Wednesday, September 24, 2014



நாடக அனுபவங்கள்
பகுதி 11


1991 ம் வருடம் டிசம்பர் மாதம் கோலாரில் எனது இரு வீடு ஒரு வாசல் நாடகம்
நான் நாடகக்காரன் என்ற பெயரில் சென்னையில் நாடக குழு துவங்கி முதல் நாடகம்
ஏற்கனவே கோலாரில் நடந்த பல நாடகங்களில் வேறு குழுவில் நான் பங்கு கொண்டிருந்தததால் எனக்கு மிக சுலபமாக இந்த வாய்ப்பு கிடைத்தது
அருமையான ரசிகர்கள் கோலார் தங்க வயலில் பணி புரியும் தமிழர்கள்
நல்ல விஷயங்களை மிகச் சிறப்பாக ரசிப்பார்கள் ஆகையால் இந்த நாடகத்திற்கு நான் மிகவும் எதிர் பார்ப்புடன் காத்திருந்தேன்.
கோலார் செல்ல வான் ஏற்பாடு செய்திருந்தேன் இரவு புறப்படட்டு காலை கோலார் சேர வேண்டியது மாலையில் நாடகம் முடிந்து இரவு புறப்பட்டு சென்னை வரவேண்டியது என ஏற்பாடு
புறப்பட வேண்டிய நாளன்று மலை VAN தயாராக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அரங்க அமைப்பிற்கான படுதாக்களை ஏற்றிவிட்டு விளக்குகளை ஏற்றிவிட்டு எல்லா கலைஞ்ர்களையும் தயார் நிலையில் வைத்து விட்டு நானும் என் குழுவை சேர்ந்த நடராஜனும் வீடு வந்து சேர்ந்தோம் விட்டிற்குள் நுழையும் போதே எதோ ஒரு வித்தியாசமான அமைதியும் சலனமும் தென்பட்டது
தாம்பரத்தில் இருந்த என் மாமா கார் வாசலில் நின்றது என்ன இந்த வேளையில் என நினைத்துக்கொண்டு மெல்ல மாடி ஏறினேன்
இரவு மணி 8
ஹாலில் என் மனைவி என் அண்ணன் எல்லாரும் இருந்தார்கள் உள்ளே படுக்கை அறையில் என் தந்தை படுத்திருந்தார்.... அருகில் டாக்டர்......
என் தந்தை இப்படி அடிக்கடி படுத்திருந்து பின் எழுந்திருப்பது அவருடைய 4௦ வருட சக்கரை வாழ்க்கையில் சகஜம் என்பதால் எனக்கு முதலில் பெரிதாக ஏதும் தோன்றவில்லை
என்ன என்று கேட்டேன் அப்பாவுக்கு HEART அட்டாக் என்றார்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது டாக்டர் வெளியே வந்தார் சினிமா டாக்டர் போல கனாடியை கழட்டுவார் என எதிர்பார்த்தேன்
“ரொம்ப சீரியஸ்” MATTER OF FEW HOURS OR DAYS என்றார் FEW HOURS என்று சொல்லாமல் இருந்தால் கூட நிம்மதி அடைந்து இருப்பேன் அப்பாவுக்கு அப்ப்போது 8௦ வயது
டாக்டர் HOSPITAL வேண்டாம் LETHIM GO PEACEFULLY என்று சொன்னார் எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம் டாக்டர் போனபிறகு யோசித்தோம்
HOSPITAL என்ற முடிவுக்கு வந்தார்கள் என் அண்ணனும் மாமாவும்
BSS HOSPITAL என முடிவுசெய்து AMBULANCE க்கு அழைப்பு விடுத்தோம்
இரவு மணி 9
என் குழு நடராஜனிடம் சொல்லி காத்திருக்கும் எல்லோருக்கும் தகவல் சொல்ல சொன்னேன் PROGRAMME CANCELLED என்று மட்டும் சொல்ல வில்லை கொஞ்சம் தாமதமாக புறப்படுவோம் என்று சொல்லி வைத்தேன்
AMBULANCE வந்தது
BSS ஆஸ்பத்திரி
எல்லா பரிசோதனைகளும் நடந்தன
இரவு மணி 1௦ அங்கிருந்த
DUTY டாக்டரிடம் சென்று என் நிலைமையை எடுத்து சொல்லி போகலாமா என PERMISSION கேட்டேன் என்னை எதோ கேவலமான ஜந்துவைப் பார்பதுபோல பார்த்துவிட்டு “எப்படி இந்த கேள்வியை கேட்கிறிர்கள்?
