுதுகிறான்.. அது அழுவதாக
இருக்கட்டும் பயமாக இருக்கட்டும் அவன் மனதிற்குள் நடிக்க வில்லை என்று
சொல்ல முடியாது!! அவன் கதாபத்திரங்கள் பேசும்போது அவன் உணர்ச்சிபொங்க
பேசிக்கொண்டே தான் எழுதுகிறான். அதை என் ஒலிப்புத்தகத்தில் நான்
கொண்டுவரவில்லை என்றால் நான் அந்த எழுத்தாளனுக்கு செய்யும் துரோகம்!!
ஒவ்வொரு வர்ணனைக்கும் ஒரு உணர்வு உண்டு...ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு உணர்வு
உண்டு... அதை ஒரே குரலில் படித்தால் சரியாக வருமா? ஆகையால் ஒவ்வொரு
கதப்பாத்திராமும் ஒவ்வொருகுரலில் இருக்க வேண்டும்.. கதை சொல்லி.... ஒரு
குரல். அது கிட்டத்தட்ட அந்த எழுத்தாளரின் குரல் அதற்கு தனியாக
ஒருவர்...அப்புறம் கதை களம்...... அது நடக்குமஇடத்தை அவர்
வர்ணித்துவிட்டார்...என்ன நடக்கிறது என்றும் சொல்லிவிட்டார் படிக்கும்
நீங்களும் கற்பனையில் இடத்தையும் நிகழ்வுகளையும் புரிந்து கொண்டு
விட்டிர்கள் ஆனால்கேட்கும் போது...!!!! நான் மழை பெய்து கொண்டிருந்தது
என்று சொன்னால் உங்களுக்கு அது போதுமாட னதாக இருக்குமா? நீங்கள் மழையை
பார்க்கவேண்டும்... அல்லது கேட்கவேண்டு அப்போதுதான் உங்கள் மனம்
கதையில் ஈடுபடும்.... இதற்காகத்தான் சிறப்பு சப்தங்களான இடி மழை புயல் நாய்
நரி பூனை கடல் அருவி சப்தங்கள் இதைதவிர நாம் எந்த ஒரு கற்பனையையும்
இசையோடு இணைத்தே பழகிவிட்டோம் இசை உங்கள் உணர்வுகளை
மிகைப்படுத்துகிறது........ இப்படி உருவாவதுதான் ஒலிப்புத்தகம்....... இது
வானொலி நாடகம் போலத்தானே என்று சொல்வார்கள்.... உண்மைதான்..... ஆனால் அந்த
நடிப்பிற்கும் ஒளிப்ப்புத்தக நடிப்பிற்கும் கூட ஒரு சின்ன வித்தியாசம்
உண்டு........ அது அடுத்து..........
No comments:
Post a Comment