NO WAY இன்னிக்கு ராத்திரி யாருமே எங்கியும் போகமுடியாது
யு YOU KNOW HIS CONDITION HE IS VERY சீரியஸ் போய் சொந்தக்கரங்களுக்கு தகவல் சொல்லுங்க” என்றார்
சரி இதான் விதி போலும் என நொந்துகொண்டே அக்காக வீட்டிற்கு KK நகர் புறப்பட்டேன்
எனது குழு நடிகற்களுக்கு சொல்லிவிட்டு விட்டிற்கு போகச்சொன்னேன் அப்போது CELLPHONE இல்லாத காலம் வேறு
இரவு மணி 12
எல்லோரும் HOSPITAL ICU வெளியே காத்திருக்கிறோம் நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் இன்னும் கோலாருக்கு தகவல் சொல்ல வில்லை
ஒரு நப்பாசைதான் எதாவது அதிசயம் நடந்து டாக்டர் போய் வா என்று சொல்ல மாட்டாறான்னுதான்
ஆனால் அப்ப்படி எதுவும் நடக்கவில்லை
குழு அங்கத்தினர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வருமென வேரு சொல்லிவைத்தேன் நடராஜன் “நீ வரவில்லை என்றால் பரவாயில்லை நாங்கள் போய் நாடகம் நடத்திவிட்டு வருகிறோம்” என்று நிலைமை தெரியாமல் உளறினான்
இரவு மணி 2
நேராக என் அன்னையிடம் சென்றேன் எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சொன்னேன் இது புதிதாக குழு ஆரம்பித்திருக்கும் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு இதைத் தவறவிட்டால் மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது என எடுத்து சொன்னேன் என்ன செய்யலாம் என்று ஆலோனை கேட்டேன்
போய் வா என்றாள் பெருமாள் மேல் பாரத்தை போட்டுவிட்டு போய்வா என்றாள் அந்த வீரத்தாய் அன்று எனக்கு என் தந்தையை விட நாடகம் பெரிதாக இருந்தது அம்மாவே அனுமதி கொடுத்து விட்டாள் என எனக்கு நானே சமாதனம் சொல்லிக்கொண்டேன் எல்லோருக்கும் தகவல் சொல்லி புறப்படுகிறோம் என்றேன்
மணி 3
VAN ஏறிவிட்டோம்
மறுபடியும் படுதாக்கள் விளக்குகள் ஏற்ற தாமதம் ஆனது
சென்னை விட்டு புறப்படும்போது கலை மணி 4
சென்னை தாண்டும்போது நான் செய்தது சரிதானா மிண்டும் என் தந்தையை பார்ப்பேனா எதாவது ஒன்று அசம்பாவிதமாக நடக்குமானால் என் நிலைமை என்ன என்ற எண்ணங்களை தடுக்க முடியவில்லை சிறிது நேரத்தில் மனம் நாடகத்தில் செல்ல எண்ணங்கள் மாற அசதியில் சற்றே கண்ணயர்ந்தேன் எப்படியும் 7 மணி நேரத்தில் போய்விடலாமே
பயணம் தமிழ்நாடு கர்நாடக எல்லைப்பகுதியில் வண்டிக்கு கட்ட வேண்டிய வரி காரணமாக தடைபட்டது இரண்டு மணி நேரம் கடந்தது
மதியம் 2 மணி சுமாருக்கு மதிய உணவு அருந்தினோம்
அப்போது mobile போன் இல்லாததால் தொடர்பு கொள்வது கடினம்
இருந்தால் அன்று நான் தொடர்பு கொண்டிருப்பேனா தெர்யாது
எப்படியும் 4 மணிக்கெல்லாம் போய் விடலாமென்ற எண்ணத்தில் பயணம் தொடர்ந்தோம்
ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே
அதற்கு இந்த வேனை விட வேகம் அதிகம்
VAN டிரைவர் HIGHWAYலிருந்து திரும்பும் இடத்தில் கோலார் தங்க வயலுக்கு பதிலாக கோலாருக்கோ வேறு எதற்கோ திரும்பிவிட சுற்றி சுற்றித் வருகிறோம் தங்க வயல் மட்டும் காணவில்லை மறுபடியும் பரமபதம்போல புறப்பட்ட இடத்திற்கே வந்து சரியான பாதையில் பயணித்தோம்
KGF ல் நாங்கள் நாடகம் போடும் அரங்கிற்கு நேராக சென்றபோது மணி 6
வாசலில்..........
இன்றைய நாடகம் ரத்து என்ற அறிவிப்பு எங்களை வரவேற்றது
உடனடியாக அந்த காரியதரிசி செக்ல்வரஜை தொடர்பு கொண்டேன்
நீங்கள் மதியம் வரை வராததால் உங்கள் விட்டிற்கு போன் செய்தோம் உங்கள் தந்தை HOSPITAL லில் இருப்பதாக செய்தி வந்தது அதனால் ரத்து செய்தோம் நீங்கள் போன் செய்து இருக்கலாமே என்றார்
TENSION என்றேன்
மனதிற்குள்......
போன் செய்தால் அப்பா நிலைமை இப்படி இருக்கும்போது வரவேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றுதான் போன் செய்யவில்லை என்பதை எப்படி சொல்வது என நினைத்துக்கொண்டேன்
சார் இப்போ வந்து விட்டோம் என்ன செய்வது?
மணி 6 1௦ ஏழு மணிக்குள் ரெடியாக முடியுமா என்றார்
ஒப்புக்கொண்டு எங்கள் தொழில் நுட்ப கலைஞர்களை நோக்கினேன்
தயார் என்றார்கள் அரை மணியில் SET ம் LIGHT ம் ரெடி
இந்த நேரத்தில் செல்வராஜ் எங்களைவிட வேகமாக இயங்கினார் அங்கத்தினர்கள் எல்லோருக்கும் போன் செய்து நாடகம் உண்டு என்று அறிவித்து விட்டார்
நாங்களும் அரை மணி நேரத்தில் மேடை தயார் செய்து விட்டோம் பார்வையாளர்களும் வந்து விட்டார்கள்
அரங்கம் நிறைந்து இருந்ததது
என் வாழ்வில் அந்த மாதிரி ஒரு ரசிகர்களை நான் சந்த்தித்ததே இல்லை ஒவ்வொரு பகுதியையும் அணு அணுவாக ரசித்தார்கள்
நாடகமுடிவில் நடிகர்களை அறிமுகப் படுத்தும்போது STANDING OVATION ல் அரங்கம் அதிர்ந்தது
என் மனம் ஒரு புறம் சந்தோஷத்தில் மிதக்கும் போது மறுபக்கம் தந்தையின் நிலைமை நாடகம் முடிந்தவுடன் வந்து குத்தியது கண்களில் கண்ணிற் பெருக்கெடுத்து ஓட முயற்சிக்க அரும்பாடுபட்டு மறைத்துக்கொண்டு சென்னை திரும்ப VAN ஏறினோம் அதுவரைவரையில் நாடகம் மட்டுமே கவனத்தில் இருந்த எனக்கு இப்போது HOSPITAL, அம்மா, வீடு எல்லாம் நினைவிற்கு வந்தன
VAN ல் ஒரு முலையில் உட்கார்தவன் இரண்டு நாள் துக்கம் இல்லாததால் அயர ஆரம்பித்தேன்
எனக்கு பக்கத்து இருக்கையில் FEROZE
அவருக்கு அருகே நடராஜன்
கோலார் தங்க வயலை விட்டு வெளியே வருவதற்கு மறுபடியும் கஷ்டப்பட்டு வழிகண்டுபிடித்து ஒரு வழியாக நெடுஞ்சாலை அடைந்தபோது மணி காலை 3
ஓட்டுநர் டி சாப்பிடலாமென வண்டியை ஓரம்கட்டினார்
எல்லோஐம் இறங்கினர் நான் எழுந்திருக்கவில்லை
வண்டி காலை 6 மணி சுமாருக்கு பூந்தமல்லி அருகே வந்தபோது நான் கண் விழித்தேன் பக்கத்து இருக்கை காலியாக இருக்கவே feroze முன்பக்கம் எங்கேயாவது அமர்ந்திருக்கிறாரா என்று பார்த்த்தேன்
காணவில்லை
எங்கேடா feroze என்று நான் கேட்க எல்லோரும் அப்போதுதான் விழித்துக்கொண்டு முழி பிதுங்க தெரிய வில்லை என்றனர்
ஓட்டுனர் ஒருவேளை டி குடித்த இடத்தில் ஏற வில்லையோ என தனது சந்தேகத்தை கூறினார் யாருமே செக் பண்ண வில்லையா எனக் கடிந்து கொண்டு வண்டியை மீண்டும் கோலாரை நோக்கி திருப்புவது என யோசித்தோம் அப்போது என் குழுவின் கதாநாயகன் சுந்தர் ராமன் திரும்பி எங்கே எவ்வளவு துரம் போவது என ஒரு LOGICAL கேள்வியை எழுப்பினான் FEROZE ன் பை இருக்கிறதா என்று பார்த்தோம் இருந்ததது பையில் அவர் PURSE இருக்கிறதா என்று பார்த்தோம் இல்லை அவர் முன் ஜாக்கிரதையாகவோ இல்லை எதோ ஒரு காரணத்தினாலோ பணம் எடுத்து சென்றிருக்கிறார் ஆகையால் அவரிடம் பணம் இருக்கிறது எப்படியும் வந்து விடுவார் என்று கணக்கு போட்டு சென்னை நோக்கி புறப்பட்டோம் சென்னை அடைந்தவுடன் feroze விட்டிற்கு போன் போட்டு காலதாமதமாக வந்து விடுவார் என்ற தகவலை சொல்லிவிடலாமென தீர்மானித்து போன் செய்தேன் அவர் மனைவி எடுத்தார்
FEROZE என்று நான் ஆரம்பிப்பதற்குள் அவர் இதோ தரேன் என்று போனை குடுக்க FEROZE LINE ல் வந்தார் FEROZE i am sorry என்று நான் ஆரம்பிப்பதற்குள் “பரவாயில்லிங்க நீங்க இன்னும் விட்டுக்குபோகலையா எனக்கேட்டுவிட்டு விவரம் சொன்னார்
டீக்கு இறங்கினவர் பாத்ரூம் போகவேண்டுமென அவர் வழக்கப்படி ஒரு கல்லை தேடி எடுக்க கொஞ்சம் சாலை விட்டு விலகி உள்ளே போக எதோ ஒரு மசுதியை வேறு பார்த்திருக்கிறார் ரெண்டு நிமிடம் காலதாமதமாக அவர் வெளியே வர VAN ஓட்டுனர் எல்லோரும் வந்துவிட்டதாக நினைத்து வண்டியை எடுக்க எல்லோரும் அசதி காரணமாக கண்ணயர்ந்து விட்டிருக்கிரார்கள்
சாலைக்கு வந்து பார்த்த feroze VAN புறப்பட்டு போவதைப்பார்த்து குரல் கொடுத்திருக்கிறார் யார் காதிலாவது விழுந்தால் தானே
பிறகு feroze கையில் காசு இருந்ததால் தைரியமடைந்து மஸூதிக்கு சென்று அமர்ந்து காலை பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்து முதல் bus பிடித்து எங்களை முந்திக்கொண்டு சென்னை அடைந்து இருக்கிறார்
அவர் முகத்தில் எப்படி விழிப்பேன் என பயந்து கொண்டு இருந்த என்னை வெகுவாக நிம்மதி பெருமுச்சு விட வைத்துவிட்டார் அவர்
அடுத்து அப்பா
நேராக விட்டிற்கு ஓடினேன் HOSPITAL அப்பா IMPROVING என்ற நல்ல செய்தியை என் மனைவி குடுத்து விட்டு FEROZE போன் பண்ணினார் என்றும் தெரிவிக்க.......
என்ன சொன்னார் என்று கேட்டேன்
நடுவழியிலே VAN ஐ MISSபண்ணிட்டாரமே சென்னை வந்தது விட்டுக்கு போன் பண்ணார் “சார் கவலைப்படுவார் நான் சௌக்கியமாக வீடு வந்து சேர்ந்து விட்டேன் என்றும் மட்டும் சொல்லிவிடுங்கள் அப்பா உடம்பு விஷயமாக ரொம்ப கவலையில் இருக்கிறார் என்னைப்பற்றி TENSION ஆக வேண்டாம்” என்றார்.
அவர் இடத்தில் வேறு ஒரு நடிகரை வைத்துப்பார்கிறேன்
அன்று மாலை DRIVE IN ல் அவர் கையை பிடித்துக்கொண்டு கண்கலங்கினேன் வார்த்தைகள் வரவில்லை
FEROZJI நீங்க ஒரு GENTLEMAN

No comments:

Post a Comment